போதைப் பொருள் கடத்திய பியூட்டிஷியன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பகுதியில் நடத்தப்பட்டு வரும் அழகு நிலையங்களில், போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அழகு நிலையங்களையும், அங்கு பணிபுரிபவர்களையும் கலால் துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை சாலக்குடி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் ஷீலா சன்னி (51) என்பவர் தன்னுடைய ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த … Read more

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற தெரு நாய்: ராஜஸ்தானில் அதிர்ச்சி | Stray Dog Kills Infant Sleeping Next To Mother In Rajasthan Hospital

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், அரசு மருத்துவமனையில் தாய் அருகில் தூங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை தெருநாய் தூக்கி சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர மீனா என்பவர் உடல்நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி ரேகா மற்றும் பிறந்த ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகள் உடன் தங்கியிருந்தனர். ரேகா, கணவரை கவனித்து … Read more

ஜாலியா ஹாலிவுட் படம் பார்த்தா ஜோலி முடிஞ்சது: வட கொரியாவில் வில்லங்க உத்தரவு| Parents to be sent to labour camp, children to 5-yr jail if found watching Hollywood movies in North Korea

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியாங்யாங்: வட கொரியாவில், ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, பெற்றோர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா ஒரு மர்ம பிரதேசமாகவும், இரும்புத்திரை போர்த்திய நாடாகவும் உள்ளது. இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். இங்கு, அதிபர் கிம் ஜோங் உன் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. தென் கொரியா உள்ளிட்ட அண்டைநாடுகளை … Read more

உடையிலும், உரையிலும் பரபரப்பு கிளப்பிய கோமல் சர்மா

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'குடிமகான்'. பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் ஒரு … Read more

ஜனாதிபதி பிரதமர், பதவிகளில் ,எந்தவித மாற்றமும் இல்லை

எந்த வகையிலும் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எந்த எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில், அதனை திசை திருப்புவதற்கு இவ்வாறான விடயங்களை கூறுவது … Read more

ஸ்டாப்லைன் தாண்டினால் ரூ.500 அபராதம்: சென்னை போக்குவரத்துத் துறை அதிரடி

ஸ்டாப்லைன் தாண்டினால் ரூ.500 அபராதம்: சென்னை போக்குவரத்துத் துறை அதிரடி Source link

காஞ்சிபுரம் : வேலைக்கு சென்ற மாற்றுத்திறனாளி – உயிரிழந்த சம்பவம்.! 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அருகே ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் அருண்குமார். மாற்றுத்திறனாளியான இவர் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார்.  இந்த நிலையில், இவர் கடந்த 21-ந்தேதி ஆனம்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்வதற்காக தன்னுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.    இதையடுத்து இவர் மேல்பேரமநல்லூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்தக் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக … Read more

செல்போன் மோகம் மற்றுமொரு உயிரை பறித்தது..!! இனிமேலாவது மாறுங்க மக்களே..!!

கேரளாவை சேர்ந்த நிகிதா என்ற பெண் சென்னையில் தங்கி தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். மாணவி நிகிதா பிஎஸ்சி சைக்காலஜி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி நிகிதா தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது மாணவி நிகிதா போன் பேசிய படி சென்றதால் ரயில் வருவதை கவனிக்கவில்லை. அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து வண்டலூர் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் விரைவு ரயில் அந்த மாணவி மீது … Read more

அடிக்கடி விபத்து; வேகத்தடைகளுக்கு பெயின்ட் அடித்து சமூக சேவகியான பெண் மருத்துவர்!

கூடுவாஞ்சேரி அருகே, நெடுஞ்சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்ததை அடுத்து, அவற்றின் மீது வெள்ளை பெயின்ட் அடித்த பெண் மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சாலை விபத்து தாயை இழந்த குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும் மருத்துவரின் மனைவி; வேலூர் நெகிழ்ச்சி! சென்னை அருகேயுள்ள பெருங்களத்தூர், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரின் நுழைவாயிலாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் இருந்து, நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் வழியாக … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவு..! நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 74 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இடைத்தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு சித்தோட்டில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அங்குள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதோடு, துணை ராணுவம் உட்பட 500 போலீசார் … Read more