சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் விடுதியில் தற்கொலை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 8 ஆண்டுகளில் ரூ. 18 லட்சம் கோடி உயர்வு| Nirmala Sitharaman accepts less cash economy is still a dream

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி 31.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: கடந்த 2014ல் நாட்டில் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது. இது, 2022 மார்ச் மாதத்தில் 31.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. … Read more

பிரஸ் மீட்: கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள்; பாதியில் வெளியேறிய அமெரிக்க அதிபர் – என்ன நடந்தது?

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, வார இறுதியில் இரண்டு பெரிய அமெரிக்க வங்கிகளின் சரிவு தொடர்பான தன் இறுதி அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் “வங்கிகள் சரிவை சந்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, என்ன நடந்தது என்பது குறித்து தற்போது விளக்கமாக கூறமுடியுமா? … இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உங்களால் … Read more

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அதற்கான காரணம் இவைகள் தான்..உஷாரா இருங்க

பெரும்பாலான மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றன. அதற்கு சரியான காரணம் என்னவென்று யாருக்கும் எளியில் தெரியாது. முதுகுவலி என்பது முதுமையில் ஏற்படும் என பெரும்பாலானோர் அறிவார்கள், ஆனால் அது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். உங்கள் முதுகுவலியின் மூல காரணத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் விரைவில் நிவாரணம் பெறலாம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளைத் தடுக்கலாம். முதுகு வலிக்கான உண்மையான காரணங்கள் என்ன? இறுக்கமான ஆடை அணிதல் அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல் உயரமான காலணிகளை அணிதல் பின் பார்க்கெட்டில் வைக்கப்படும் … Read more

இளைய தலைமுறையினர் தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: தொழில் நுட்பங்களை இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2023) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 23 50-வது மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ற தொடங்கி வைத்தார். தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் … Read more

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி தமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போபால் விஷவாயு விவகாரம்: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி| Bhopal Gas Tragedy: In Supreme Court, Big Setback For Centre

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 1984ல் நடந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக, 7,844 கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984 டிச., 3-ம் தேதி இரவு, ‘யூனியன் கார்பைடு’ எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து திடீரென விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு போபால் நகரம் முழுதும் பரவியதில், … Read more

`பெற்றோருடன் செல்ல மறுத்த காதலி; பெற்றோர் அழைத்ததும் சென்ற காதலன்!' – இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வேலூரைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவியும், தொரப்பாடி சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்த இளைஞரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரண்டுப் பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். அதே நேரம், காணாமல்போன தங்கள் மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி, மாணவியின் பெற்றோர் பாகாயம் காவல் … Read more

ஒன்றல்ல… 20 வங்கிகள் கடும் நெருக்கடியில்: மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் கோரும் நிபுணர்கள்

அமெரிக்காவில் சுமார் 20 வங்கிகள் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதலீடுகளுக்கு உத்தரவாதம் கோரியுள்ளனர் நிபுணர்கள். ஜனாதிபதி பைடன் மக்களுக்கு உரை அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியானது திவாலாகி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், மேலும் பேரழிவைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மக்களுக்கு உரையாற்றியிருந்தார். @reuters பங்கு சந்தை வர்த்தகம் செயல்பாட்டுக்கு வரும் சில நிமிடங்கள் முன்பு பேசிய ஜனாதிபதி பைடன், நமது வங்கி அமைப்பு பாதுகாப்பானது என்று … Read more

அமைச்சர் மா.சு.வின் மனித நேயம்: கருணை கொலைக்கு மனு அளிக்கப்பட்ட சிறுவன் மீண்டு வந்த அதிசயம்!

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனித நேயத்தின் காரணமாக, கருணைக் கொலைக்கு வந்த சிறுவன், இன்று உடல்நலம் தேறி சொந்த ஊருக்கு திருப்பியுள்ளார்.  கருணை உள்ளத்தோடு ஒரு வருடம் தனது சட்டமன்றம் விடுதியில் தங்க வைத்து காப்பாற்றி வழி அனுப்பி வைத்த அமைச்சர் மா.சு.வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சிறுவன்ந ஒருவன் தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகனை கருணை கொலை செய்யக்கோரி, குடும்பத்தினருடன் வந்த … Read more