பெற்றோல் , டீசலுடனான மூன்று கப்பல்கள்…..

பெற்றோல் மற்றும் டீசலுடனான மூன்று கப்பல்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு கப்பல் எதிர்வரும் 13 அல்லது 14ஆம் திகதியில் நாட்டுக்கு வரவுள்ளது. இதேபோன்று இரண்டாவது கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி அல்லது 31ஆம் திகதி வரவுள்ளது. மூன்றாவது கப்பல் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி அல்லது 15ஆம் திகதி வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம்

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இரண்டு வாரங்களுக்கு முடக்க நிலை பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி … Read more

இந்திய – இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான, 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

சுற்றுலா இந்திய மகளிர் அணிக்கும், இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தினரால் வடக்கு மாணவர்களுக்கு பூப்பந்தாட்ட பயிற்சி

கிளிநொச்சியில் உள்ள இலங்கை இராணுவ துருப்புக்கள் அண்மையில் (ஜூன் 28) கிளிநொச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூப்பந்து பயிற்சி பட்டறையை ஒன்றை நடாத்தினர். கிளிநொச்சி விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் கிளிநொச்சியிளுள்ள 6 பாடசாலைகளைச் சேர்ந்த 77 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் கலந்துகொண்டதாக இராணுவ ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாடசாலை மாணவர்களிடையே பூப்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பட்டறை கிரிஷாந்த கொடஹேவா மற்றும் லெப்டினன்ட் ஏ.பி.சி. கொடஹேவா ஆகியோரால் நடத்தப்பட்டது. பயிற்சி செயலமர்வில் கலந்துக்கொண்ட … Read more

நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 573 கோவிட் தொற்று உறுதியாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆறு நாட்களில் 71 கோவிட் தொற்று உறுதியளார்கள் பதிவாகியுள்ளனர். மீண்டும் கோவிட் அபாயம் மீண்டும் கோவிட் தொற்று சமூகத்தில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், சுகாதார வழிமுறைகளை … Read more

படையணிகளுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப் – 2022 இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ‘ஏ’ அணி வெற்றி

பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் படையணிகளுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப் – 2022 போட்டி தொடரின் வியாழன் மாலை (30) நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இப்போட்டியானது ஏழு அணிகளின் பங்கேற்புடன் 22 ஜூன் 2022 முதல் ஜூன் 30, 2022 வரை நடைபெற்றது. பிரதான நுழைவாயிலில், இராணுவ வலைப்பந்தாட்டக் குழுவின் தலைவர் பிரிகேடியர் சி.எஸ்.திப்போதுகே அவர்களினால் இராணுவத் தளபதி வரவேற்கப்பட்டதுடன், இறுதிப் போட்டியாளர்கள் … Read more

கொழும்பு-காலி பிரதான வீதியின் அம்பலாங்கொட தற்காலிகமாக ……..

கொழும்பு – காலி பிரதான வீதியின் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்முதுனாவ சந்தியில் இருந்து ஹிக்கடுவ, குமாரகந்த சந்தி வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடல் அலை கரையைக் கடந்துள்ளமையினாலேயே இந்த வீதி மூடப்பட்டுள்ளது. கடல் அலை கரையைக் கடந்துள்ளதனால் குறித்து வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடல் நீர், மணல் உட்பட கடற்கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளன. ஆகவே, மாற்றுவீதிகளை போக்குவரத்திற்குப் பயன்படுத்துமாறு பொலிஸ் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை முதல் முழுமையாக முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவை! வெளியான தகவல்

தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தனியார் பேருந்து சேவை அத்துடன் நாளை முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட தனியார் பேருந்து சேவை! சுமார் … Read more

லாப் எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலவாணி நெருக்கடி காரணமாக வர்த்தக, கைத்தொழில் மற்றும் சமையலுக்கு தேவையான எரிவாயுவை இறக்குமதி செய்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறுவனம், கடன் பத்திரத்தை … Read more

சில இடங்களில் 100 மி.மீ க்கும் மேற்பட்ட கடும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022 ஜூலை 03ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 … Read more