கர்நாடகா பார்முலாவை களமிறக்கும் ராஜஸ்தான் காங். அரசு- முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்!

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: ராஜ்ஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளார் மாநில முதல்வர் அசோக் கெலாட். 200 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது ராஜஸ்தான் மாநிலம். இம்மாநில சட்டசபை தேர்த ல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த 5 ஆண்டுகளாகவே மூத்த காங்கிரஸ் தலைவர் தலைவர் சச்சின் … Read more

சர்ரென எகிறிய தக்காளி விலை.. 2 நாட்களில் கடுமையான விலை உயர்வு.. அதிர்ந்த பொதுமக்கள்.. என்ன காரணம்?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை திடீரென டபுள் மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சைவ உணவுகளிலும், அசைவ உணவுகளிலும் தக்காளி தவிர்க்க முடியாத பொருள். ஆனால், தக்காளி விலை எல்லா காலங்களிலுமே நிலையற்றது. உற்பத்தியைப் பொறுத்து விலையும் சர்ரென இறங்கும், திடீரென கடுமையாக … Read more

பால் வண்டியே கிளம்பல.. 3வது நாளாக இன்றும் சென்னையில் ஆவின் பால் விநியோகம் கடும் பாதிப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சனைகள் தொடர்வதால், 3வது நாளாக இன்றும் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 6 மணி வரை பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டது. சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் 14 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்திய பால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் … Read more

செங்கோல்.. நிர்மலா சீதாராமனுடன் சேகர் பாபு ஏன்? வந்து விழுந்த கேள்வி – ஸ்டாலின் அளித்த “பளிச்” பதில்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: செங்கோல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழ்நாடு ஆளுநரும் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டது விவாதப் பொருளான நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்து உள்ளார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் … Read more

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டு எல்லை நகரமான தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மோரே நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களுக்கு எதிராக குக்கி இனக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்களுடைய பழங்குடிகள் பிரிவு பட்டியலில் மைத்தேயி இனக்குழுவினரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி மக்களின் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரையிலான மோதல்களில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். … Read more

மேகாலயா மாநிலத்திலும் வெடித்தது இடஒதுக்கீடு சர்ச்சை- புதிய நியமனங்கள் அனைத்துக்கும் அதிரடி தடை!

India oi-Mathivanan Maran ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் புதிய அரசு நியமனங்கள் அனைத்தையும் அம்மாநில அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்யவும் ஒரு குழுவை மேகாலயா மாநில அரசு அமைத்துள்ளது. மணிப்பூர் வன்முறை: நாட்டின் பல மாநிலங்களில் இடஒதுக்கீடு விவகாரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி இன மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி, நாகா … Read more

பிரபல நடிகை திடீர் மரணம்.. ஹோட்டல் ரூமில் என்ன நடந்தது? உள்ளாடையில் \"விந்தணு\"?.. கதறும் ரசிகர்கள்

India oi-Hemavandhana வாரணாசி: பிரபல நடிகையின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இது கொலையா? தற்கொலையா? என்ற பரபரப்பும் கிளம்பி உள்ளது. போஜ்புரி மொழியில் பிரபல நடிகையாக இருந்தவர் அகன்ஷா துபே. .. இவர் உத்திரப்பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர்.. சின்ன வயது முதலே நடிப்பு மீது அதிக ஆர்வம்.. நடனம் என்றால் கொள்ளை பிரியம்.. இதற்காகவே, டிக் டாக்கை சரியாக பயன்படுத்தி, அதன்மூலம் மக்களிடம் குறுகிய காலத்தில் பிரபலமானார். ஏராளமான ரசிகர்களும் குவிந்தனர்… இன்ஸ்டாகிராமில் … Read more

ஞானவாபி: இந்து பெண்கள் மனுவை விசாரிக்கலாம் எனற தீர்ப்புக்கு எதிரான முஸ்லிம் தரப்பு மனு டிஸ்மிஸ்!

India oi-Mathivanan Maran அலகாபாத்: வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் இந்து பெண்கள் வழிபாட்டு உரிமை கோரும் மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான முஸ்லிம் தரப்பான அஞ்சுமன் மஸ்ஜித் கமிட்டி மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. உத்தரப்பிரதெச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ளது ஞானவாபி மசூதி. இம்மசூதி வளாக சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலையை வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். … Read more

ஏமாற்றி, கடத்தி 80 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பெண்.. ஓமனுக்கு இந்திய பெண்கள் கடத்தப்படுவது எப்படி?

International oi-Velmurugan P மஸ்கட்: இந்திய பெண் ஒருவரை ஏமாற்றி கடத்தி ஓமன் நாட்டிற்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், அந்த பெண்ணை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீட்டுள்ள நிலையில், அவர் 25 முதல் 30 பெண்கள் அமர்தசரஸ் நகரில் இருந்து ஓமனுக்கு கடத்தி விற்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், வாழ்வில் வறுமையை வெல்வதற்காக வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்ய … Read more

தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும்: அமெரிக்காவில் ராகுல்

International oi-Mathivanan Maran கலிபோர்னியா: இந்தியாவில் அரசியல் சாசனம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது; தமிழ் மொழிக்கு அச்ச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும் என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியர்கள் புத்திசாலிகள் என அமெரிக்கா சொல்கிறது எனில் அதற்கு காரணம் நீங்கள்தான். இந்தியாவின் மரியாதையையும் கலாசாரத்தையும் சுமந்து நிற்கிறீர்கள். இந்திய அரசியல் சாசனம் என்பது மாநிலங்களின் … Read more