சென்னை: அடுப்படியில் அடைபட்டு கிடந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு இணையாக சாதிக்க துவங்கியுள்ளனர். பெண்களின் பெருமையை போற்றும்வகையில் வரும் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து சரித்திரம் படைத்து வரும் நிலையில் இன்றைய கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், பெண்களுக்கான சட்டதிட்டங்கள் ஆகியவையும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றது.