சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு 17ம் தேதி குடமுழுக்கு விழா! சேகர்ரெட்டி தகவல்

சென்னை: சென்னை, தி.நகரில்  புதியதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என சேசகர் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி , பத்மாவதி கோவில் கட்டுமான … Read more

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

"ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் மானியம் ரூ.300" – புதுச்சேரி முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு

புதுவை, புதுவை சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- * அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாட திட்டம். * பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும், சென்டாக் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. * பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின்கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், செவிலியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more

`தினமும் 200 பேருக்கு மதிய உணவு'- மதுரையில் ஆதரவற்றோருக்குத் தேடிச் சென்று உணவளிக்கும் நெல்லைக்காரர்

மழையோ, புயலோ எந்தவொரு இயற்கைப் பேரிடராக இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று உணவளிப்பதைக் கடமையாகச் செய்து வருகிறார் நெல்லை பாலு. மதுரையின் `அட்சயப் பாத்திரம்’ என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்குவதைக் கடந்த இரண்டு வருடமாகச் செய்துவரும் இவர், பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கு மாதம்தோறும் அரிசி வழங்கி வருவதையும் பல வருடங்களாகச் செய்து வருகிறார். உணவு தயாரிப்புப் பணி அதிலும் கொரோனா … Read more

தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து…

திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு   தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக  இலவச தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசனங்களும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,   தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு விஐபி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு … Read more

கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு உதவும் வகையில் கனடா அரசு வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி…

 கனேடிய புலம்பெயர்தல் நடைமுறை டிஜிட்டல் மயமாகிவருகிறது. நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே வருகின்றன. கனடாவுக்கு புலம்பெயர உதவுவதாகக் கூறும் மோசடி இணையதளங்கள் அதேநேரத்தில், இந்த நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆகவே, … Read more

இடஒதுக்கீடு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விடமுடியாது: ஐகோர்ட்

சென்னை: அரசு வேலைக்காக போலி சாதிச் சான்று அளித்து இடஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கோவை வனமரபியல் நிறுவனம் பதவி உயர்வுக்கான சான்றிதழ் சர்பார்ப்பின்போது, பாலசுந்தரம் பழங்குடியினத்தவர் என்ற சான்றிதழை ரத்து செய்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது சாதிச் சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்ய சட்டபூர்வமானதல்ல எனக்கூறி பாலசுந்தரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

புதுச்சேரியில் நில மோசடிகளை விசாரிக்க சிறப்பு பிரிவு: பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் நிம்மதி| Special Unit to Probe Land Scams in Puducherry: Relief for French Citizens

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பலர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பிரான்சில் வசிக்கின்றனர். புதுச்சேரியிலும் பல கோடி மதிப்புள்ள வீடு, நிலம், மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கி, விட்டு சென்றுள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் புதுச்சேரியில் மன நிம்மதிக்காக வந்து தங்கி, அப்படியே தங்களுடைய சொத்துகளையும் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.அப்படி வந்து பார்க்கும்போது, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர்களின் சொத்துகளை போலி பத்திரம் தயாரித்து … Read more

"இந்தியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியாது"- மத்திய அரசு

புதுடெல்லி உலகம் முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால் மற்றவர்களைப் போன்று அவர்களும் மனிதர்கள்தான் என்பதை இந்த சமூக அமைப்பு கண்டுகொள்ளாமல் அவர்களை ஒதுக்கிவைக்கவே நினைக்கிறது. இருப்பினும் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து இவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகவும் தற்போது பல குரல்கள் சேர்ந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் … Read more