`இப்போது எனக்குப் புரிகிறது!' – `ராணா நாயுடு' வெப் சீரிஸை விமர்சித்தாரா விஜய சாந்தி?

நடிகையும், அரசியல் வாதியுமான விஜய் சாந்தி ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் சீரிஸ்களில்  ஆபாச காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “ சமீபத்தில் வெளியான வெப் சீரிஸில் அதிக அளவில் ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. தற்போது ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் சீரிஸ்களில்  ஆபாச காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஓ.டி.டி.யில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கும் ஏன் தணிக்கை வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள் என்று இப்போது எனக்குப் புரிகிறது. … Read more

மதுரை மல்லிகை இயக்கம், மாடு ஆடு தேனி வளர்ப்புக்கு ரூ.50கோடி நிதி, இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி, நுண்ணீர் பாசனத்துக்கு ரூ.450 கோடி

சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  ,  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார். நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம்  வழங்கப்படும் என  வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு. சேலம், அமராவதி கூட்டுறவு … Read more

காவிரி கடைமடை பகுதிக்கு பாசன வசதியை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு

சென்னை: காவிரி கடைமடை பகுதிக்கு பாசன வசதியை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார். கால்வாய்கள் தூர்வாருவதன் மூலம் 1,32,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

ரஷ்யாவில் சீன அதிபர்: ஜின்பிங்-ன் 12 திட்டங்கள் – முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?

சீன அதிபர் ஜின்பிங், அரசு முறைப்பயணமாக நேற்று ரஷ்யா வந்தடைந்தார். அவருக்கு, கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதின் உற்சாக வரவேற்பு அளித்தார். இருவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா போர் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா அதிபர்கள் சந்தித்துக்கொண்டது உலக அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. 4 மணி நேரத்துக்கும் மேலாக … Read more

சாலையில் நடந்த கோர சம்பவம்… புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார்

பர்மிங்காம் பகுதியில் சாலையை கடக்கும் போது வாகன விபத்தில் சிக்கி தந்தை ஒருவர் பலியான வழக்கில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஷாசாத் ஹுசைன் மாயம் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் திகதி பர்மிங்காம், போர்ட்ஸ்லி கிரீன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி 45 வயதான பிலிப் டேல் என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். @PA இந்த நிலையில், வழக்கை விசாரித்துவரும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார், வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமானதாக நம்பப்படும் 43 வயதான … Read more

வேளாண்பட்ஜெட்2023: 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, வேளாண் மாணவர்களுக்கு ரூ.2லட்சம், விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் குழு!

சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  ,  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார். 2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 … Read more

மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி , தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் முறை கற்றுத்தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

`திருப்பி அனுப்பப்பட்ட நிதி’ – சிறப்பு உட்கூறுத் திட்டத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றும் தமிழக அரசு!

தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கான உட்கூறுத்திட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில், மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதியில் ரூ.5,318 கோடி பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்ட  விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக  கண்டறியப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதியானது, தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த சமூக மக்களை கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மற்ற சமூகங்களுக்கு இணையாக உயர்த்த பயன்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி … Read more

கருணாநிதி நினைவிடத்தில் வேளாண் பட்ஜெட்டுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மரியாதை..!

சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  வேளாண் அமைச்சர் ம்ஆர்கே பன்னீர்செல்வம் கருணாநிதி நினைவிடத்தில்  மரியாதை செய்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (20ந்தேதி) தொடங்கியது. முதல்நாளானான நேற்று 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று  வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதை வேளாண் அமைச்சர்  எம்ஆர்கே பன்னீர்செல்வம் காலை  10 மணியளவில் தாக்கல் செய்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு … Read more

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்டாவில் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.