புகைப்பட கருவி (கெமரா) தொழிநுட்ப செயலமர்வு

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மெட்ரோ பொலிடன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த புகைப்பட கருவி – கெமரா தொழிநுட்ப செயலமர்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (27) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சின் ஊடக அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லென்ஸ் (lance) இல்லா கெமெராக்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்ற இந்த செயலமர்வில், உயர் அதிகாரிகள் குழுவொன்று நிறுவனத்தை … Read more

Rare Disease Day 2023: ரத்த சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்! சர்வதேச அரிய நோய்கள் தின விழிப்புணர்வு

Rare Diseases Alert Day: அரிதான நோய் தினம் என்பது பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அரிய நோய்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நோய்களின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சிறப்பு விழிப்புணர்வு நாளில், மக்களிடம் நோய்கள் தொடர்பான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இந்த நாள் முதன்முதலில் 2008 இல் அனுசரிக்கப்பட்டது. தற்போது, உலக அரிய நோய்கள் விழிப்புணர்வு தினத்தன்று, 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் நிகழ்வுகள் … Read more

4 சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் புதிய வகை குப்பை தொட்டி: கோவையில் புதுமை

4 சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் புதிய வகை குப்பை தொட்டி: கோவையில் புதுமை Source link

வேறு ஒருவருடன் கள்ளக்காதல்: கணவர் கண்டிப்பு.. மனைவி எடுத்த விபரீத முடிவு.!

கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரேமா(34). இந்நிலையில் பிரேமாவுக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் பாபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த கணவர் சரவணன், பிரேமாவை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கள்ளத்தொடர்பை முறித்துக் கொண்ட பிரேமா, மீண்டும் மேஜர் பாபுவுடன் பேசியுள்ளார். இதையடுத்து மேஜர் பாபுவின் உறவினர்கள், இதுதொடர்பாக … Read more

இணையத்தில் வைரலாகும் வீடியோ.! மீண்டும் உயிர் பெற்றதா குட்டி டைனோசர்..?

பூமியில் மனித இனம் பிறப்பதற்கு முன்பே டைனோசர் என்ற விலங்கு இனம் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் பூமியின் மீது மோதிய ராட்சத விண்கல் காரணமாகவும் மொத்த டைனோசர் இனமும் அழிந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு அழிந்து போன டைனோசர்களின் புதை படிமங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த புதைபடிமங்களின் அடிப்படையில் டைனோசர்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்தவை என்பது நிரூபனமாகி இருந்தாலும், பறவை இனத்திற்கும் … Read more

“அரசு அமைப்புகளை கூட்டணி கட்சி போல ஆட்டுவிக்கிறது பாஜக" – சிசோடியா கைதுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!

டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக, ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் மீது பல மாதங்களாக பா.ஜ.க குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்த நீலையில், கடந்த வாரம் சி.பி.ஐ அவரைக் கைதுசெய்தது. முன்னதாக மணீஷ் சிசோடியாவிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, அவரின் பதில்கள் திருப்திகரமானதாக இல்லை எனக் கூறி வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தது. சிசோடியா இதன் காரணமாக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை, பல்வேறு தரப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், … Read more

தப்பியோட முயன்ற ரவுடி.. சுட்டுப் பிடித்த போலீஸார்.. வெட்டு வாங்கிய காவலர்.. தொடர் கதையாக மாறி வரும் துப்பாக்கிச் சூடு..!

மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி காவலர்களை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது காலில் துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸார் பிடித்தனர். மதுரை உலகனேரியை சேர்ந்த ரவுடி பாலமுருகன் என்ற டோராபாலா மீது கொலை, கொலை முயற்சி என 8 வழக்குகள் உள்ள நிலையில், பிப்ரவரி 22ம் தேதி வண்டியூர் அருகே ராஜிவ்காந்தி நகரில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உலகனேரியைச் சேர்ந்த ரவுடி வினோத் அவனது கூட்டாளிகளான … Read more

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு: கவுஸ் ஆதம்பாஷா ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்,பி. டாக்டர் மஸ்தான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு … Read more

நாகாலாந்தில் 84%, மேகாலயாவில் 76% வாக்குப்பதிவு

ஷில்லாங் / கோஹிமா: நாகாலாந்து, மேகாலயா மாநிலங் களில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் நாகாலாந்தில் 84.66%, மேகாலயாவில் 76.66% வாக்குகள் பதிவாகின. திரிபுரா, நாகாலாந்து, மேகா லயா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதன்படி திரிபுராவில் கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் நேற்று பேரவைத் தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்தில் 60 … Read more

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சர் கின் காங் இந்தியா வர உள்ளார். ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு வரும் வியாழக்கிழமை (மார்ச் 2) புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உள்பட பல்வேறு நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அவரது அழைப்பை ஏற்று சீன வெளியுறவு அமைச்சர் … Read more