தர்மபுரியில் தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 குட்டி யானைகளும் வேறு வனப்பகுதிக்குள் நகர்ந்தன

தர்மபுரி: தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 குட்டி யானைகளும் வேறு வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன. மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த நிலையில் குட்டிகள் அந்த இடத்திலேயே சுற்றித்திரிந்தன. தற்போது அந்த குட்டி யானைகள்

ஊழல் செய்வது எங்க உரிமை; அதை வெளியிடுவது அண்ணாமலையின் கடமை என்பது மாதிரி சொல்றாரே!| Speech, interview, report

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, ஏப்., 14ல் வெளியிடுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வெளியிடட்டும்; அது அவருடைய இஷ்டம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும். ‘நாங்க எந்த ஊழலும் செய்யலை… அதனால, பட்டியல் எல்லாம் வெளியிட முடியாது’ன்னு தானே இவர் சொல்லியிருக்கணும்… ஆனா, ‘ஊழல் செய்வது எங்க உரிமை; அதை வெளியிடுவது அண்ணாமலையின் கடமை’ என்பது மாதிரி சொல்றாரே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம்: தி.மு.க., … Read more

`மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பின்!' – இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?

சீன அரசியல் வரலாற்றில் மாவோவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் ஜி ஜின்பிங். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 10-03-2023-ம் தேதி நாடாளுமன்றத்தில் சீன அதிபராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முறைப்படி … Read more

காய்ச்சல் என மருத்துவரை நாடிய லண்டன் நபர்… 6 வாரம் கோமாவில்: கண் விழித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிழக்கு லண்டனை சேர்ந்த தந்தை ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவரை நாடியுள்ள நிலையில், ஒரு கால் மற்றும் ஒரு கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுயநினைவின்றி சரிந்து விழுந்தார் கிழக்கு லண்டனின் Ilford பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஜுனைத் அகமது. சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் மருத்துவரை நாட முடிவு செய்து மருத்துவமனை சென்றுள்ளார். Image: SWNS காத்திருக்கும் அறையில் சக நோயாளிகளுடன் காத்திருந்த … Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்டகளிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்த ராஜேஸ்வரன் என்பவர் அளித்த பீகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.

அதிக உப்பு, ரொம்ப தப்பு: உலக கிட்னி தினம்| Too much salt, too bad: World Kidney Day

உடலில் முக்கியமானது ‘கிட்னி’. இது ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. எலும்புகளை பலமாக வைக்கிறது. சிவப்பு ரத்த செல்களை அதிகரிக்கிறது. சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 12ல் உலக கிட்னி தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் சுகாதாரமான கிட்னி’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 20 லட்சம் பேர் ‘டயாலிசிஸ்’ உள்ளிட்ட சிகிச்சை … Read more

தூத்துக்குடி: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரச் சீர்கேடு! – கவனிப்பார்களா அதிகாரிகள்?

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் மூடிகளும், கழிவுநீர் தொட்டி மூடிகளும் பெயர்ந்து காணப்படுகின்றன. தகரத்தினால் செய்யப்பட்ட இந்த மூடிகள் பல ஆண்டுகளாக கவனிப்பு இல்லாமல் இருக்கின்றன. இதனால் தற்போது துருப்பிடித்த நிலையில், பெயர்ந்து காணப்படுகின்றன. கழிவுநீர் வெளியேறும் இடங்களும், கழிவுநீர் தொட்டிகள் இருக்கும் இடங்களும் ஆபத்தான வகையில் திறந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதாரச் சீர்கேடு … Read more

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பொதுத்தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம்; உங்களுக்கு தேவை தன்னம்பிக்கையும் … Read more

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோரம் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தவர் மீது கார் எறியதில் 3 பேர் உயிரிழப்பு

திருச்சி; திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோரம் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தவர் மீது கார் எறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளர். மதுபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய லட்சுமிநாராயணன், அஸ்வந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.