நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் செல்ல வேண்டும்

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. எதிர்க்கட்சியினர் பொறுப்பை ஏற்க மறுத்தனர். பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என்றார்கள். எல்லா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் … Read more

உலக நீர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் சுத்திகரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் உலக நீர் தின விழா நேற்று (22) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை … Read more

தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதியில் நடத்தப்படாது! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்தாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.   உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள்  இம்மாதம் 28 மற்றும் 31ஆம் திகதிகளிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.   எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் இந்த நிலையில்,  இந்த வாக்கெடுப்புக்களை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.   மேலும், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு  நடவடிக்கைகளில் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் … Read more

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

பிரச்சினைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளாவிட்டால், பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும்இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று … Read more

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

சிறந்த நூறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அருங்கலைகள் … Read more

குறைந்த வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல்! அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது

குறைந்த வருமானம் பெறும் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இது குறித்து பிரதமர் அறிவித்துள்ளார்.  இதன்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழி  சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது என்றும், … Read more

இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் மாலி படைக்குழுவின் மேலதிக படையினருக்கு நம்பிக்கையை வலுப்படுத்தும் ஐ.நா முன்பணி குழு

தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயார் நிலையை மதிப்பீடு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை (21) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் சந்தித்தது. ஐ.நா தூதுக்குழுவில் திரு. ஜேம்ஸ் விக்டர் டி ரோகோல், கேணல் லாரன்ஸ் கபினா, லெப்டினன் கேணல் ராஜீவ், திரு. மார்க் … Read more

19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களில் வெற்றி

அபுதாபியில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.   இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் 298 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் துவிந்து ரணதுங்க 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தினுர கலுபஹன 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை … Read more

மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை – ரணில்

நம்நாட்டு பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறைக்கப்படவுள்ள விலை அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவால் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவில் குறைக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இந்த விலைக்குறைப்பானது எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link