`தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும்!’  உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர  தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் கடந்த 1960ம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனவும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய … Read more

ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்….

சென்னை: ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, நாளை  தமிழகம் முழுவதும்  கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வருடத்திற்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாளை  சிறப்பு கிராம சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு கிராம … Read more

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! முதலமைச்சரின் புத்தநாள் டிவிட்…

சென்னை: அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே என உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 23 ஆம் நாள் உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) என கொண்டாடப்படுகிறது. உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் … Read more

தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.” இலங்கை மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தென்தமிழகம் உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 23.04.2022: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் … Read more

தமிழக மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மறுக்கும் மத்தியஅரசின் நடவடிக்கையை விமர்சிக்கிறது கார்ட்டூன்… ஆடியோ

தமிழக மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மறுக்கும் மத்தியஅரசின் நடவடிக்கையை விமர்சிக்கிறது கார்ட்டூன்… கார்ப்பரேட்டுகளுக்காக ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டுகிறது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/pari-cartoon-2022-04-23-at-1.24.13-PM-1.ogg

நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் -வணிக நீதிமன்றம் திறப்பு! வழக்கறிஞர் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும், தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்து முதல்வர் ஸ்டாலின்,  வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக அறிவிப்பினை வெளியிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடவசதி வழங்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ. 20.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள நீதிமன்றக் கட்டடத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, சென்னை, எழும்பூரில், … Read more

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத்தேர்வு 2மணி நேரமாக குறைப்பு 

சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.  11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. … Read more

தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற கவர்னர் கான்வாய் மீதான தாக்குதல் மற்றும் நெல்லையில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பல்லாவரம் மார்க்கெட் சென்ற புஷ்பவனம் கும்புசாமியின் போன் திருடுபோனது குறித்து புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றபோது, பாதுகாப்பு கொடுக்க காவலர்கள் இல்லை என்று கூறியது போன்ற நடவடிக்கைகள் … Read more

வடபழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி உள்பட 10 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்க இலவச பிரசாதம்! சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழகத்தில் உள்ள 10 முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி சென்னை,  வடபழனி முருகன் கோயிலில் பிரசாத திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அதன்படி இன்றுமுதல், வடபழனி ஆண்டவர் திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், திருவரங்கம்  அரங்கநாதசாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ,மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பண்ணாரி … Read more

எவர்கிரீன் (84) எஸ்.ஜானகி…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்குத் தெரிந்த வரையில் எஸ்.ஜானகி மிகப்பெரிய பாடகி என்றாலும் அவருடைய வாழ்க்கையில் வெற்றியும் அங்கீகாரமும் அவருக்கு தாமதமாகத்தான் கிடைத்தன. இந்தக் கோபத்தை அவரே ஒருமுறை நன்றாக வெளிப்படுத்தினார். 2013ஆம் ஆண்டு.மத்திய அரசின் மத்திய அரசின் மிக உயர்ந்த மூன்றாவது விருதான, பத்ம பூஷண் அறிவிப்பு. ஆனால் ஜானகியோ தனக்கு வேண்டவே வேண்டாம் என்று விருதையே நிராகரித்தார். ஒரு இசையரசின் தன்மான உணர்வு அது.. ஆறின கஞ்சி பழங்கஞ்சி … Read more