கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிப்பு!!

டெல்லி : ஒன்றிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆஸி.,யில் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதலுக்கு இடம் இல்லை: பிரதமர் அல்பானிஸ் உறுதி| Attacks on Hindu temples have ‘no place in Australia’: PM Albanese

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் எந்தவித பிரிவினைவாத செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது எனக்கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, அல்பானிஸ் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை மதிக்கும் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும் என மோடியிடம் உறுதி அளித்துள்ளேன். பிரிவினைவாத நடவடிக்கைகளை நாங்கள் பொறுத்து … Read more

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை பெண் அதிகாரி கைது

குடகு- ரூ.50 ஆயிரம் லஞ்சம் குடகு மாவட்டம் மடிகேரியில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூர்ணிமா. இந்த நிலையில் பூர்ணிமா, வோடேகாடு பகுதியில் வனக்காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக ஆவணத்தை உருவாக்கி, அந்த வனக்காவலருக்கு வழங்கப்படும் மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்தை தனக்கு கொடுக்கும்படி தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியிடம் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த அதிகாரியை பூர்ணிமா அவதூறாக திட்டியும், பொய் வழக்கு போட்டு பணி இடைநீக்கம் செய்வதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மடிகேரி … Read more

300 -க்கும் மேற்பட்ட இயற்கை உணவுகள்… களைகட்டிய உணவுத்திருவிழா..!

பாரம்பரிய உணவு வகைகளை பரவலாக்கும் நோக்கத்தோடும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயற்கை உணவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு உழவர் நலத்துறை சார்பாக இயற்கை உணவுத் திருவிழாவானது அண்மையில் நடைபெற்றது. உணவுத்திருவிழா இந்தியாவின் சிறந்த பசுமை அலுவலக விருதை பெற்ற V-Guard நிறுவனம்; என்ன சிறப்பு தெரியுமா? இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும்  இயற்கை விவசாயிகள், … Read more

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக சிறைக்கைதி ஒருவர் கருணைக்கொலை…

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கைதி ஒருவர் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. கைதிக்கு கருணக்கொலைக்கு அனுமதி சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், மருத்துவர்கள் உதவியுடன் சிறைக்கைதி ஒருவர் தன் வாழ்வை முடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பெல்ஜியம் நாட்டிலுள்ள Nivelles என்னுமிடத்தில் தன் ஐந்து பிள்ளைகளையும் கொலை செய்த Genevieve Lhermitte (56) என்னும் பெண், மருத்துவர்கள் உதவியுடன் கருணைக்கொலை செய்யப்பட அனுமதி வழங்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம். தற்போது, சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக Bostadel சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், … Read more

குடியரசுதலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். ராஷ்டிரபதி பவனில் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அரசு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, லடாக் லெப்டினன்ட் கவர்னர் பிரிகேடியர் டாக்டர் பி.டி. மிஸ்ரா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவையும் சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி … Read more

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை : அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மோனோகுரோட்டோபாஸ் , அசிபெட் உள்ளிட்ட பூச்சி கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சீன அதிபருக்கு புதின் சொன்ன வாழ்த்து… டிக் டாக் செயலிக்கு செக் வைத்த பெல்ஜியம் | உலகச் செய்திகள்

சீன அதிபராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றதையடுத்து ஜின் பிங்கை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தியுள்ளார். இது மேலும் இரு நாடுகளுக்கு இடையே உண்டான உறவுகளை வலுப்படுத்தும் என்று அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றவாளி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் முன்பில்லாத அளவிற்குக் காற்று மாசுபாடு அதிகரித்து மக்கள் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. தாய்லாந்தில் சுமார் 1.32 … Read more

கனடாவில் பயிலும் சர்வதேச மாணவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன, எவ்வளவு ஊதியம் கிடைக்கும்?

கனடாவில் பயிலும் சர்வதேச மாணவ மாணவியர், முறையான கல்வி உரிமம் பெற்றிருக்கும் நிலையில், அவர்கள் இனி எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்னும் வகையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கனடா அரசு விதிகளில் மாற்றங்கள் செய்தது. 2023 இறுதி வரை இந்த விதிகள் அமுலில் இருக்கும். ஆக, அவர்களுக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, அவற்றிற்கு எவ்வளவு ஊதியம் எதிர்பார்க்கலாம் என்பதை சுருக்கமாக பார்க்கலாம். என்னென்ன வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம்? Teaching Assistants … Read more

ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப, ஒலி பெருக்கி சத்தத்தை குறைக்கவும் தடை! சவூதி அரேபியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

ரியாத்: ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப, ஒலி பெருக்கி சத்தத்தை குறைப்பது உள்பட பல்வேற கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா  அறிவித்துஉள்ளது. இது அந்நாட்டு இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரம்ராஜன் மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனப்டி,  ஒலிபெருக்கிகள் தடை,  தொழுதலை ஒளிபரப்ப தடை  மற்றும் மசூதிகளுக்குள் இப்தார் செய்ய வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய நாடு … Read more