சிரியா, துருக்கியில் இருந்து பயங்கரமான செய்திகள் வெளிவருகின்றன..வேதனை தெரிவித்த கால்பந்து பிரபலம்

சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கங்கள் குறித்து எகிப்து கால்பந்து வீரர் முகமது சாலா வேதனை தெரிவித்துள்ளார். 2,600 பேர் பலி மூன்று பெரிய நிலநடுக்கங்கள் துருக்கியை தாக்கியதில் இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இறப்புகள் மற்றும் பேரழிவுகள் அண்டை நாடான சிரியாவிலும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு 7.8-யில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சில மணிநேரங்களில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. @Elifaysenurbay / Associated Press @AP முகமது சாலா ட்வீட் இந்த நிலையில் … Read more

கர்நாடகா: 5 வாரங்களில் பிரதமரின் 3-வது ‘விசிட்’ – பல திட்டங்கள் தொடக்கம்!

கர்நாடக மாநிலத்தில் இன்னும், மூன்று மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ‘ஷெட்யூல்’ போட்டு கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகின்றனர். இதுவரை இருமுறை கர்நாடகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஏழு வார இடைவெளியில் இன்று, மூன்றாவது முறையாக கர்நாடக மாநிலம், பெங்களூரு, துமக்கூர் மாவட்டம் மற்றும் சில பகுதிகளுக்கு வந்து, பல திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இரண்டாவது முறை சுற்றுப்பயணம் வந்தபோது, 20,000 கோடி … Read more

07. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 07 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அத்துமீறிய இளைஞரின் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்! பின்னர் நடந்த சம்பவம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் அத்துமீறிய இளைஞரின் உதட்டை பெண்ணொருவர் கடித்து துப்பிய சம்பவம் நடந்துள்ளது. துஷ்பிரயோக முயற்சி உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். அவர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க முடியாத அப்பெண், குறித்த இளைஞரின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். இதனால் அந்நபர் அலறி துடித்துள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த இளைஞரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவரை முதலில் … Read more

இறந்ததாக கருதி புதைக்கப்பட்டவர் உயிருடன் வந்ததால் இன்ப அதிர்ச்சி| A pleasant surprise as the person who was thought dead and buried came back alive

பால்கர்: மஹாராஷ்டிராவில், ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டதாகப் புதைக்கப்பட்டவர், உயிருடன் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரபிக் ஷேக், ௬௦. இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், ஜன., ௨௯ல் பால்கர் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தை கடந்த ஒருவர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இறந்தவர் குறித்த விபரம் தெரியாததால், … Read more

ரோகிணி தியேட்டர்: தண்ணீர்த் தொட்டியில் கிடந்த ஆண் சடலம்; கொலையா, தற்கொலையா என போலீஸார் விசாரணை!

சமீபத்தில் சென்னையில் ரோகிணி தியேட்டருக்கு `துணிவு’ படம் பார்க்கச் சென்ற வாலிபர் ஒருவர் லாரியின்மீது ஏறி நடனமாடிக்கொண்டிருக்கும்போது கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணை இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி ரோகிணி தியேட்டரிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஊழியர் ஒருவர் வந்திருக்கிறார். தண்ணீர்த் தொட்டி அருகில் வந்ததுமே தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. அருகில் சென்று தொட்டியைத் திறந்துப் பார்த்தபோது நாற்றம் அதிகரித்திருக்கிறது. என்ன காரணமாக இருக்கும் என்று தொட்டியில் … Read more

முதல் சதமே இரட்டை சதம்! சாதித்து காட்டிய இந்திய வம்சாவளி ஜாம்பாவனின் மகன்..குவியும் பாராட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் தேஜ்நரைன் சந்தர்ப்பால் இரட்டை சதம் விளாசினார். முதல் டெஸ்ட் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 447 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான பிராத்வெயிட், தேஜ்நரைன் சந்தர்ப்பால் 336 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜாம்பவானின் மகன் … Read more

“பாஜக ஜம்மு-காஷ்மீரை ஆப்கனைப்போல மாற்ற விரும்புகிறது!" – மெகபூபா முஃப்தி தாக்கு

ஜம்மு – காஷ்மீரில் நடந்துவரும் கட்டடங்கள் இடிப்பு தொடர்பாக பா.ஜ.க-வைச் சாடிய முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, ஜம்மு – காஷ்மீரில் பா.ஜ.க ஒரு கிழக்கிந்திய கம்பெனிபோல இருக்கிறது என விமர்சித்திருக்கிறார். பா.ஜ.க-வை மேலும் கடுமையாகத் தாக்கிப் பேசிய மெகபூபா முஃப்தி, “நம் நாட்டின் அரசியல் சாசனத்தைத் தகர்க்க, பா.ஜ.க தனது பெரும்பான்மையை ஆயுதமாக்கியிருக்கிறது. கருத்து வேறுபாடு மற்றும் நீதித்துறையின் குரலை நசுக்க அவர்கள் ஆயுதமேந்தியிருக்கிறார்கள். மெஹபூபா முஃப்தி நீங்கள் காஷ்மீருக்குச் சென்றால், அது ஆப்கானிஸ்தானைப்போல இருப்பதை … Read more

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தும்கூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

`உம்மன் சாண்டிக்கு குடும்பத்தினர் சிகிச்சை அளிக்கவில்லை!' – முதல்வருக்கு கடிதம் எழுதிய சகோதரர்

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை. அவர் மகன் சாண்டி உம்மன் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டார். இந்த நிலையில், உம்மன் சாண்டிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அவரின் உடன் பிறந்த சகோதரர் அலெக்ஸ் வி.சாண்டி பரபர புகார் கூறியிருக்கிறார். “உம்மன் சாண்டியின் உடல் நிலை மோசமாகி வருகிறது” என, அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதமும் … Read more