Pathu thala: பத்து தல படத்திற்கு அனுமதி மறுப்பு..கடும் அப்சட்டில் படக்குழு..ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
சிம்பு நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. அவரின் திரைவாழ்க்கையை நாம் மாநாடு படத்திற்கு முன் மாநாடு படத்திற்க்கு பின் என பிரித்துவிடலாம். அந்த அளவிற்கு தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் கவனம் செலுத்தி வெற்றி கண்டு வருகின்றார் சிம்பு.

மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிம்பு இப்படத்திற்காக தன் உடலை வருத்தி மிகவும் எதார்த்தமாக நடித்தது பலரது பாராட்டையும் பெற்றது.

Suriya 42: சூர்யா – ஞானவேல் சண்டைக்கு இதுதான் காரணமா ? வெளியான உண்மை காரணம்..!

இதையடுத்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இந்நிலையில் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

பத்து தல

கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படம் பல தடைகளை தாண்டி ஒருவழியாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது. MUFTI என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் இந்த பத்து தல திரைப்படம். ஆனால் MUFTI படத்தின் கதைக்கருவை மற்றும் எடுத்துக்கொண்டு முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையை உருவாக்கியுள்ளார் கிருஷ்ணா.

முதலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்த சிம்பு பின்பு கதையின் நாயகனாக மாறிவிட்டார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதானஎதிர்பார்ப்பை உயர்த்தியது.

ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருந்து வரும் நிலையில் இப்படத்திற்கு அதிகாலை காட்சி போடப்படும் என தகவல்கள் வந்தன. பல ஊர்களில் அதிகாலை ஐந்து மணிக்கே பத்து தல முதல் காட்சி திரையிடப்படும் என செய்திகள் வந்தன. ஆனால் தற்போது வந்த தகவலின் படி சிம்புவின் பத்து தல படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதி தரவில்லையாம்.

எனவே முதல் காட்சி 8 மணிக்கு தான் துவங்குமாம். இதன் காரணமாக படக்குழு உட்பட சிம்புவின் ரசிகர்களும் செம அப்சட்டில் இருக்கின்றனர். செம மாஸான படமாக உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் அதிகாலை காட்சியை காண ரசிகர்கள் ஆவலாக இருக்க தற்போது அக்காட்சிக்கு அனுமதியில்லை என்ற தகவல் வந்தவுடன் சிம்புவின் ரசிகர்கள் செம அப்சட்டில் இருக்கின்றனர்.

இதே போல தான் மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கும் அதிகாலை காட்சி மறுக்கப்பட்டது. என்னதான் சிம்பு தொடர் வெற்றிகளை கொடுத்தாலும் அவரின் படங்களுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி தர மறுக்கப்பட்டு வருவது சிம்புவின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.