விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

கோட் படத்தை அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார் விஜய். தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் விருப்பத்திற்காக சென்னை கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோயில் கட்டியுள்ளார் விஜய். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்த கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் உடன் இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ்.

அதன் உடன், ‛‛நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் என்னுடைய ராகவேந்திரர் சுவாமி கோயிலை கட்டிய போது எங்கள் கோயிலில் ஒரு பாடலை பாடி தன் இருப்பை எங்களுக்கு அருளினார். இன்று விஜய் கட்டிய கோயிலுக்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டியதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை உணர்ந்தேன். அனைவரும் சாய்பாபா கோயிலுக்கு சென்று அவரின் அருளை பெறுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.