மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கைது

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு பயிலும் மாணவிகளை சாதி ரீதியாக ஒருமையில் விமர்சிப்பதாகவும், தரக்குறைவாகப் பேசி வருவதாகவும் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி பாரதி என்பவர் மதுரை நாகமலை புதுக்கோட்டை … Read more

விபத்தில் கணவரை இழந்த பெண்ணின் மறுமணத்தை காரணம் காட்டி இன்சூரன்ஸ் தொகையை மறுக்க முடியாது: ஐகோர்ட்

மும்பை: விதவை மறுமணமென்பது சமூகம் விலக்கி வைக்க வேண்டிய விஷயமல்ல. மறுமணம் செய்துகொண்டதாலேயே ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் விபத்திற்கான இழப்பீட்டுப் பணத்தை தர மறுப்பதும் சரியல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2010-ல் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்தைக் கோரியிருந்தார். ஆனால், அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டை மறுத்தது. இதனை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் அவருக்கு … Read more

கலைஞர் கொண்டு வந்த காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம்: பணிகள் மும்முரம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (ஏப்ரல் 1) காவிரி- தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக அதிமுக சார்பில் கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அமைச்சர் துரை முருகன் பதிலளித்து பேசினார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்! காவிரி- தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் தொய்வடைந்துள்ளது, என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கே.பி. முனுசாமி … Read more

Samantha: சினிமாவில் இருந்து ஒதுங்கும் சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் நடிகை சமந்தா உடல் நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாதென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளும் கஷ்டம் நிறைந்த ஆண்டுகளாக இருந்து வருகிறது. ​ RK Suresh: ஆருத்ரா கோல்டு மோசடி: நடிகர் … Read more

IPL 2023 பார்க்க ஜியோ, ஏர்டெல், Vi யின் சிறந்த 3GB டேட்டா திட்டங்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்காகவே ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகிய நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 3GB டேட்டா திட்டங்களை வைத்துள்ளன. நடக்கும் ஐபில் 2023 தொடரை நேரலையில் மிகவும் தரம் வாய்ந்த 4K தரத்தில் காண இந்த திட்டங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். Reliance Jio 3GB data plans 3GB டேட்டா ஒரு நாளைக்கு வழங்க ஜியோவிடம் மொத்தம் மூன்று திட்டங்கள் … Read more

ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்… அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாநில அரசு!

DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்தது.  மேலும், இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் மார்ச் 25ஆம் தேதி முடிவு … Read more

இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கைது!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவரை மும்பை போலீசார் கைது செய்தனர். மும்பை வந்த 6E-1052 என்ற விமானத்தில் ஸ்வீடனை சேர்ந்த ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளார். விமானப் பயணத்தின்போது அசைவ உணவு கேட்ட ஜோனஸ்க்கு அசைவ உணவை வழங்கிய பணிப்பெண், கட்டணம் செலுத்துவதற்காக ஏடிஎம் கார்டை கேட்டுள்ளார். அப்போது பணிப்பெண்ணின் கையை அவர் பிடித்து இழுத்ததுடன், சில்மிஷம் … Read more

விடுதி மாடியில் இருந்து விழுந்த பல்கலைக்கழக மாணவி மரணம்!

தமிழக மாவட்டம் மதுரையில் எம்.எட் மாணவி விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மாணவி தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகேஸ்வரி (25) மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மாடியில் இருந்து கீழே விழுந்தார். திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டதால் மாணவிகள் பலர் … Read more

பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை..!!

நெல்லை: பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். செல்லப்பா, அந்தோணி, வேதநாராயணன், மாரியப்பன், இசக்கிமுத்து ஆகிய 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று 6 பேர் விளக்கம் அளித்த நிலையில் இன்று 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இன்று நெல்லையில் ஆஜராகியுள்ள 5 பேரும் நேற்று, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கூறியிருந்தனர்.

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. பாலியல் புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேற்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் விடுப்பில் இருந்தனர்.