கலா‌ஷேத்ரா ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு; மாணவர்கள் போராட்டம் வாபஸ்

கலா‌ஷேத்ரா ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு; மாணவர்கள் போராட்டம் வாபஸ் Source link

நெஞ்சை உலுக்கிய சம்பவம்!! நடனம் ஆடும் போதே மாணவன் பலி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் கோகுல் (19). இவரது சொந்த ஊர் திருவாரூர். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விளையாட்டுகளில் பங்கேற்ற மாணவர்களை மற்ற மாணவர்கள் மைதானத்தை சுற்றிலும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வந்தனர்.   கோகுலும் நண்பர்களோடு சேர்ந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வந்தார். … Read more

சென்னை மாநகராட்சி: ரூ.2,573 கோடி கடன்; ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.140 கோடி ரூபாய் நிலுவை!

’மக்களைத் தேடி மேயர்’, பள்ளி மாணவர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள், மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாடு நிதி அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டது சென்னை மாநகராட்சி பட்ஜெட். மேலும் சாலை மேம்படுத்துதலுக்கு 881.20 கோடி ரூபாய் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு 1,482.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகையில் வருவாய் இருப்பதோடு மத்திய, மாநில அரசுகளின் மானிய நிதிகளும் வருவாய் நிதியாகக் கணக்கிடப்படுகிறது. மொத்தமாக ரூ.7,686 … Read more

தமிழக அரசு அலுவலர்களுக்கு ரூ.103 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: பொதுப் பணித் துறை அறிவிப்புகள்

சென்னை: 8 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும் என்றும், அரசுப் பொதுக் கட்டடங்களை திட்டமிட்டு நிர்மாணிப்பதில் புதிய வடிவமைப்புக் கொள்கை வெளியிடப்படும் என்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு புதிய … Read more

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்” – பிரதமர் மோடி

போபால்: உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி போபாலில் இன்று கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்த வந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1 என என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஒரு விஷயத்தை நான் உறுதியாக நினைத்தேன். இதுகுறித்த செய்தி வெளியாகும்போது நிச்சயம் … Read more

விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா… ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை – முழு விவரம்!

Viral Video: சென்னை ரோகிணி திரையரங்கத்தில் நரிக்குறவ சமூகத்தினரை படம் பார்க்க அனுமதி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.  சென்னை விருகம்பாக்கத்தின் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ‘விடுதலை’ படம் பார்க்க 7 வயது குழந்தைகளுடன் வந்தவர்களுக்கு நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. அதாவது, 18 வயதிற்குட்பட்டோருக்கு அனுமதியில்லாத ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்ற விடுதலை படத்தை, குழந்தைகளுடன் பார்த்த ரசிகரிடம், திரையரங்க நிர்வாகம் … Read more

‘வந்தே பாரத் ரயில் – வளரும் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டு’ பிரதமர் மோடி பேச்சு

மத்திய பிரதேசத்தின் போபால் – டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். போபால் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 11வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ரயில் ஓட்டுநர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் திறமை, திறன் மற்றும் நம்பிக்கையை வந்தே பாரத் … Read more

வட கொரியாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை: அத்துமீறும் கிம் ஜாங் உன் அரசு

வட கொரியாவில் உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பை அகற்றப்படுவதாக தென் கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா- வட கொரியா பதற்றம் கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து அமெரிக்கா-தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் பிரம்மாண்டமான போர் பயிற்சியை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சிகள் போரை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் என்று வட கொரியாவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. Reuters மனித உரிமை மீறல் … Read more

இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் வைக்கம் போராட்டம் அந்த மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் : மு. க. ஸ்டாலின்

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள காயல் கரையோர மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம். வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார் ஸ்டாலின். மார்ச் … Read more

ராஜபாளையம் வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையம் வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு சென்றுள்ளார். அவரது வருகையை அறிந்து ராஜபாளையத்தில் திரண்ட 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தியபடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்டதுக்கும், நீட் விளக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து முழக்கம் ஏற்படுத்தப்பட்டது. … Read more