ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை

சென்னை: ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை அடுத்து, எவ்வித விளையாட்டுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பவில்லை என தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்கலை.யில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி: தீபக்நாதன் ட்வீட்

சென்னை: பல்கலைகழகங்களில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 3 இயக்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்தார்.

Vikatan Exclusive: `சீரியலில் நடிக்கும் எஸ்.ஏ.சி'; தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார்; தயாராகும் தொடர்

தமிழில் சேட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பு தொடங்கிய காலம் தொட்டு சீரியல் ஏரியாவில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ராதிகா சரத்குமார். ‘ராடான் டிவி’ என்கிற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சன் டிவியுடன் இணைந்து ‘சித்தி’ உள்ளிட்ட பல மெகா ஹிட் சீரியல்களைத் தந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியிலிருந்து வெளியேறினார். ராதிகா சரத்குமார் அப்போதே ராடானின் சீரியல்கள் இனி விஜய் டிவியில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராதிகாவோ கலர்ஸ் தமிழ் பக்கம் போனார். … Read more

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனரை அகற்ற கோரிய மனுவை 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற கோரிய மனுவை 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இந்து முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Ayodhya Ram temple

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தததை அடுத்து போலீசார் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ராமர் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. ‘அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளில், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்தாண்டு மகர சங்கராந்தியின் போது, கோவில் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்கு தயாராகி விடும், இந்நிலையில் மிரட்டல் வந்துள்ளது … Read more

நீதிமன்றத்துக்கு எதிராக கருத்து: துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

சமீப காலமாக நீதித்துறையின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துவிட்டது. அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே விமர்சனம் செய்கின்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுஆகியோரும் இது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, அவர்களை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மும்பையை சேர்ந்த மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் அகமத் அப்டி என்பவர் இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், `துணை ஜனாதிபதியும், … Read more

காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரிஷி சுனக்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தன் காதல் வாழ்வு குறித்து மனம் திறந்துள்ளார். இந்த ஹொட்டலுக்கெல்லாம் நாம் போகமுடியுமா என எண்ணியிருக்கிறோம் ரிஷியும் அவரது இந்நாள் மனைவியும் அந்நாள் காதலியுமான அக்‌ஷதாவும், தாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது, காதலிக்கும் நாட்களில், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள ஒரு நட்சத்திர ஹொட்டல் அமைந்துள்ள பகுதி வழியாக நடந்து செல்வார்களாம்ல். Ritz-Carlton retreat என்னும் அந்த ஐந்து நட்சத்திர ஹொட்டலைப் பார்க்கும்போதெல்லாம், இந்த ஹொட்டலிலெல்லாம் நம்மால் … Read more

இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்…

இயக்குனர் கே விஸ்வநாத் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். ’80 – ’90 களில் இந்திய திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம்வந்த இயக்குனர் கே. விஸ்வநாத் வயதுமுதிர்வு காரணமாக தனது 93 வது வயதில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 53 படங்களை இயக்கியுள்ள இவர் 5 முறை தேசிய விருது பெற்றுள்ளார், 7 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் 10 முறை பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். 1980 … Read more

தாலிபான் பெயரில் மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்: என்ஐஏ விசாரணை

மும்பை: மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தாலிபான் பெயரில் என்ஐஏவுக்கு இமெயில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயிலில் வந்த குண்டுவெடிப்பு மிரட்டல் குறித்து என்ஐஏ மற்றும் மும்பை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.