மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும், மரிசான் 32 கேப் ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணி ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

டிரைவர் ஹோட்டலுக்குச் சென்று வருவதற்குள் கன்டெய்னர் லாரி திருட்டு; `பலே' இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்

நாகப்பட்டினம், பிடாரங்கொண்டான், பொன் செய் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருக்கிறார். இவர் கடந்த 12.3.2023-ம் தேதி கன்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வேலூருக்குப் புறப்பட்டார். மாதவரம் 200 அடி சாலை, சின்ன ரவுண்டானா அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக விக்னேஷ் சென்றார். பின்னர் அவர் வெளியில் வந்து பார்த்தபோது கன்டெய்னர் லாரியைக் காணவில்லை. ராபர்ட் இது குறித்து அவர் மாதவரம் காவல் நிலையத்தில் … Read more

Rolex எனும் ஆடம்பர பிராண்டை உருவாக்கிய வறுமையில் வாடிய ஜேர்மானியர்!

தனது குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து அனாதையான ஒருவர், வறுமையின் வாடிய ஒருவர், இன்று உலகின் மிகப்பெரிய கைக்கடிகார பிராண்டு Rolex-ஐ உருவாக்கியவர் என்பது தெரியுமா? அவரைப்பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். Rolex-ஆடம்பரத்தின் அடையாளமாக ரோலக்ஸ் (Rolex) சந்தையில் கிடைக்கும் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களில் ஒன்றாகும் என்பதை ஆடம்பரக் கடிகாரங்களின் எந்தவொரு அறிவாளியும் ஒப்புக்கொள்வார். இந்த பிராண்ட் ஒரு கல்ட்-கிளாசிக் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது. Rolex உலகின் முதன்மையான … Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகளில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

"நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது எங்கள் பணி; கூட்டணி குறித்து முதல்வர் முடிவுசெய்வார்" ஐ.பெரியசாமி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “2021-2022 – 2022-2023 நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், முதல்வரின் கிராமப்புறச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் … Read more

வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்கின்றீர்களா? சற்று கவனத்துடன் இருங்க!!

காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது நமது வீட்டில் முக்கியமான சம்பிராதாயங்களுள் ஒன்றாகியுள்ளது. தீபத்தில் மூன்று தேவிகளான துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் வீட்டில் கிடைக்கின்றது. தீபம் ஏற்றி தினமும் பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்க முடியும். இது உள்ளத்தின் இருளை போக்குகிறது. வாழ்வில் உயரத்தை கொடுக்கின்றது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற … Read more

தன்பாலின உறவாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ரத்த தானம் செய்ய தடை! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்

டெல்லி: மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதித்துள்ளது குறித்து மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொதுவாக மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். இதனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்ய முடியும்.  பொதுவாக  ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற … Read more

மார்ச் 22-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஒரே பாலின திருமணம் அங்கீகரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு| Government opposition to recognition of same-sex marriage Central government strongly opposes

புதுடில்லி : ‘ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது; இது, சமூக மதிப்புகள், தனிநபர் சட்டங்களுக்கு எதிரானது. அங்கீகாரம் அளித்தால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டுஉள்ளன. பல உயர் நீதிமன்றங்களில் இருந்த வழக்குகளை தனக்கு மாற்றச் செய்து, உச்ச நீதிமன்றம் இதை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற … Read more

புதுச்சேரி: "ரேஷன்கார்டுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்" – முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “2023-24-ம் நிதியாண்டில் ரூ.11,600 கோடிக்கான மக்கள் நலன்சார்ந்த வரவு செலவு திட்ட அறிக்கையை பேரவையின் பார்வைக்கு ஒப்புதலுக்காக சமர்பிக்கிறேன். அனைத்து ரேஷன்கார்டுதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 வீதம், ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.126 கோடி செலவாகும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ரூ.100 கோடிக்கு … Read more