அவளின் அன்புக்காக! திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி… வெளியான புகைப்படங்கள்


கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார்.
அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சஹத்- ஜியா தம்பதி

கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.

இந்த மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. அதன்படி சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

அவளின் அன்புக்காக! திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி... வெளியான புகைப்படங்கள் | Transcouple To Become Parents Kerala

Manorama Online

பிரசவம்

முதலில் இதற்கு தயங்கினர். பின்னர் ஜியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையும் சஹத்தின் மனதை மாற்றியுள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களிடமும் ஆலோசனை எடுத்துள்ளனர்.

மருத்துவ ரீதியாக சஹத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
சிகிச்சையையடுத்து ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார்.

பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹாத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. வரும் மார்ச் 4ஆம் திகதி பிரசவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவளின் அன்புக்காக! திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி... வெளியான புகைப்படங்கள் | Transcouple To Become Parents Kerala



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.