புனே தொகுதி பாஜ எம்பி காலமானார்: பிரதமர் இரங்கல்| BJP MP Girish Bapat Dies, PM Modi Offers Condolences

புதுடில்லி: மஹாராஷ்டிர மாநிலம் புனே தொகுதி பா.ஜ., எம்.பி., கிரிஷ் பகத் காலமானார். அவருக்கு வயது 72. உடல்நலக்குறைவால் தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். புனே நகரில் உள்ள காஸ்பா பெத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ., ஆக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: கிரிஷ் பபத் எளிமையான மற்றும் கடினமான உழைப்பாளி. சமூகத்திற்காக பணியாற்றியுள்ளார். மஹாராஷ்டிராவின் வளர்ச்சியில் கவனம் கொண்டிருந்த அவர், புனே நகரம் வளர்வது குறித்து கனவு கண்டவர்.

பா.ஜ.,வை கட்டமைப்பதிலும், வளர்ப்பதிலும் ஆக்கப்பூர்மாக பணியாற்றி உள்ளார். எம்.எல்.ஏ., ஆக இருந்த போது மக்கள் நலனுக்காக கேள்வி எழுப்பிய அவர், அமைச்சராகவும், எம்.பி., ஆகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். அவரது சிறப்பான பணியை மக்கள் எப்போதும் நினைவில் வைத்து இருப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.