Rajini: ஜெயிலர் ரஜினியை பார்த்து தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்..! வைரலாகும் ட்வீட்..!

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இப்படம் துவங்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தான்.

மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் காரணமாகவே தற்போது ஜெயிலர் திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது.

Jailer: ஜெயிலர் படத்தில் நெல்சன் வைத்திருக்கும் ட்விஸ்ட்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்பிரைஸ்..!

மேலும் ஜெயிலர் படத்தை பற்றி பாசிட்டிவான பேச்சுகளே கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருவதால் இப்படம் ரஜினி எதிர்பார்த்த வெற்றியை தேடி தரும் என நம்பப்படுகின்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

சென்னை, கடலூர் என தமிழ்நாட்டில் இருக்கும் பல ஊர்களில் லைவ் லொகேஷனில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து ஒரு ரஜினியின் திரைப்படம் பல லைக் லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் செம ஸ்டைலாக கெத்தாக இருக்கின்றார்.

எனவே இதுபோன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் படத்தில் இருப்பதால் படம் கண்டிப்பாக மாஸ் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என பேசப்பட்டு வந்தது.

ரஜினியின் பாபா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி சொதப்பியதால் ஜெயிலர் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட ரஜினி விரும்பவில்லை, அதன் காரணமாகவே செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தது.

ஆனால் ரஜினி இந்த சென்டிமெண்டை எல்லாம் நம்பாது ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதமே வெளியிடுவதாக முடிவெடுத்தார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நடிகர் தனுஷ் ரியாக்ட் செய்தது தான் தற்போது செம வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் பிறந்த பிறகு பலரும் தனுஷிற்கும் ரஜினிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக பேசி வந்தனர்.

இந்த சமயத்தில் தனுஷ் தான் எப்போதும் தலைவரின் ரசிகர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஜெயிலர் படத்தின் அறிவிப்பை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹார்ட் ஸ்மைலி போட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தனுஷ் என்ன நடந்தாலும் தான் ஒரு நிரந்தர தலைவரின் ரசிகர் என நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.