அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு(Video)



அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத
அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி
முடிவு செய்துள்ளது.

நாட்டின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை
எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், திறைசேரியில் இருந்து பணம் விடுவிப்பதற்குத் தேவையான சாதாரண
பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத
அதிகாரிகளின் சம்பளப் பணச் சீட்டுகள், உட்பட்ட தகவல்களை சமர்ப்பிக்குமாறு அரசு
நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரி,
கணக்காளர், இயக்குநர் (நிதி) அதிகாரிகளுக்கு திறைசேரி கடிதம் மூலம் பணிப்புரை
விடுத்துள்ளது.

பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக ஊதியம்
வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.