கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக இன்று 350 சிறப்பு பேருந்துகள் வரை இயக்கப்படும் என போக்குவரத்துத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேருந்துகள் புறப்படும் எனவும், சொந்த ஊர்களுக்கு சென்றோர், சென்னை திரும்ப, ஞாயிற்றுக்கிழமை இரவு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறையினர் தெரிவித்துள்ளனர்.