சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் ஜார்ஜ் ஆபிரகாமை சைதாப்பேட்டை மகளிர் போலீஸ் கைது செய்தது.

தென்காசி: கனிமவளக் கடத்தல் லாரி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்; ஓட்டுநர் கைது!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எடுக்கப்படும் பாறைகள், ஜல்லி, கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமம் ஏற்றிச் செல்லும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தென்காசி மாவட்டம் புளியறை செக்போஸ்ட் வழியாக கேரளாவுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. கனிமவளக் கடத்தல் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தென்காசி: “கனிம வளக் கடத்தல் லாரிகளால் தொல்லை” – சாலையின் நடுவே பள்ளம் தோண்டிய பஞ்சாயத்து தலைவர்! கேரளாவுக்குச் செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதால் சாலைகள் நாசமடைகின்றன. … Read more

கேரளாவில் அரசு பேருந்து- கார் மீது மோதி பயங்கர விபத்து

பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர் பகுதி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கேரள அரசு பேருந்து சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கார் மீது மோதியவுடன் அங்கிருந்து கிறிஸ்துவ தேவாலய வெளிப்புறச்சுவர் மீது மோதியதில் தேவலாயத்தில் … Read more

ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு

ஈரோடு: ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீசியுள்ளார். ஆபத்தான நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை: திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடன்: போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது பிரதான சாலை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதி, ஆன்மீக சுற்றுலாவுக்காக வாரணாசி சென்றிருந்தனர். அதனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் பெங்களூரில் இருந்து வீட்டுக்கு வந்த தம்பதியின் மகன் சம்பவத்தன்று கதவை திறந்து வைத்து உறங்கியிருக்கிறார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன், பீரோவை திறந்து 49 ஆயிரம் பணத்தை திருடியிருக்கிறார். திருட்டு பணத்தை திருடிய திருடன், அசதியில் வீட்டின் கட்டிலின் கீழே … Read more

மழையாக பொழிந்த புழுக்கள்? இணையத்தில் வைரலாகும் வீடியோ

சீனாவில் புழுக்கள் மழையாக பொழிந்து, வீதிகளில் நிரம்பி கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பீஜிங்கில் புழுக்கள் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மேல் புழுக்கள் மழையாக பொழிந்தது போல் விழுந்து கிடந்தது. பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் கிடந்த இந்த புழுக்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. இவை எப்படி இங்கு வந்திருக்கும் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும் வானில் இருந்து புழுக்கள் தங்கள் மீது விழுந்துவிடக் … Read more

எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்தவர் கைது

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த ஒருவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்த போது, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று பேசியுள்ளார். … Read more

அரசியலுக்கு வராதது ஏன்?: ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: கொரோனா 2-வது அலை தொடங்கிவிட்டதால் அரசியல் பணிகளில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கும் என மருத்துவர் கூறியதால் நான் அரசியலுக்கு வரவில்லை என சென்னை மியூசிக் அகாடமியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  

சி.ஐ.ஐ அமைப்பின் தலைவர் ஆனார் கோவை தொழிலதிபர் சங்கர் வானவராயர்!

இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ (Confederation of Indian Industries) அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராகிறார் ஏ.பி.டி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சங்கர் வானவராயர். சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராக இருந்த டெய்ம்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை தலைமை அதிகாரியாக இருந்த சத்யாகம் ஆர்யாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு துணைத் தலைவராக சங்கர் வானவராயர், இப்போது தலைவர் ஆகியிருக்கிறார். சங்கர் வானவராயர் ஒற்றை ஆளாய் … Read more

பதவியை காப்பாற்ற நெருக்கமானவர்களை கொன்று தள்ளும் புடின்: இதுவரை 39 பேர்கள்!

தனது எதிரிகளை தோற்கடிக்கவும் ஆதரவாளர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் படுகொலைகளை ஆயுதமாக பயன்படுத்துவதாக கூறுகின்றனர். புடினின் பதவி வெறி அந்த வகையில், இதுவரை 39 உயர் அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களின் மரணத்திற்கு பின்னால், புடினின் பதவி வெறி இருப்பதாக தெரிவிக்கின்றனர். உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் டசின் கணக்கான உயர் அதிகாரிகள் திடீரென்று மரணமடைந்துள்ளனர். பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதும், மாரடைப்பால் பலியானதும் என மரண காரணங்கள் மர்மமாகவே உள்ளது. பிரித்தானிய … Read more