ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்றுக் கொண்டார். 1984-ஆம் வருட இந்திய ரயில்வே பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த லஹோடி, மத்திய, வடக்கு, மத்திய வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மேற்கு ரயில்வேகளிலும், ரயில்வே வாரியத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். மேற்கு ரயில்வேயின் பொதுமேலாளராக அவர் பதவி வகித்த போது அதிக சரக்குகளை கையாண்டு ரயில்வே துறை சாதனை படைத்ததோடு, அதிக எண்ணிக்கையிலான விவசாய ரயில்களும் இயக்கப்பட்டன. சமீபத்தில் மத்திய … Read more

இந்திய எல்லையில் சுற்றித் திரிந்த சீனர்கள் இருவர் அதிரடியாக கைது | Two Chinese nationals who were wandering around the Indian border were arrested

மஹராஜ்கஞ்ச்–உத்தர பிரதேசத்தில், இந்திய – – நேபாள எல்லை யில் சட்டவிரோதமாக சுற்றித் திரிந்த சீனர்கள் இருவரை, நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். நம் எல்லைப் பகுதிகள் வழியாக, வெளிநாட்டவர் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சோனாலி அருகே உள்ள இந்திய – – நேபாள எல்லைப் பகுதியில் நேற்று சோதனை நடத்தி, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபர்களிடம் … Read more

ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கூறிய ரஜினிகாந்த்

ஆங்கிலப் புத்தாண்டான 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகம் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வழக்கமாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் அதிகளவில் கூடுவர். சென்னையில் இருந்தால் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறுவார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரஜினிகாந்த் இல்லம் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே அப்பகுதியில் … Read more

நாளை (02.01.2023) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.   அந்த வகையில் உலக புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘வைகுண்ட ஏகாதசி’ விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 2ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். Source link

ஆர்விஎம் இயந்திரம் | தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக நிச்சயம் பங்கேற்கும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: ஆர்விஎம் இயந்திரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ( ஆர்விஎம் எனப்படும் ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு … Read more

ஏற்காட்டில் புத்தாண்டு 2023 கொண்டாட்டம்… மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்!

2023… ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துவிட்டது. ஜனவரி ஒன்றாம் தேதி வந்துவிட்டால் போதும். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சமூக வலைதளங்கள் அதிகரித்து விட்ட சூழலில் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். அப்படித் தான் இன்றைய தினமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. கோயில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மால்களில் குவிவது ஒரு ரகம். ஏழைகளின் ஊட்டி சுற்றுலா தலங்களை தேடி தேடி சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது மற்றொரு ரகம். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ”ஏழைகளின் ஊட்டி” … Read more

16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரிப்பு.!

இந்தியாவின் வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் வேலையின்மை சதவீதம் முந்தைய மாதத்தில் 8 சதவீதமாக இருந்தது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) இன்று தெரிவித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.96 சதவீதத்திலிருந்து, 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.55 சதவீதத்தில் இருந்து, 7.44 சதவீதமாக சரிந்துள்ளது என்று தரவு காட்டுகிறது. தொழிலாளர் பங்கேற்பு … Read more

ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் துணிவின் சாதனை – ஆச்சரியத்தில் கோலிவுட்

துணிவு மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க … Read more