உக்ரைன் அதிபரின் புத்தாண்டு செய்தி | கொரோனாவுக்கு மத்தியில் சீனாவில் கொண்டாட்டம் | உலகச் செய்திகள்

சீனாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடக் கூட்டமாக திரண்டனர். “வெற்றி பெறும் வரை ரஷ்யா உடன் தொடர்ந்து போரிடுவோம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வட கொரியா 24 மணி நேரத்தில் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளதாகத் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. 2035-க்குள் சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் வரை பாயும் ஏவுகணைகளை ஜப்பான் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். மெக்சிகோ நாட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் … Read more

போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் தமிழகத்தில் ஊடுருவலா?- உடனடியாக கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ”உலகின் மிகக்கொடிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே … Read more

புத்தாண்டு சுவாரஸ்யம் | 3.5 லட்சம் பிரியாணி டெலிவரி செய்த ஸ்விக்கி

புதுடெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஸ்விக்கி உணவு டெலிவரி ஆப் வாயிலாக 3.5 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இரவு 10.35 மணிக்குள் ஸ்விக்கி ஆப்பில் 3.5 லட்சம் பிரியாணிகள், 61 ஆயிரம் பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்விக்கி ட்விட்டரில் நடத்திய வாக்கெடுப்பின்படி ஹைதராபாதி பிரியாணியை 75.4 சதவீதம் பேரும், லக்னோவி பிரியாணியை 14.2 சதவீதம் பேரும் கொல்கத்தா பிரியாணியை 10.4 சதவீதம் பேரும் ஆர்டர் செய்தனர். மொத்தம் 3.5 … Read more

புத்தாண்டு பரிசு: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு junior administrative grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2007-ம் … Read more

ஒசூரில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா

ஓசூர் ராஜகணபதி நகர் பகுதியில் பழமையான ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறந்த தினத்தில் கடலைக்காய் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது.  அதேபோல இந்த 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு இன்று ஸ்ரீராஜ கணபதி ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் 65ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கோயில் காலை முதல் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு … Read more

படகு கவிழ்ந்ததில் 2 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு: 232 பேர் மீட்பு

லெபனான் கடற்கரையில் சனிக்கிழமையன்று படகு கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 232 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்பவர்களின் ஆபத்தான பயணம் சொந்த நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல்வேறு நாட்டு மக்களும் ஆபத்தான கப்பல் பயணங்கள் மூலம் ஐரோப்பாவை வந்தடைய முயற்சிக்கின்றனர். அந்த வகையில் கடந்த செப்டம்பரில் வடக்கு லெபனானில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சென்ற புலம்பெயர்ந்தவர்களில் 34 பேர் வடக்கு சிரிய துறைமுக நகரமான டார்டஸின்(Tartus)  கடற்கரையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். இது அரசாங்கங்களுக்கு மத்தியிலும், … Read more

‘உன் வாழ்க்கை உன் கையில்’ – நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலம் ஆங்கில புத்தாண்டு பிறந்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் புதிதாய் பிறந்த ஆங்கில புத்தாண்டை மக்கள் இனிப்புகள் வழங்கியும், பாட்டுப் பாடி, நடனமாடி உற்சாகமாக வரவேற்றும், ஒருவருக்கொருவர் ஹேப்பி நியூ இயர் என புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 2023 புதிதாய் பிறந்த நிலையில் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பல்வேறு … Read more

ஊட்டியில் கடும் உறைபனி: ‘2’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

ஊட்டி:  உறை பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில் ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக ‘2’ டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்தது. நீலகிரியில்  கடந்த அக்டோபர் மாதம் முதல் பனி பொழிவு காணப்பட்டது. கடந்த மாத துவக்கம்  முதல் பனியின் தாக்கம் அதிகரித்தது. பனி பொழிவு அதிகரிப்பால்,  மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின. தேயிலை செடிகள் முற்றிலும் கருகாமல் இருக்க தென்னை ஓலைகள் மற்றும் தாவை,  கோத்தகிரி செடிகளை கொண்டு மூடி பாதுகாத்து … Read more

தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து உத்தரவு: தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும் இதில் 26 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்துள்ளள்ளனர். மதுரை காவல் ஆணையராக நாயர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு செல்போனை பறிக்க நால்வர்; உதவிய find my device அம்சம்” தாம்பரம் அருகே பரபரப்பு சம்பவம்!

தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்களை மிரட்டி தாக்கிவிட்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மல்லீஸ்வரி நகரில் குமாரசாமி விளையாட்டு மைதானம் உள்ளது. காரில் வந்த கல்லூரி மாணவர்கள் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இருவரும் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் அவர்களை மிரட்டி தாக்கிவிட்டு இரண்டு செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு … Read more