வட மாநிலங்களில் கனமழை: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு

புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீப காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் நீடித்த மழை விடிய விடிய பொழிந்தது. இதனால் டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள அரியானா மாநிலம் குருகிராம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

ரூட், கில் கூட அதை செய்ய தயங்குகிறார்கள்… ஆனால் புஜாரா.. – இங்கிலாந்து முன்னாள் வீரர் பாராட்டு

லண்டன், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், செதேஷ்வர் புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு பின் 3-வது பேட்டிங் வரிசையில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் (ஆகஸ்ட்) 24-ம் தேதி அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார். அதன் பிறகு இளம் வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். … Read more

கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் ; இலங்கை அதிபர் திட்டவட்டம்

கொழும்பு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருந்தார். இந்த நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார, … Read more

2025 Honda Elevate updated – 2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் எஸ்யூவி மாடலில் புதுப்பிக்கப்பட்ட ஆப்ஷனல் கிரில் மற்றும் டாப் ZX வேரியண்டில் ஐவரி நிறத்துடன் கருப்பு என டூயல் டோன் கொண்ட இன்டீரியர் வழங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.11.19 லட்சம் முதல் ரூ.15.71 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை அமைந்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு மேம்பட்ட சில வசதிகளை பெற்றுள்ள எலிவேட்டில் தொடர்ந்து 1.5 லிட்டர், 4 சிலிண்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 121hp மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 … Read more

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சவாலான காலத்தில் 0.5% நிகர NPA அடைவது ஆச்சரியமளிக்கிறது. வங்கிகள், குறைந்த NPAகளுடன், வீடுகள், MSMEகள், மற்றும் உள்கட்டமைப்புக்கு மலிவான, நிலையான கடனை வழங்குகின்றன. இது இந்திய நிதி அமைப்பில் தொடர்ச்சியான நம்பிக்கையை உறுதி செய்கிறது, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, … Read more

‘டெட்’ விவகாரம்: 1.5 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழகத்தில் 1.5 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பாமக தலைவர் அன்புமணி, “கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் 2011-2012 ஆண்டுக்கு பின் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிர்யர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் … Read more

20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: நாடு முழு​வதும் எத்​த​னால் கலந்த பெட்​ரோல் பயன்​பாட்​டுக்கு எதி​ராக வழக்​கறிஞர் அக் ஷய் மல்​ஹோத்ரா உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். அவர் தனது மனு​வில், “2023-க்கு முன்பு தயாரிக்​கப்​பட்ட கார்​கள் மற்​றும் இரு சக்கர வாக​னங்​கள் மற்​றும் சில பிஎஸ்-6 மாடல் வாக​னங்​கள் அதிக எத்​த​னால் கலந்த எரிபொருள் பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில் வடிவ​மைக்​கப்​பட​வில்​லை. பெட்​ரோலில் 20 சதவீதம் எத்​த​னால் கலப்​ப​தால் இயந்​திர தேய்​மானம், எரிபொருள் இழப்பு மற்​றும் வாகன பராமரிப்பு செலவு அதி​கரிக்க … Read more

ரியல்மி 15T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலையில், சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய சந்தையில் ரியல்மி 15T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை சீன தேசத்தை சேர்ந்த ரியல்மி நிறுவனம், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் மற்றும் பிரீமியம் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. … Read more

நான் முதல்வன் திட்டம் : தமிழ்நாட்டு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்

Naan Mudhalvan scheme : நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டம் குறித்த தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

”தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்’: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை:  டிஜிபி சங்கர் ஜிவால்  ஆகஸ்டு 31ந்தேதி  ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்யாத தமிழ்நாடு அரசு,  சீனியாரிட்டியில் 8வது இடத்தில் உள்ள வெங்கட்ராமன்-ஐ  பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது. இது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்டு ”மக்கள் கண்காணிப்பகம்” நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல சென்னை உயர்நீதிமன்றத்திலும் … Read more