ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்

ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை -கோயமுத்தூர் இடையே 12வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வரும் 8ம் தேதி தொடங்கி வைக்கிறார். 10ம் தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் தொடங்கி வைக்கப்படுகிறது. செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இம்மாதத்திற்குள் வந்தே பாரத் ரயில்  இயக்கப்பட உள்ளது. ஹைதராபாத் செகந்திரபாத் ஆகிய இரட்டை நகரங்களில் இருந்து திருமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி நாளை முதல் 6ம் தேதி வரை மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெரு நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் மாணவர்கள், மாதம் கணிசமாக ஊதியம் பெறுவோரின் தகவல்கள் திருடப்பட்டது கண்டுபிடிப்பு

சென்னை: பெரு நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் மாணவர்கள், மாதம் கணிசமாக ஊதியம் பெறுவோரின் தகவல்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், பேடிஎம், போன்பே, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் விவரங்கள் திருடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., பல்வேறு மாநில போக்குவரத்து கழகங்கள், இ-வணிக நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திருடப்பட்டது. 66.9 கோடி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை திருடி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.15,920 கோடியாக உயர்வு

புதுடெல்லி:  ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது எப்போதும் இல்லாதவகையில் 2022-2023ம் ஆண்டில்  ரூ.15,920கோடியாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில்,‘‘நாட்டில் ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த  2018-2019ம் ஆண்டில் 10,745கோடியாகவும் இருந்தது. 2019-2020ம் ஆண்டில் ரூ.9115 கோடி மற்றும் 2020-2021ம் ஆண்டில் ரூ.8434கோடியாக இருந்தது.    2021-2022ம் ஆண்டில் ரூ.12,814கோடி மதிப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2022-2023ம் நிதியாண்டில் ஏற்றுமதியானது ரூ.15,920கோடியாக அதிகரித்துள்ளது.  … Read more

2002 குஜராத் வன்முறை: முஸ்லிம் பெண்கள் கூட்டாக பலாத்காரம், படுகொலை வழக்கு:26 பேர் விடுதலை!

International oi-Mathivanan Maran அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 59 சாதுக்கள் கருகி சாம்பலாகினர். இந்த சம்பவம் மிகப் பெரும் மதமோதல்களை உருவாக்கியது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 1,000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை … Read more

அவதுாறு வழக்கில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்| Court summons Rahul to appear in defamation case

பாட்னா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், வரும், 12ல் நேரில் ஆஜராகும்படி, காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, பாட்னா நீதிமன்றம் ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. கடந்த, 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவில் பேசிய, காங்., முன்னாள் தலைவர் ராகுல், ‘நாட்டில் உள்ள திருடர்கள் பெயர்கள், மோடி என்ற பெயரில் இருப்பது ஏன்’ என, தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த, பா.ஜ., தலைவர்கள், ‘பிரதமர் மோடி மற்றும் மோடி … Read more

Nayanthara: அப்போ அது கன்ஃபார்ம் தான் போல.. நயன்தாரா யாரு பக்கத்துல உட்கார்ந்து இருக்காரு பாருங்க!

சென்னை: பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழா நேற்று இரவு பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை ராஷி கன்னா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நடிகர் கவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அந்த விழாவில் ஒயிட் கலர் சேலையில் தேவதை போல கலந்து கொண்ட நிலையில், அவர் பிரதீப் ரங்கநாதன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் டிரெண்டாகி … Read more

சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை… தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரிப்பு

சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை… தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரிப்பு Source link

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரம்…உதவி பேராசிரியர் தலைமறைவு.!

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால், சமூக வலைத்தளங்களில் மாணவிகள் தங்களின் குற்றச்சாட்டுகளை பதிவிட்டனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, காவல்துறை இதை உரிய முறையில் சரியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது இது தொடர்பாக கல்வி நிறுவனம் எல்லைக்குட்பட்ட … Read more

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது..!!

புதிய நிதி ஆண்டான ஏப்ரல் 1-ம் தேதியையொட்டி நேற்று முதல் பல்வேறு புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்.) முதியவர்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. அது நேற்று முதல் ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் நேற்று முதல் ரூ.1000 செலுத்தினால் ரூ.67,750 பெறக்கூடிய திட்டம் … Read more