முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே இன்று சேவைகள்
அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இன்றைய தினம் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமையன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்கூட்டியே திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் … Read more