சென்னையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். சென்னையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கன மழையும் கொட்டுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், பிற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னை சவுகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் அக்ரகாரம் பகுதியில் உள்ள பழமையான வீட்டின் முதல் தளம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது … Read more

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 11 வயது அறிவுஜீவி சிறுவனை 9-ம் வகுப்பில் சேர்க்க அனுமதி

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் யஸ்வர்தன் சிங். தற்போது 7-ம் வகுப்பு படிக்கும் இவன் அறிவுஜீவியாக திகழ்கிறான். லண்டனைச் சேர்ந்த ஹார்வர்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பு இவனை உலகின் இளம் வரலாற்று அறிஞர் என கூறுகிறது. இவனது அறிவுத் திறன் அளவு(ஐ.க்யூ) 129 என மதிப்பிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கும், யஸ்வர்தன் பயிற்சி எடுக்கிறான். இவன் கடந்த மாதம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தனது குடும்பத்தினருடன் … Read more

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் – வெளியுறவு துறை செயலர் வலியுறுத்தல்

நியூயார்க்: ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா பேசியதாவது: ஐ.நா. அமைதிப் படை தற்போது 12 நாடுகளில் அமைதி பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தியா சார்பில் சுமார் 5,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 9 நாடுகளில் முகாமிட்டு அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் ஓரணியில் திரளவேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து … Read more

தேயிலை தோட்டக்கழக நிலங்கள்: அமைச்சர் அளித்த விளக்கம்!

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் உள்ள 2152 ஹெக்டேர் பகுதியை திரும்பவும் வனத்துறைக்கே ஒப்படைப்பது குறித்து வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் நிர்வாக நலன் கருதி அந்தக் கழகத்தின் நிலங்களில் சில பகுதிகளை தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு வழங்கி சமீபத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டதை குறை கூறி முன்னாள் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டின் … Read more

ஒரே இரவில் கொட்டித் தீர்த்த பனிப் பொழிவு.. 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அமைந்துள்ள Denver நெடுஞ்சாலையில் ஒரே நாள் இரவில் 2.5 அங்குல அளவிற்கு பனிப் பொழிவு இருந்ததால் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கொட்டிக் கிடந்த பனிக்குவியலில் கார் சக்கரங்கள் சிக்கி வழுக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு பனிக்குவியலை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன Source link

8500 பக்க ஆவணங்களை மேளதாளத்துடன் மாட்டு,வண்டியில் கொண்டு சென்ற சமூக ஆர்வலர்

மத்தியப்பிரதேச மாநிலம் Shivpuri மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 8ஆயிரத்து 500 பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. Bairad Nagar பஞ்சாயத்தைச் சேர்ந்த Makhan Dhakad என்ற சமூக ஆர்வலர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பஞ்சாயத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான விவரங்களை தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் … Read more

நான் ராணி! திடீரென கவனம் ஈர்த்த மன்னர் சார்லஸ் மனைவி கமிலா… பின்னணியில் உள்ள பெரிய அர்த்தம்

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தை ஈர்த்த ராணி கமிலா. அதற்கு பின்னால் உள்ள சுவாரசியமான குறியீடு. மன்னர் சார்லஸின் மனைவி கமிலா, ஆடையுடன் இணைந்திருக்கும் விலையுயர்ந்த சிறிய வைர அணிகலனை சமீபத்தில் அணிந்தபடி பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதன் மூலம் கூறப்படும் குறியீடு குறித்து தகவல் கசிந்துள்ளது. பிரித்தானியாவின் மன்னர் பொறுப்பை சார்லஸ் ஏற்றுள்ள நிலையில் ராணி (Queen Consort) பொறுப்பு கமிலாவுக்கு வந்துள்ளார். நவம்பர் 2, 2022 அன்று டீம் ஜிபி டோக்கியோ … Read more

தமிழக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: தமிழக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும், தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் … Read more

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பு

டெல்லி: வடமாநிலங்களில் காற்று மாசு தரக்குறியீடு அளவு, மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நொய்டாவில் (உ.பி) 539, குருகிராமில் (ஹரியானா) 478, தீர்பூரில் 534, டெல்லியில் 431 ஆக காற்று மாசு தரக்குறியீடு அளவு உள்ளது. டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கூறுகையில்; … Read more