பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமலாக்க துறை அலுவலகமே இல்லை: சத்தீஷ்கார் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

ராய்ப்பூர், சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் காங்கிரஸ் தலைவர் ராம் கோபால் அகர்வால், தொழிலதிபர் கமல் சர்தா ஆகியோரது அலுவலகம் மற்றும் வீடுகளில் என பல இடங்களில் அமலாக்க துறை இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளது. சுரங்கம் மற்றும் நிலக்கரி ஊழலில் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சத்தீஷ்கார் முதல்-மந்திரி கூறும்போது, தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், விவசாயிகள் என அமலாக்க துறை சோதனை செய்யாத பிரிவுகளே கிடையாது. ஆனால், மத்திய பிரதேசம், … Read more

“2-ல் தொடங்கி 303 இடங்கள்; இந்தியாவின் ஒரே `PAN India' கட்சி பாஜக மட்டுமே!" – பிரதமர் மோடி

2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாஜக, 2024-லும் ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்ய முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக-வின் புதிய மத்திய அலுவலகம் டெல்லியில் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி இந்த நிலையில், `பாஜக மட்டுமே இந்தியாவின் `PAN-INDIA PARTY’ ‘ எனப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். டெல்லியில் பாஜக-வின் புதிய மத்திய அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய மோடி, … Read more

8 வயது சிறுவனை பௌத்தத்தின் மூன்றாவது உயர்ந்த தலைவராக அறிவித்த தலாய் லாமா! யார் அந்த சிறுவன்?

பௌத்த மதத்தின் மூன்றாவது உயர்ந்த தலைவராக தலாய் லாமாவால் அறிவிக்கப்பட்ட 8 வயது மங்கோலிய சிறுவன் யார் என்பதை இங்கே பார்க்கலாம். 3வது உயர்ந்த தலைவராக  8 வயது சிறுவன் தலாய் லாமாவால் திபெத்திய பௌத்தத்தில் மூன்றாவது மிக உயர்ந்த தரமான 10-வது கல்கா ஜெட்சன் தம்பா ரின்போச்சே (10th Kalka Jetsun Dhampa Rinpoche) என அமெரிக்காவை தளமாகக் கொண்ட மங்கோலிய சிறுவன் பெயரிடப்பட்டான். மார்ச் 8-ஆம் திகதி ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்த விழா … Read more

புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கும் போது காவலர் உயிரிழப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கும் போது காவலர் உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி பட்டாலியன் காவலர் யுவராஜ் (30) உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள திருவிழாவில் பெண்களை போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு!!!| 1st prize to the one who dressed up like women in Kerala festival!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா தனித்துவமான திருவிழாவாகவும், உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வினோத நடைமுறையுடன் கூடிய திருவிழாவாகவும் உள்ளது. கோயிலின் முதன்மை தெய்வம் வனதுர்கா என்றும் அழைக்கப்படும் துர்கா தேவி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்கள் பெண்களைப் போல் பாரம்பரிய ஆடை மற்றும் வளையல் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு … Read more

மனிதர்களை போல மாடுகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த கிராம மக்கள்…!

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் அருகிலுள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரிசோத் உள்ளிட்ட12 கிராமங்களில் உள்ள பசுக்கள், கறவை எருமை மாடுகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும், பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன. இதனால் அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். துரிசோத் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கஞ்சு கூறும்போது, “எங்கள் ஊரைச் சுற்றியுள்ள 12 … Read more

`இ-சேவை மையத்தில் 600 சேவைகள்’ – அமைச்சர் அறிவிப்பு!

சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய இ- சேவை மையம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ தமிழகம் முழுவதும் 235 அரசு சேவை மையம் மற்றும் 9720 பிற சேவை மையங்கள் மூலமாகவும் மக்களுக்குத் தேவையான அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இ- சேவை மையம் வீட்டில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்!அரசு அலுவலகம், இ-சேவை மையம் செல்ல வேண்டாம்! இதுதவிர, தமிழகத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் … Read more

சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே சமரசம்!

சென்னை: சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே சமரசம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்கு ரூ.4 கோடி சம்பள பாக்கி உள்ளதாக ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதாக ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பில் இந்தியாவும் – ஆப்ரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன : ராஜ்நாத்சிங் பேச்சு| India and Africa working together to eradicate poverty: Rajnath Singh speech

புனே: ‛‛வறுமை ஒழிப்பு, நிலையான வளர்ச்சியை அடைவது உள்ளிட்ட, பொதுவான குறிக்கோள்களில், இந்தியாவும் – ஆப்ரிக்காவும், ஒன்றுபட்டுள்ளன,” என, பாதுகாப்புத்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் பேசினார். மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில், இந்தியா – ஆப்ரிக்க நாடுகளின், இரண்டாவது ராணுவ கூட்டுப் பயிற்சியை ஒட்டி, இரு நாட்டு ராணுவ தலைவர்கள் மாநாடு நடந்தது. இதில், பாதுகாப்பு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆப்பிரிக்க கூட்டாளி நாடுகளுக்கு அவர்களின் பாதுகாப்பு தேவைகளை உள்நாட்டில் பூர்த்தி செய்ய அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன், … Read more

தோழனிடம் இருந்து பிரிந்த சோகத்தில் சாப்பிட மறுக்கும் நாரை – உ.பி.யில் பரபரக்கும் பறவை அரசியல்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள மண்ட்கா கிராமத்தில், தனது வயலில் கால் முறிந்த நிலையில் கிடந்த நாரையை ஆரிப் என்ற இளைஞர் சிகிச்சை அளித்து காப்பாற்றினார். தனது உயிரை காப்பாற்றிய ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த நாரை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவருடனேயே இணைபிரியாமல் சுற்றி வந்தது. ஆரிப் தனது பைக்கில் செல்லும் போது அவரை பின்தொடர்ந்து செல்வது, ஒரே தட்டில் சாப்பிடுவது என இவர்களுக்கிடையிலான நட்பு இணையத்தை கலக்கி வந்தது. அதிலும் குறிப்பாக … Read more