`புவிசார் குறியீட்டில் மேலும் 11 பொருள்கள்’ – இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!

தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். ஆத்தூர் வெற்றிலை ஆங்கிலேயரால் பெருமை; `ஊட்டி வர்க்கி’க்கு புவிசார் குறியீடு..! என்ன சிறப்பு? இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சஞ்சய், “தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில், 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை. இந்நிலையில் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி … Read more

சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவு கட்டணம் குறைப்பு – தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் அறிவித்தபடி, கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை இருந்த சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, 2 சதவீதம் பதிவுக் கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. சட்டப்பேரவையில் மார்ச் 20-ம்தேதி, தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘‘2012 ஏப்.1-ம் தேதி உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் 9-ம் தேதி முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. விற்பனை, நன்கொடை, பரிமாற்றம், குடும்ப உறுப்பினர்களுக்கு … Read more

கர்நாடக மாநிலத்தில் பாஜக, மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸும், பாஜகவும் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரத்தில் பாஜக எம்எல்சிக்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சிஞ்சூர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து மஜத எம்எல்ஏ சீனிவாஸ் … Read more

"வாவ்".. "மேகம் திடீர்னு "கறுக்குதே".. வெளுத்து வாங்க போகும் கனமழை.. ஹேப்பி நியூஸ்.. என்னவாம்..?

சென்னை: தமிழகத்தில் வெயில் நெருப்பாக சுட்டெரித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்க்காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த திடீர் க்ளைமெட் மாற்றத்துக்கு காரணம் சொல்லியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இந்த செய்தி காதுகளில் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறது. அனல் கக்கும் … Read more

Viduthalai: வெற்றிமாறனின் விடுதலை எப்படி?: திருமாவளவனின் ஸ்பெஷல் விமர்சனம்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Thirumavalavan praises Viduthalai Part 1: விடுதலை படம் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அது பற்றி சமூக வலைதளத்தில் விமர்சித்திருக்கிறார். ​விடுதலை​விடுதலை விமர்சனம்வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த அனைவரும் சூரியின் மாற்றத்தை பற்றி தான் இன்னும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாத்தியாராக வந்து அனைவரின் கைதட்டல்களையும் … Read more

மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ராஜூ ஜா மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ராஜூ ஜா என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். துர்காபுரை சேர்ந்த தொழிலதிபரான ராஜூ ஜா தமது சகாக்களுடன் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.ராஜூ ஜா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காரில் இருந்த மற்ற இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முந்தைய மார்க்சிஸ்ட் ஆட்சிக் காலத்தில் ராஜூ ஜா சட்டவிரோதமான நிலக்கரி வர்த்தகம் செய்து வந்ததாக … Read more

மதுரை அவனியாபுரம் அருகே ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

மதுரை: மதுரை அவனியாபுரம் அருகே ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெகதீஷ் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு தொற்று உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று 2,994 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கிட்டதட்ட மக்கள் மறந்து போகும் அளவிற்கு இயல்பு வாழ்க்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை பல மாதங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக … Read more