பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்

லண்டன்: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லும் சடங்கு ஊர்வலங்கள், பின்னர் வின்ட்சரில் அவர் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு எடுத்து செல்வது என ராணியின் பயணம், பிரிட்டிஷ் முடியாட்சியின் பண்டைய மரபுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. காலங்கள் மாறினாலும் தங்கள் மரபை மாற்றாமல் அரச குடும்பம் பல நூற்றாண்டு பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுகிறது. பிரிட்டனின் ராயல் நேவி பணியாளர்கள், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை பீரங்கி வண்டியில் வைக்கப்பட்ட … Read more

பிறந்தநாளில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பரிசு இதுதான்!

தமிழ் திரையுலகில் இந்த ஜோடி எப்போது திருமணம் செய்துகொள்ள போகும் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தான்.  அனைவரும் எதிர்பார்த்தபடியே கடந்த ஜூன்-9ம் தேதி நெருங்கிய நபர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.  திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் இந்த இருவரின் திருமண புகைப்படங்கள் ரசிகர்களின் டைம்லைனை ஆக்கிரமித்து இருந்தது.  திருமணம் முடிந்த பிறகும் இவர்கள் அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்களும் இணையத்தை அலங்கரித்து … Read more

செல்பி மோகத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் பறிபோகும் உயிர்கள்

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் விக்னேஷ்(20), கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ்(16), 12ம் வகுப்பு படித்து வந்தார்.  இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து மதகின் அருகே இறங்கி நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.  அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து முழ்கினார்கள். இதனை … Read more

15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாஜக பிரமுகர்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பா.ஜ. பிரமுகர் உள்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.  சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து,  வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  அதன்படி, சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த … Read more

44 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் ஆகும் கமல்-ரஜினியின் படம்?

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்றளவு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  அன்றிலிருந்து இன்றுவரை இருவரின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு குறைந்தபாடில்லை, இந்த இரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போதும் திரையரங்குகள் விழாக்கோலமாக காட்சியளிக்கும்.  கமல்-ரஜினி இருவரும் தற்போது தனித்தனியாக தான் நடித்து வருகின்றனர், ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த இருவரும் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.  ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் … Read more

சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!

ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம்,  நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை  உருவாக்குவதாக உள்ளது. நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்கள் அப்பாற்பட்டவையா?  நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன. சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்களே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியும். நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர்.  அந்த வகையில் … Read more

பெங்களூரில் கைது செய்யப்பட்ட உறவினர்களை விடுவிக்க கோரும் இலங்கைவாழ் தமிழர்கள்

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் அண்டை நாடுகளுக்கு செல்லும் இலங்கை மக்களில் சிலர் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்ததால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள்ல் கோரிக்கை விடுத்துளனர். தமது குடும்பத்தினை எவ்வாறாயினும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக அவர்கள் முயன்றனர். இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில் வைத்து கைதுசெய்யப்பட்ட 38 பேரையும் விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள், இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த … Read more

ஆட்டோ டிரைவருக்கு ஜாக்பாட்! ஓணம் லாட்டரியில் 25 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி

திருவனந்தபுரம்: கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. ஓணம் பம்பர் 2022 (BR-87) அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது. 25 கோடி ரூபாய் முதல் … Read more

3 நாள்கள் கழித்துதான் ரிவ்யூ; தயாரிப்பாளர் சங்கம் போட்ட தீர்மானம் – கடுப்பில் யூட்யூபர்கள்

தமிழ்த் திரைப்டத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (செப். 18) காலை நடைபெற்றது. சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையிலும், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலையிலும் பொதுக்குழு நடைபெற்றது.  பொதுக்குழுவில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானதாக, திரைப்பட விமர்சனங்களை, அதன் வெளியீட்டு … Read more

பாஜகவை அகில இந்திய அளவில் தனிமை படுத்த வேண்டும்: தொல் திருமாவளவன்

மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் 77வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடமான உரிமை களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்,  சனாதனத்தை வேரறுக்க போராடிய கருத்தியல் போராளி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளில் இந்தியாவை சூழ்ந்துள்ள சனாதனத்தை கோலாச்ச துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் … Read more