சபரிமலையில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் : ஒன்றிய அரசு

டெல்லி : சபரிமலை எரிமேலியில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சபரிமலை அருகே எஎரிமேலியில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி, கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், … Read more

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவை தொடங்கியவுடன் ஆளும் பாஜக கட்சி, எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவிழாவிற்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: காஞ்சிபுரத்தில் சோகம்

விச்சந்தாங்கலில் கிராம கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காண்டீபன் – லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனாவை சென்னையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு லாவண்யா … Read more

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “அபிநந்தன விருது விழா” (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு “அபிநந்தன விருது” வழங்கினார். கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (12) ஆரம்பமான “இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த … Read more

நிச்சயமான துணை நடிகையுடன் காதல்.! துணை நடிகரை கடத்திச் சென்று பெண் வீட்டார் செய்த கொடூர சம்பவம்..!!

திருமண நிச்சயமான துணை நடிகையை காதலித்த சினிமா துணை நடிகரை காரில் கடத்திச்சென்று பெண் வீட்டார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (25). சினிமாவில் துணை நடிகையான இவர் பூந்தமல்லியில் உள்ள அவரது அக்கா மோனி வீட்டில் தங்கியுள்ளார். மேலும் ஆர்த்திக்கு கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு ஜெகன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் ஆர்த்திக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் … Read more

காதல் தோல்வியால் கதறி அழுத பிரபல நடிகை!!

காதல் தோல்வியை நினைத்து தாம் பலமுறை அழுததாக பிரபல நடிகை கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. மீசையை முருக்கு படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா, அதனைத் தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் உதநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் … Read more

பிரபல வில்லன் நடிகரை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி!!

தனது வளர்ச்சி பிடிக்காமல் தனது அண்ணனே தனக்கு ஸ்லோ பாஸ்சன் கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் பகீர் கிளப்பியுள்ளார். பிரபு நடித்த கலியுகம் படம் மூலம் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம், அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், தாய் மாமன், கூலி, சிம்மராசி, முத்து, நாட்டாமை, பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நாட்டாமை, முத்து, அமர்க்களம் ஆகிய படங்கள் பொன்னம்பலத்திற்கு பெரிய அளவில் ஹிட் படங்களாக அமைந்தன. … Read more

“மோடியை முடிவுக்கு கொண்டுவந்தால்தான்…" – காங்கிரஸ் நிர்வாகி பேச்சும் பாஜக பதிலும்!

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க அரசு அதை ஏற்க மறுப்பதால் பா.ஜ.க அரசுக்கு எதிராக, காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “எங்கள் போராட்டம் அதானியுடன் அல்ல, பா.ஜ.க-வுடன். பா.ஜ.க-வை தோற்கடித்தால் அதானி – அம்பானி அதனுடன் சேர்ந்து காணாமல் போவார்கள். ஆங்கிலேயர்கள் … Read more

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ம் தேதி இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM-7818) சிறைபிடிக்கப்பட்டனர். இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த சிலர் / இலங்கை … Read more