2022-23-ல் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள் அரசுப் பணிகளுக்கான இணையவழித் தேர்வு எழுதினர்: தமிழக அரசு தகவல்
சென்னை: 2022-2023-ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியுள்ளனர் என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையானது, “கணினி அடிப்படையிலான இணையவழி தேர்வை ஒரு சேவையாக” வழங்குகிறது. இச்சேவை பல்வேறு அரசுத் … Read more