முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் எம்.பி பதவி செல்லாது! – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடகாவில் ஹஸ்ஸன் (Hassan) மக்களவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி பதவி செல்லாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பிரஜ்வல் ரேவண்ணா அதில், ஒரு மனுவை அதே … Read more

93 சதவிகித ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களில் 93% திரும்ப பெறப்ப்ட்டுள்ளதாக ரிசர் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் … Read more

தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவுள்ளோம்.. நிதிஷ் குமார் பேட்டி

மும்பை, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது; இன்று இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே இரண்டு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் தீர்மானங்கள் என்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி சொல்லப்பட்டுவிட்டது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் எங்களது பணிகளை தொடர்வோம். யார் உலகின் மைய சக்தியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறாரோ, அவர் தோற்கடிக்கப்படுவார். நாங்கள் சோர்வடைந்து … Read more

New Tata Nexon – புதிய 2023 டாடா நெக்ஸான் எஸ்யூவி அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்ஸான் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் முற்றிலும் மேம்பட்ட டிசைன் வடிவமைப்பினை கொண்டு கூடுதலாக பல்வேறு வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில், விலை செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 4 விதமான கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் என இரண்டு என்ஜின் ஆப்ஷனில் … Read more

“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!'' – எடப்பாடி பழனிசாமி கூறும் விளக்கம் என்ன?

அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் தயாராகிவரும் வேளையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான, `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தங்களின் திட்டத்தை பா.ஜ.க தற்போது கையிலெடுத்திருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் செப்டம்பர் … Read more

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு

சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை … Read more

மத்திய அமைச்சர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: இளைஞர் பலி| Shooting at Union Ministers House: Youth Killed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: உ.பி.,யில் மத்திய அமைச்சர் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 30 வயது இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கவுசால் கிஷோர், இவரது வீடு லக்னோ அருகே பிகாரியா என்ற கிராமத்தில் உள்ளது.இவரது வீட்டில் இன்று 30 வயது இளைஞர் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளைஞர் பெயர் வினாய் ஸ்ரீவஸ்தவா என்பதும், … Read more

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

புதுடெல்லி, மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர். பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,”நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் … Read more

Aprilia RS 440 teaser – செப்டம்பர் 7.., ஏப்ரிலியா RS 440 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுகம்

மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஏப்ரிலியா RS 440 ஸ்போர்ட்டிவ் பைக் மாடலை செப்டம்பர் 7, 2023-ல் பிரசத்தி பெற்ற கேடிஎம் RC 390 மற்றும் கவாஸாகி நின்ஜா 400 பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்க உள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வந்த RS440 இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாப்ப்புள்ளது. Aprilia RS 440 ஏப்ரிலியா பைக் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற RS660 மாடலின் என்ஜினை … Read more

நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி! – எச்சரித்த தங்கம் தென்னரசு?

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில், 51 பேர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நான்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதனால் அனைத்து மண்டலங்கள் மற்றும் நிலைக்குழுக்களின் தலைவர்களாக தி.மு.க கவுன்சிலர்களே தேர்வானார்கள். தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பி.எம்.சரவணன், மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருக்கிறார். துணை மேயராக கே.ஆர்.ராஜூ இருக்கிறார். மேயர் சரவணன் மாநகராட்சி மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலாகவே கருத்து வேறுபாடு நிலவுகிறது. தங்களைக் கேட்காமல் மேயர் சரவணன் … Read more