பெங்களூரு- மைசூரு இடையேயான விரைவுச்சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பெங்களூரு, பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் இந்த விரைவுச்சாலையில் செல்ல முடியும். இந்த சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை உள்பட ரூ.16 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார். இந்த சாலை மூலம் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவாக செல்ல … Read more

அடுத்தடுத்து நடக்கும் ரெய்டுகள்… “காங்கிரஸ் பாணியையே பாஜக-வும் தொடர்கிறது!" – அகிலேஷ் யாதவ்

சமீபகாலமாகவே காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள், அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர், பிரதமர் மோடிமீது பல விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவும் அமலாக்கத்துறையின் இந்த சோதனை மற்றும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருக்கிறார். அகிலேஷ் யாதவ் அகமதாபாத்தில் நேற்றைய தினம் (11-3-23) பத்திரிகையாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “கடந்த காலங்களில் குஜராத்தைச் சேர்ந்த … Read more

அழிவின் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தான்! கேலி செய்கிறார்கள்..வேதனை தெரிவித்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் பொருளாதார அழிவின் விளிம்பில் இருப்பதாக இந்திய ஊடங்கங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்கள் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் பாகிஸ்தான் கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.272க்கு அங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது. இம்ரான் கான் வேதனை இந்த நிலையில் … Read more

செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் உள்பட 30 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் மீண்டும் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு – உரிய விசாரணைக்கு உத்தரவு

கொல்கத்தா, இந்தியாவில் அண்மையில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைறெ்று வருகிறது. இந்த நிலையில், மேற்குவங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ரெயில் மீது திடீரென்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ரெயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. கல்வீச்சு தாக்குதலில் பயணிகள் … Read more

`ராஜராஜ சோழன் படையிலிருந்த அலங்கு; கிரேடன்; சிப்பிப் பாறை' – தஞ்சை நாய்கள் கண்காட்சி ரவுண்ட் அப்

தஞ்சாவூரில் முதன் முதலாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பங்கெடுப்பதற்காக பலரும் தாங்கள் வளர்க்கும் நாய்களை அழைத்து வந்தனர். தங்களின் நாய்களுக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர். தஞ்சாவூர் அருகே உள்ள மாதா கோட்டையில் மிருகவதை தடுப்புச் சங்கம் அமைந்துள்ளது. அதில் கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் நாயுடன் மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் நாய்கள் கண்காட்சி என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களை கடந்தார் விராட் கோலி!

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 150 ரன்களை கடந்துள்ளார். இந்திய அணி தற்போது 5 விக்கெட்  இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவை விட 38 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் தந்திரமாக கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்கர் மீது வழக்கு | US citizen booked for smoking in bathroom, misbehaving with passengers on Air India London-Mumbai flight

மும்பை: லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தந்திரமாக கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்க பயணி மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லண்டனில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அப்போது அமெரிக்க குடிமகனான ரமாகாந்த் (37) என்பவர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவர் குடிப்போதையில் இருந்ததால், விமானத்தில் பயணம் செய்த சக பயணியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இந்த பயணியை விமான ஊழியர் எச்சரித்துள்ளார். இதையடுத்து ரமாகாந்த் விமானத்தின் அவசர … Read more

லாலு பிரசாத் யாதவ்: "ரூ.600 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கிறது!" – ரெய்டு குறித்து அமலாக்கத்துறை

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், 2004-2009 வரை ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என 2021-ல் சி.பி.ஐ விசாரணையை முடித்துக்கொண்டது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கை மீண்டும் தோண்டியெடுத்து, லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி, மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட மொத்த குடும்பத்தையும் விசாரித்துவருகிறது. தேஜஸ்வி யாதவ், ராப்ரி … Read more

வெளிநாட்டுப் பெண்ணை 6 ஆண்டுகளாக மிரட்டி துஷிரயோகம் செய்துவந்த மும்பை சிஓஓ கைது

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக போலந்து நாட்டைச் சேர்ந்த சக ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர் கைது செய்யப்பட்டார். போலந்து நாட்டுப் பெண் போலந்து நாட்டவரான தனது சக ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர், அப்பெண்ணுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகவும், அப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்து அவரது உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் கசியவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் காந்தி, மும்பையின் புறநகர் … Read more