அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூடு.. 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

டென்னிஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் என்ற இடத்தில் இயங்கி வரும் பள்ளியில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் நுழைந்த இளம்பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த 3 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

தொடர்ந்து அந்தப் பள்ளியின் காவலாளி உள்பட மேலும் மூவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இந்நிலையில் பள்ளியைச் சுற்றி வளைத்த போலீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் கொல்லப்பட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.