அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற விட்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி இணையதளத்தில் பதிவிட்ட விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த இரண்டு அதிகாரிகளும் இலாக்கா இல்லாத அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில அறநிலையத்துறை இயக்குனராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். இவர் மீது தனிப்பட்ட மற்றும் பணி தொடர்பான பல்வேறு புகார்களை அம்மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனராக உள்ள ரூபா டி முட்கில் ஐ.பி.எஸ். … Read more

டெல்லி ஜே.என்.யூ வில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கு தொடங்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டெல்லி ஜே.என்,யூ வில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கு விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆதரவாய் களமாட இளைஞர் அணியும், மாணவர் அணியும் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெயருக்கேற்றார் போல் அபூர்வம்தான்! – சினிமா காதலர் ஷேரிங்ஸ்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் பழிவாங்கும் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட கம்ர்ஷியல் மசாலா படங்கள் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே? அந்த கமர்ஷியல் படங்களின் திரைக்கதை அமைப்பு, காட்சிகள், பாடல்கள் என அனைத்தையுமே இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் நாம் பார்த்து சலித்துவிட்டோம்தானே. அதில் என்ன புதிதாக இருந்துவிடப் … Read more

கருத்தடை சாதனங்களைத் தடை செய்த தாலிபான்கள்! ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தொடரும் அராஜகம்

மேற்கத்திய நாடுகளின் சதி தான் கருத்தடை சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான காரணம் எனத் தெரிவித்து, ஆப்கானிஸ்தானில் பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. முற்போக்கு சிந்தனையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவப் படை வெளியேறிய பிறகு, ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் அந்நாட்டில் பல திட்டங்களை செயல்படுத்தி மக்களை முற்போக்கு தனமான சிந்தனைக்குத் தள்ளுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கு எதிரான … Read more

மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தஞ்சை: மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் மாவட்டம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிலும் பங்கேற்கிறார். அதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு … Read more

கம்பம் பதினெட்டாம் கால்வாய் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

தேனி: கம்பம் அருகே பதினெட்டாம் கால்வாய் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். பதினெட்டாம் கால்வாய் அருகே வெயில் காஞ்சான் பகுதியில் கர்ணன் என்பவரின் தோட்டத்தில் இருந்து மணல் அள்ளி விற்பனை செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அமளி: உரிமை மீறல் விசாரணைக்கு ஆளான 12 எம்.பி.க்கள்; விவரம் வெளியீடு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் அதானி நிறுவன பங்குகள் சரிவை கண்டன. அதன்பின் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் பணமோசடி பற்றி குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, இரு அவைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது, தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையத்திற்கு வந்து கூச்சலும், குழப்பமும் விளைவித்தனர். அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை … Read more

திருச்செந்தூர்: மாசித் திருவிழா வரும் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்; ஏற்பாடுகள் தீவிரம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள். மற்ற கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், இங்குதான் ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா என ஓர் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. சிவப்பு சாத்தி திருக்கோலம் ஆவணித்திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் … Read more

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு…1 கோடி செலவில் பேன்சி நம்பர்! இந்தியாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர்

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றுக்கு பேன்சி நம்பர் வாங்க இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 1 கோடி ரூபாய் செலவழித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேன்சி நம்பர் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான HP-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக சிம்லா ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய … Read more

ஈரோடு கிழக்கில் விதிமீறல் தொடர்பாக 455 புகார்கள்! தேர்தல் அலுவலர் சிவகுமார் தகவல்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய தேர்தல் அலுவலர் சிவகுமார், வரும் 25ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அங்க அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி முக்கியமானது என்பதால், அமைச்சர்கள், எம்.பி.க்கள் களமிறக்கி … Read more