பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு… ஊதி தள்ளுமா ’இந்தியா’ கூட்டணி? தரமான சம்பவம் வெயிட்டிங்!

மும்பையில் இந்தியா (INDIA) கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 28 அரசியல் கட்சிகள் கைகோர்த்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் யார் என்ற விஷயம் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

பிரசாந்த் கிஷோர் டார்கெட்

இதில் ஸ்டாலினை முன்மொழிந்து வருவது தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். இவருக்கும் இந்தியா கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இருப்பினும் இவரது பேச்சு தொடர்ந்து இந்தியா கூட்டணியை பற்றியே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நிதிஷ் குமார். இவரை எதிர்த்து தான் தனது சொந்த மாநிலமான பிகாரில் அரசியல் செய்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். நிதிஷ் குமாருக்கு அரசியல் செல்வாக்கே கிடையாது. உள்ளூரிலேயே யாரும் மதிக்க மாட்டார்கள்.

திமுக உடன் இணக்கம்

தேசிய அளவிலான கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு வகித்தால் எப்படி சரிப்பட்டு வரும் என்றெல்லாம் சரமாரியாக பேசி வருகிறார். ஏற்கனவே 2021 சட்டமன்ற தேர்தலுக்கு மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர். அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது. சபரீசன் தலைமையில் தனியாக ஒரு அரசியல் வியூக டீமை செட் செய்ய சில ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் ஒரு பேச்சு உண்டு.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோடியின் வெற்றிக்கு அச்சாரம்

அந்த அடிப்படையில் தான் ஸ்டாலினை இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிப்பது பற்றி பேசியிருக்கக் கூடும் எனக் கூறுகின்றனர். அதேசமயம் மற்றொரு அரசியல் கணக்கையும் வடக்கில் கொளுத்தி போட்டுள்ளனர். ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடி – அமித் ஷாவிற்கும் ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்து தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டவர் பிரசாந்த் கிஷோர் என்பதை மறந்துவிடக் கூடாது. அதெல்லாம் 2014 காலகட்டம்.

மக்களவை தேர்தல் வியூகம்

இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தலில் பாஜக எதிர்க்கட்சிகளிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள திட்டமிட்டு வருவதாக பேசப்படுகிறது. வாக்குகள் பிரிந்தால் பாஜகவிற்கு தான் சாதகமாக முடியும். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 300க்கும் கீழ் குறைந்தாலும் நல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் பெரும்பான்மைக்கு 272 இடங்களை கைப்பற்றினால் போதும். தெற்கில் சாதகமான வெற்றி கிடைக்காவிட்டாலும் வடக்கில் சில குறிப்பிட்ட மாநிலங்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.

பாஜக போட்ட கணக்கு

இவற்றின் எண்ணிக்கை 318 என வருகிறது. இதில் கவனம் செலுத்தினாலே 280ஐ தாண்டிவிட முடியும் என பாஜக கருதுகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மை என்பது பாஜகவிற்கு அவசியம். அந்த வகையில் பிரசாந்த் கிஷோரை பேச வைத்து இந்தியா கூட்டணியில் நெருப்பை பற்ற வைத்து, சண்டை மூட்டிவிட்டு அதில் குளிர்காய நினைக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா கூட்டணி அதிரடி

ஆனால் இந்த சலசலப்பிற்கு எல்லாம் மசிய மாட்டோம் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் பதிலடி கொடுக்கின்றன. பிரசாந்த் கிஷோர் என்ன தான் பேசினாலும் எங்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது. ஒருமித்த முடிவாக ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.