முகவசம் கட்டாயம் | அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்ரமணியனிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், நாளை முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 

மேலும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.