பாரம்பரியமான குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவு நீக்கம் – ஆட்டத்திற்கு தடை! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும்  குறவன், குறத்தி  ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.  மேலும், ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் இருந்து  குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது. இதற்கான உத்தரவை சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ளாா். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறவன் குறத்தி உள்பட நாட்டுப்புற கலைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதாக, … Read more

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா இல்லையா என்று பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார்.

டெல்லி: தெரு நாய் தாக்கி சகோதரர்கள் பலியான சோகம் – 5, 7 வயதுடைய குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதி சிந்தி பஸ்தியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பெற்றோருடன் ஆனந்த் (7), ஆதித்யா (5) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற சிறுவன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழுவும், சிறுவனின் குடும்பத்தினரும் அவரைத் தேடத் தொடங்கினர். அவர்கள் வசித்து வந்த குடிசைப் பகுதிக்கு அருகிலுள்ள காட்டில் இரண்டு மணி … Read more

ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக தீர்மானம் – அமளி – மக்களவை 2மணி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி:  லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் பாஜக தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இனால், அவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியதும் முதலாவதாக, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை … Read more

ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“அரசியல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்கை மேம்படுத்துவோம்" – பெண் கூட்டமைப்பு!

பெண் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியலில் சமத்துவநிலை அடைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ இயக்கங்கள், போராட்டங்கள், பிரசாரங்கள் இச்சமூகத்தில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகமுள்ளது. பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக, பெண் கூட்டமைப்பு (THE PEN COLLECTIVE)  என்ற திட்டம் 10.3.2023 அன்று, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்  கல்லூரியில் தொடங்கப்பட்டது. பெண் கூட்டமைப்பு துவக்க விழாவில் பெண்கள் விரும்பும் நகரங்களில் சென்னைக்கு முதலிடம்; மற்ற நகரங்களுக்கு எந்தெந்த … Read more

கடலூர் அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த 8 பைபர் படகுகள் – பரபரப்பு

கடலூர்: கடலூர் ஆரகே கடற்கரையில்  பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த 8 பைபர் படகுகள் தீப்பிடித்த எரிந்தது அந்தபகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த  சம்பவம் கடலூர் அருகே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் வலைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய … Read more

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் என்எல்சிக்காக நிலம் சமன்படுத்தும் பணி நிறுத்தம்

கடலூர்: கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் என்எல்சிக்காக நிலம் சமன்படுத்தும் பணி நிறுத்தபட்டுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி 2 நாட்களுக்கு நிறுத்தியுள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் பணிகள் நிறுத்தபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது| An Oscar Award for our Indian song Nattu., Nattu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் இந்திய திரைப்படத்தின் நாட்டு, நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த பாடல் குளோபல் விருதை தட்டி சென்றிருந்தது. கீரவானி என்ற இசை அமைப்பாளர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாடலும் , காட்சியும் இன்று ஒளிபரப்பப்பட்டது. இந்திய திரைப்படத்திற்கு … Read more