ஆர்.என்.ரவி குறித்து அவதூறு பேச்சு; திமுக பேச்சாளர் மீது ஆளுநர் மாளிகை போலீஸில் புகார்!

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், அவையிலிருந்து பாதியில் வெளியேறியதும் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியது. ஆளுநரின் இந்தச் செயல் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அவரை அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் `ஆளுநரை அவதூறாகப் பேசக்கூடாது’ என தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இருப்பினும், … Read more

ஆளுநர் மீதான புகார் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பி வைத்தார் குடியரசு தலைவர் முர்மு…

சென்னை; ஆளுநர் உரை விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினின்  புகார் கடிதத்தை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் குடியரசு தலைவர் முர்முவை சந்தித்து கொடுத்த நிலையில், அந்த  புகார் கடிததத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  அனுப்பி வைத்தார். கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து அவர் வெளியேறினார். இதற்கு … Read more

ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைப்பாளையம், மதிய திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம்பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயுத படை தினம் தளபதிகள் மரியாதை| Veterans Day: Honoring Leaders

புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ஆயுத படை தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோன்று, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி மற்றும் கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் ஆகியோரும் தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய … Read more

தன்னிச்சையாக களமிறங்கிய சச்சின் பைலட்; கலக்கத்தில் மேலிடம்… ராஜஸ்தான் காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் சரிவு முகமாகவே இருக்கிறது. கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், கடைசியாக குலாம் நம்பி ஆசாத் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார். ராஜஸ்தானில் தற்போது முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டை நீக்கிவிட்டு, இளம் தலைவர் சச்சின் பைலட்டை முதல்வராக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், … Read more

எனது நிலைமை என் அண்ணனுடைய பிள்ளைகளுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது: கவலைப்பட்ட ஹரிக்கு இளவரசர் வில்லியமுடைய பதில்

இளவரசர் ஹரி எழுதிய புத்தகம் ராஜ குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. தனது புத்தகம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இளவரசர் ஹரி, மேலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இளவரசர் ஹரியின் புத்தகம் இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்தின் தான் ஒரு Spare ஆக, அல்லது ஒரு substitute ஆக கருதப்படுவதை உணர்த்தும் வகையில் தனது புத்தகத்துக்கு Spare என பெயர் வைத்துள்ளார். அதாவது, வில்லியம் போன்றவர்கள் இல்லாவிட்டால், அவர்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் ஒரு நபர் … Read more

நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் துரைமுருகன் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் துரைமுருகன் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருதயஅறுவை சிகிச்சை  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர் தொடர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல்மற்றும்  டிசம்பரில் உடல்நலம் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

தமிழ்நாட்டில் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை: அமைச்சர் நேரு பேட்டி

சேலம்: தமிழ்நாட்டில் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் பேட்டி அளித்து வருகிறார். கூடுதல் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமலாய்ச்சார் கூறியுள்ளார். அம்மா உணவகங்களில் தேவைக்கு அதிகமாக கூடுதல் பணியாளர்கள் இருப்பதால் இழப்பு ஏற்படுகிறது என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார்.

"கவர்னரை வில்லனாகக் காட்டி அரசியல் செய்வதா… சீண்டிப் பார்க்க வேண்டாம்!" – எச்சரிக்கும் அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராமர் பாலத்துக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப்பாதை யோசித்துவருவதாக 2018-ல் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் சேது சமுத்திர திட்டம் 4-ஏ அலைன்மென்ட் தீர்மானமா, ராம சேதுவுக்கு பாதிப்பு இல்லாத புது மாற்றுபாதையா என திட்டவட்டமாக சொல்லவில்லை. 4-ஏ அலைன்மென்ட் என்றால் அதை எதிர்க்கிறோம். மத்திய அரசு சொன்ன … Read more

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட எம்பி சந்தோக்சிங் மாரடைப்பால் உயிரிழப்பு…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் இன்று காலை கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங்  திடீர் மாரடைப்பு காரணமாக, யாத்திரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. தற்போது யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்பி சந்தோக்சிங் மருத்துவமனையில் காலமானார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட  ஜலந்தர் பாராளுமன்ற தொகுதி எம்பி சந்தோக்சிங் … Read more