கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒரு நாள் சேவை: வவுனியா, கண்டி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று முதல்
கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் உள்ள குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் மூலம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் வவுனியா, கண்டி, மாத்தறை ஆகிய பிரதேசங்களில், இந்த ஒருநாள் சேவை மூலம் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.