விஜய்யை தொடர்ந்து இந்த நடிகருடன் இணையும் மமிதா பைஜு!

Mamitha Baiju Next Movie Update: நடிகை மமிதா பைஜு ஜனநாயகன் படத்திற்கு அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

திருமணமாகி 25 நாள்களே ஆகுது… கணவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த மனைவி? கடலூரில் கொடூரம்

Tamil Nadu News: திருமணமாகி 25 நாட்களில் கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கடலூரில் புகார் ஒன்று வந்துள்ளது.

Aadhi: “பேய் பயம் இருக்கு… அஜித், விஜய் சாருடன் வில்லனாக நடிக்க ஆசை..'' – நடிகர் ஆதி

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சப்தம்’. ‘ஈரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி – அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அமானுஷ்ய புலனாய்வாளர் (paranormal investigator) அடிப்படையாகக் கொண்ட ஹாரர் திரில்லர் திரைப்படமான இது நாளை (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகத்திற்காக அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. சப்தம் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் நடிகர் ஆதி, “தெலுங்கில் கொஞ்ச நாள் … Read more

மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடெங்கும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. ஆனால் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன..இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு … Read more

தேர்தல் ஆணையம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவேன் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தவே தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பாஜக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு பாஜக … Read more

சாம்பியன்ஸ் டிராபி: அனைத்தும் இந்தியாவுக்கு சாதகம் – இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்

துபாய், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் … Read more

வங்காள தேசத்திற்கு ஆபத்து: ராணுவ தளபதி எச்சரிக்கை

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அங்கு முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியில் உள்ளது. வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக போராட்டங்களும் மோதல்களும் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக் அவர் கூறியதாவது: அதிகாரிகள் வழக்குகளில் சிக்கி இருப்பதால், இளைய அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை … Read more

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்… பின்னணி என்ன?

நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் ஏழு தடவை கர்ப்பம் அடைந்து அதை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சீமான் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்‌பேரில் வளசரவாக்கம் போலீஸார், சீமான் மீது மோசடி … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர் மீது 3 குற்ற … Read more