ஆபத்தான நிலையில் மேலும் 3 கிணறுகள் இந்தூரில் கண்டுபிடிப்பு

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோயில் கிணற்றின் கான்கிரீட் சிலாப் மீது ராம நவமியின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது சிலாப் உடைந்து 60 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் 36 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தூர் கோயில்களில் உள்ள கிணறுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் விபத்து நடந்த கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. சுற்றளவில் இருக்கும் 3 கோயில்களில் மூடப்பட்ட நிலையில் ஆபத் தான … Read more

திடீரென ஹோட்டல்களுக்குள் நுழைந்து கண்காணிப்பில் ஈடுபட்ட ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலி கொக்கல மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் பல சுற்றுலா ஹோட்டல்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். எவருக்கும் முன்கூட்டியே அறிவிக்காமல் நேற்று முன்தினம் காலை ஜனாதிபதி திடீரென ஹோட்டல்களுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட்டது. இங்கு தங்கியிருந்த சில வெளிநாட்டவர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார். இதன் போது ஐக்கிய தேசியக் … Read more

மத்திய, மேற்கு அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட பெரும் புயல்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

மத்திய அமெரிக்காவில் தாக்கிய புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதியில் வீசிய சூறாவளியால் 7 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் காரணமாக அலபாமா, இல்லினாய்ஸ், மிசிசிப்பி மற்றும் லிட்டில் ராக் பகுதியில் இடி மின்னலுடன் கடும் மழை கொட்டித் தீர்த்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்காண மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இல்லினாய்ஸின் பெல்விடேரில் வீசிய சூறாவளி அப்பல்லோ தியேட்டரின் கூரையை விசிறியடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். Source … Read more

சிறுவர் கடத்தலை மையமாகக் கொண்ட கார் பிராங்க் வீடியோக்கள் பரவல்.. யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வைரலான வீடியோக்களை ஆர்வமாகப் பார்க்கும் சிறுவர் சிறுமியரைக் குறிவைக்கும் சமூக ஊடக கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கார் பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் காரில் சிறுவர்கள் கடத்தப்படும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. காரில் லிப்ட் கொடுப்பதாக சிறுவரை ஏற்றி பின்னர் அவர்கள் கடத்தப்பட்டதாகக்கூறுவது போல இந்த வீடியோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரில் இருந்து சிறுவன் தப்ப முயற்சிப்பதும், காரின் கதவு லாக் ஆகியிருப்பதும், மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக உள்ள இந்த … Read more

தெறிக்கவிட்ட மார்க் வுட்… முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணி முதலில் துடுப்பாடியது. 38 பந்துகளில் 72 ஓட்டங்கள் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க, மற்றொரு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 … Read more

அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும்

சென்னை: அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என்றும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா … Read more

விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் பேருந்து தீக்கிரை ஏற்பட்டது.

செல்லாண்டியம்மன் கோவில் அருகே முறுக்கு வியாபாரி வெட்டிக் கொலை!

திண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோவில் அருகே முறுக்கு வியாபாரி அப்துல் லத்தீப் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  அதிகாலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த அப்துல் லத்தீப்பை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொன்றுள்ளனர். தந்தை அப்துல் லத்தீப் கொலை செய்யப்படுவதை தடுக்க சென்ற மகன் தவ்பிக்குக்கு அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த தவ்பிக் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 மாத தண்டனைக்குப்பின் சிறையிலிருந்து சித்து விடுதலை; உற்சாக வரவேற்பு

பாட்டியாலா: கொலை வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்ற காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 10 மாத தண்டனைக்குப் பின் பாட்டியாலா சிறையிலிருந்து விடுதலையானார். பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சித்து, கடந்த 1988ம் ஆண்டு பாட்டியாலாவில் காரில் சென்ற போது ஏற்பட்ட தகராறில் குர்னம் சிங் என்பவரை தாக்கியதில் அவர் இறந்தார். இந்த கொலை வழக்கில் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் பாட்டியாலா சிறையில் … Read more