மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்வு!

இலங்கையில் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 230 ஆக வலுவடைந்ததையடுத்து நேற்றைய தினத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்திருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களின் படி மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஒன்றின் விற்பனை விலை … Read more

வெளிநாட்டு பணியாளர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி செய்தி

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 20 ரூபா ஊக்கத்தொகையாக வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்கள் பணம் அனுப்புவதற்கு அதிக சலுகைகளும் கிடைக்கும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு பணியாளர்கள் பணம் அனுப்பியதற்காக … Read more

இலங்கையில் மயில் உள்ள பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. மயில்களில் இருந்து குறித்த நோய்த் தொற்று பரவுவதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள் தற்போது ஈரப்பகுதிக்கு படிப்படியாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும். … Read more

பசிலின் அதிரடி உத்தரவு – நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 பொருட்களுக்கு தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், … Read more

பொருளாதார நிபுணர் வெளியிட்டு முக்கிய தகவல் – கலக்கத்தில் இலங்கை மக்கள்

இலங்கையின் தற்போதைய நிலைமை காரணமாக பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் வணிகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவடைந்து செல்கின்றமை மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என என அவர் எச்சரித்துள்ளார். நாட்டின் பணவீக்கம் தற்போது 16.8 வீதமாக உள்ள நிலையில், அது 20 … Read more

13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த தவறியுள்ள நிறுவனங்கள் அடையாளம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) நேற்றைய அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியனவும் பணம் செலுத்தத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது. அதிலும் மின்சார சபை 73 பில்லியன் ரூபாயினையும், ஸ்ரீலங்கன் … Read more

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவை இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இச்சேவையின் முதலாவது பயணம் சென்னையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி முதல் பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய அம்சமாக இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு … Read more

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவதற்கு தடை! மத்திய வங்கி அதிரடி

வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அங்கீகரிக்கப்படாத பணம் மாற்றுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மத்திய வங்கியின் பரிவர்த்தனை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, 011 2398827, 011 2477375 அல்லது 011 2398568 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி … Read more

கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட் சிறுமி! சந்தேகநபர் சிக்கினார்: பொலிஸார் வெளியிட்ட மேலதிக தகவல்(Photo)

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். காதலை நிராகரித்தமையே, இந்த கொலைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை அடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ஹாலிஎல பொலிஸாரினால் … Read more

இலங்கையில் தேசிய அரசாங்கம் – பச்சை கொடி காட்டினார் கோட்டபாய

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இது தொடர்பான சர்வ கட்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் … Read more