துருக்கி நிலநடுக்க சேதத்தின் மதிப்பு 34.2 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பீடு!

துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக அங்கு 34 புள்ளி 2 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய உலக வங்கியின் இயக்குனர் Humberto Lopez, நாடு எதிர்கொள்ளும் புனரமைப்பு மற்றும் மீட்பு செலவுகள் எதிர்பார்ப்பதை விட இரண்டரை மடங்கு கூடுதலாக இருக்கும் என்றார். துருக்கியில் கடந்த 6ந்தேதி அன்று இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் … Read more

Sedona விருது வென்ற மாமனிதன் திரைப்படம்; `சத்யஜித்ரேவுக்கு அர்ப்பணிக்கிறேன்!' -சீனு ராமசாமி

‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். பல்வேறு பிரச்னைகளால் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளியானது. சீனு ராமசாமி பெரும்பாலும் எளிய மனிதர்களின் கதைகளை கையில் எடுக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, இப்படத்திலும் ஒரு … Read more

கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாணவி மரணம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும்  கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் பள்ளியில் மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் சமூக விரோதிகள் பள்ளிக்கு தீ வைத்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதுடன்,  பல கோடி மதிப்புள்ள வாகனங்களையும் தீ … Read more

கோயம்புத்தூரில் நடைபெற உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய இணைய வழிப்பதிவு ஏற்பாடு

கோவை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தேசிய, மண்டல, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கண்காட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்புகள் வழங்கி வருகிறது. இக்கண்காட்சி நடைபெறும் தகவல் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு சில மகளிர் சுய உதவிக் குழு … Read more

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை..!!

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் உள்ள பகுதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அறிக்கையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், பெயர் சேர்க்கப்பட்டதற்கும் தடை கோரி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

சிபிஐ கைதுக்கு எதிரான மணீஷ் சிசோடியா மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு: டெல்லி ஐகோர்ட்டை நாட அறிவுரை..!

டெல்லி: சிபிஐ கைதுக்கு எதிரான டெல்லி துணை முதல்வர் சிசோடியா மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், வீடுகளுக்கு … Read more

பூரண நலத்துடன் பிரபு வீடு திரும்பினார்

நடிகர் திலகம் சிவாஜியின் கலை வாரிசு, 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் பிரபு. கடந்த 21ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைனில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகக் தில் கல் அடைப்பு இருப்பதாகவும், அதற்காக சிசிக்சை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கல் அடைப்பு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்| Elon Musk Is World’s Richest Person Again

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்ததால், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்சை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க்கை முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எலான் மஸ்க் 2வது இடத்தில் இருந்து … Read more

பாகிஸ்தான் கடற்படை தளபதி ,இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜெனரல் கான் தலைமையிலான பாகிஸ்தானின் கடற்படைக் தூதுக்குழுவை இலங்கை பாதுகாப்பு படைகள் சார்பாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன வரவேற்றார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை நினைவுகூர்ந்த ஜெனரல் கமல் குணரத்ன, … Read more

“இதனால் போக்குவரத்து துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள்”- மகளிர் இலவச பேருந்து பயணத்தைப்பற்றி ஸ்டாலின் பேச்சு

“இதனால் போக்குவரத்து துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள்”- மகளிர் இலவச பேருந்து பயணத்தைப்பற்றி ஸ்டாலின் பேச்சு Source link