இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் உடல்நலம், மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.80,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படப்பிடிப்பில் நடிகர் அமிதாப் பச்சன் காயம்: விலா எலும்பு உடைந்தது| Actor Amitabh Bachchan Injured During Filming: Broken Rib.

மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் (80) படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தார். இதில் அவரது விலா எலும்பு பகுதி உடைந்தது. பாலிவுட்டின் ‛பிக் பி’ என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி, ரியாலிட்டி ஷோ, விளம்பரங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார்.அரை டஜன் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியா படமான … Read more

WPL 2023 : `தோனி'யாக மாறி அசரடித்த க்ரேஸ் ஹாரிஸ் – குஜராத்தை வீழ்த்திய உபி!

ஒரு திரைப்படத்தை காணும்போது முதல் 20-30 நிமிடங்களிலேயே நம்மால் அந்த படம் எப்படியான அனுபவத்தை கொடுக்கப்போகிறது என்பதை கணித்துவிட முடியும். மேற்படி அந்தப் படம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கலாம் அல்லது பெரும் அயர்ச்சி தரும் அனுபவமாக இருக்கலாம். ஆனால், அதற்கான அறிகுறி முதல் அரை மணி நேரத்திலேயே தெரிந்துவிடும். வுமன்ஸ் ப்ரீமியர் லீகை ஒரு திரைப்படமாக பாவித்துக் கொண்டால் தொடக்க இரண்டு நாட்களில் அது என்ன மாதிரியான அறிகுறியை கொடுத்திருக்கிறது என நினைக்கிறீர்கள்? நிச்சயமாக ப்ளாக்பஸ்டர்தான் … Read more

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: தென்மாவட்டங்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைகக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அருங்காட்சியைகத்தை சுற்றி பார்த்தார். இதுகுறித்துடிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த இனமாம் நம் தமிழினத்தின் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன். கீழடியின் வயது 2600. தோண்டத் தோண்டப் புதையல்கள்! அனைத்தும் அருங்காட்சியகத்தில்! ஈராயிரம் ஆண்டு வரலாற்றின் சின்னம் கீழடி! அனைவரும் வந்து பாருங்கள். வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம் என்றுபதிவிட்டுள்ளார்,. கீழடியில் சுமார் … Read more

நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’ எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்தவர் பேரறிஞர் அண்ணா என முதல்வர் தெரிவித்தார்.

டிபாசிட்டை அ.தி.மு.க., தக்கவைத்து கொண்டதே பெரிய வெற்றி தான் என்பதை இவர் ஏத்துக்க மாட்டாரா?| Speech, interview, report

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, அ.தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. பல காரணங்களால் பொது மக்கள், தி.மு.க., அரசின் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அ.தி.மு.க., அடைந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது; பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள் தான் இதற்கு காரணம். ஆளுங்கட்சியின் பண, படைபலத்துக்கு முன்னாடி, ‘டிபாசிட்’டை அ.தி.மு.க., தக்கவைத்து … Read more

`எம்ஜிஆர் மாளிகையா, கலைஞர் மாளிகையா?' – முடிவுக்கு வந்த நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக பெயர் விவகாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், முன்பு நகராட்சியாக இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் குறுகலான சாலையில் இருப்பதால் போக்குவரத்து சிரமம் இருந்துவந்தது. அதை போக்கும் விதமாக அன்றைய நகராட்சி கமிஷனராக இருந்த சரவணகுமார் புதிய அலுவலகம் கட்ட தேர்வு செய்த இடம்தான் அண்ணா விளையாட்டு மைதானம் அருகில் உள்ள கலைவாணர் அரங்கம் பகுதி. சரவணக்குமார் பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டும்போதே சில எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் … Read more

இளநிலை நீட் தேர்வுக்கு முதல் விண்ணப்பிக்கலாம்…

டெல்லி: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுமுதல் (மார்ச் 6ந்தேதி) தொடங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத்துறை சார்ந்த துணை படிப்புகளுக்கு, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு … Read more

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது. neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.

பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி| Bramos missile test success

புதுடில்லி : பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணை, கப்பல், விமானம், நீர் மூழ்கி கப்பல் மற்றும் தரை வழியாக என பல நிலைகளில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடற்படை அரபி கடல் பகுதியில் நேற்று நடத்திய சோதனையில், ஏவுகணை இலக்கை … Read more