நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

டேராடூன் நாளை பிரதமர் மோடி உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாடு ‘அமைதியில் இருந்து செழிப்பிற்கு’ என்ற கருப் பொருளில் நடைபெறுகிறது. மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். நாளை பிரதமர் மோடி இந்த மாநாட்டை ர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.  நாளை இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி … Read more

நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னை உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையில் மரங்கள் மற்றும் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால்,  நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 2 வட்டங்களில் நாளை … Read more

நாளை மிசோரம் முதல்வராகப் பதவி ஏற்கும் லால் துஹோமா

அய்ஸ்வால் நாளை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால் துஹோமா பதவி ஏற்கிறார். மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இ;கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. மேலும் பாஜகவுக்கு 2 இடங்களும் காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைத்தது. நேற்று முன்தினம் ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் … Read more

சென்னை வெள்ளம்: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆலோசனை…

சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில்,  இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம்,  க்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு (ம) நிவாரணப் பணிகள் குறித்தும்,  முதலமைச்சர் ஸ்டாலின்  எடுத்துரைத்தார். தொடர்ந்து, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் … Read more

ரூ. 4,000 கோடி என்னாச்சு? வெள்ளை அறிக்கை கேட்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க ரூ. 4,000 கோடி செலவில்  வடிகால் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அதன் 98 சதவிகித பணிகள் முடிந்து விட்டதாக அமைச்சர்களும், மேயரும் கூறி வந்த நிலையில், அந்த ரூ.4000 கோடி என்னாச்சு என்பது  குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம், அதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற … Read more

இன்று தெலுங்கானா புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு : சோனியா காந்தி பங்கேற்பு

ஐதராபாத் இன்று தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.. நடந்து முடிந்த தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதியை ஆட்சியில் இருந்து அகற்றியது. காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவராகவும், தெலுங்கானாவின் அடுத்த முதல்வராகவும் அந்த கட்சியின் மாநில தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டியை கட்சி தலைமை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. சுமார் 56 வயதாகும் ரேவந்த் ரெட்டி இன்று தெலுங்கானாவின் புதிய முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். மதியம் 1 மணிக்கு இந்த பதவியேற்பு விழா … Read more

கட்டணம் செலுத்திய பார்சல் பெட்டி மீது உணவகத்தின் பெயரை போட்ட கோவை உணவகத்திற்கு நுகர்வோர் மன்றம் அபராதம்

நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் பேக்கிங் பொருட்கள் அல்லது கொள்கலனில் லோகோ அல்லது பெயரை பதிவிடும் நடைமுறையை நிறுத்துமாறு நுகர்வோர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, கட்டணம் செலுத்திய பார்சல் கொள்கலனில் லோகோவைப் பயன்படுத்தியதற்காக கோவையைச் சேர்ந்த உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது. வடவள்ளி மருதமலை சாலையில் உள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் (ரத்னா ஸ்ரீ ஆனந்தாஸ் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட்) உணவகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி ப்ரைட் ரைஸ் பார்சல் வாங்கிய கோயம்புத்தூர் சித்தாபுதூரைச் சேர்ந்த ஷேக் … Read more

சிங்கப்பூரின் உயரிய விருது பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர்

சிங்கப்பூர் இந்தியப் பெண் எழுத்தாளர் மீரா சந்த் சிங்கப்பூரின் உயரிய விருதைப் பெற்றுள்ளார் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தச் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது வழங்கப்படும். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான விருதைப் புகழ்பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளரான மீரா சந்த் பெற்றுள்ளார். சுமார் 81 வயதாகும் மீரா சந்த் பல்வேறு கலாச்சார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர் ஆவார்.  இந்த உயரிய விருதை மீரா சந்த் உடன் நாவலாசிரியர் … Read more

நேற்று சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை பிற மாநிலங்களுக்குச் சென்னை சென்டிரலிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.  தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மிக்ஜம்’ புயலால் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை சென்டிரலில் இருந்து பிற மாநிலங்களுக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முழு நேரமாக ரத்து செய்யப்பட்டது.  இதில், சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத் செல்லும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12603), கேரள மாநிலம் ஆலப்புழாவில் … Read more

இன்றுடன் திருவண்ணாமலை தீபக் காட்சி நிறைவு

திருவண்ணாமலை இன்றுடன் திருவண்ணாமலையில் தீபக் காட்சி நிறைவு பெறுகிறது. கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கடந்த 26 ஆம் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை உச்சியில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும். தினமும் மாலை 6 மணிக்கு மலை … Read more