கர்நாடகாவில் கொடூரம்: 4 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த ஆசிரியர்

கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹக்லி கிராமத்தில் உள்ள ஆத்ர்ஷ் என்ற தொடக்க பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பாரத் என்ற 10 வயது சிறுவன் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், இன்று காலை பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வரும் முத்தப்பா என்பவர் சிறுவன் பாரத்தை கம்பியால் கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதோடு விடாமல் முதல் மாடியில் இருந்து சிறுவனை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில், சிறுவன் படுகாயம் அடைந்து உயிரிழந்தான். சிறுவன் … Read more

செருப்புவீச்சு, கடத்தல் குற்றச்சாட்டு! – கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் களேபரம்

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில், அ.தி.மு.க 9, தி.மு.க 3 இடங்களைக் கைப்பற்றின. அ.தி.மு.க-வைச் சேர்ந்த கண்ணதாசன் ஊராட்சிக்குழுத் தலைவராகவும், துணைத் தலைவராக தானேஷ் என்கிற முத்துக்குமாரும் பதவி வகித்துவந்தனர். இந்த நிலையில், கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். இதனால், தான் வகித்துவந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற … Read more

முடிந்தது பிரமாண்ட உலகக்கோப்பை; கத்தார் புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

கத்தாரில் FIFA-வின் 2022 உலகக் கோப்பை முடிந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்றோடு முடிவுக்கு வந்தது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் ஆனால், இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை கத்தார் அரசு தன்னுடையை சொந்த பலத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தவில்லை. … Read more

நம்ம பள்ளி திட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5லட்சம் உதவி – நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள், திரையுலகினர் நிதி வழங்க கோரிக்கை…

சென்னை: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நடிகர்கள் பலரும் நிதியளித்து உதவுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து,  நம்ம பள்ளி திட்டத்துக்காக, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் தருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகள் அரசு சொத்து அல்ல, மக்களின் சொத்து என்றார். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், ‘நம்ம பள்ளி’ என்னும் புதிய திட்டத்தை முதல்வா் … Read more

இந்திக்கு பதில் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளுங்கள்: ராஜஸ்தான் மக்களுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஜெய்பூர்: இந்திக்கு பதில் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள ராஜஸ்தான் மக்களுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தி எந்த வகையிலும் உதவாது. மக்களை ஏழைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலம் கற்பதை அரசு தடுக்கிறது என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பிபா கால்பந்து போட்டியின் தாக்கம்: கேரளாவில் பரவிய வன்முறை, போலீசாரை தாக்கிய ரசிகர்கள்

திருவனந்தபுரம், கேரளாவில் கால்பந்து போட்டிக்கான ரசிகர்களுக்கு பஞ்சமேயில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீவிர கால்பந்து ரசிகர்களாக உள்ளனர். இதனால், கேரளாவில் பல பகுதிகளில் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்டேடியங்களில் பெரிய திரைகளில் கால்பந்து போட்டிகளை காண்பதற்கு பல வசதிகளும் செய்யப்பட்டன. இந்த நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதின. இதில் அனல் … Read more

Yescon 2023: பிசினஸில் ஜெயிக்க இதெல்லாம் முக்கியம்… வழிகாட்டிய தொழிலதிபர்கள்!

இளம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டும் அமைப்பான ‘யெஸ்’ அமைப்பு (YES – Young Entrepreneurs School) ஆண்டுதோறும் மதுரையில் பெரிய அளவில் கருத்தரங்கம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த ‘YESCON 2023’ கருத்தரங்கம் “அறிவோம் ஆயிரம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுக்க ‘யெஸ்’ அமைப்பின் உறுப்பினராக இருக்கும் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு அவர்களின் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். எமரால்டு ஜூவல்லரி குழுமத்தின் தலைவர் கே. ஸ்ரீனிவாசன் ரூ.30,000 முதலீடு, இன்று டேர்ன் ஓவர் … Read more

புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! முதலமைச்சர் ஆணை

சென்னை: நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிப் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண “புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண “புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. … Read more

2023ஆம் ஆண்டில் ஜேர்மனியில் பல தரப்பினருக்கும் அரசு உதவித்தொகைகள் அதிகரிப்பு…

2023ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கான நிதி உதவி முதல், வீடுகளை வெப்பப்படுத்துவதற்கான நிதி உதவி வரை பல அரசு உதவித்தொகைகளை உயர்த்த ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான உதவித்தொகை 2023 ஜனவரி 1 முதல், 2024 ஏப்ரல் 30 வரை நுகர்வோரின் பயன்பாட்டைப் பொருத்து மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கான நிதி உதவி ஜனவரி 1ஆம் திகதி முதல், குழந்தைகளுக்கான நிதி உதவி மாதம் ஒன்றிற்கு, முதல் மூன்று குழந்தைகளுக்கு … Read more

தீவுத்திடலில் நடக்க உள்ள 47வது சுற்றுலா பொருட்காட்சி தொடர்பான டெண்டரை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: தீவுத்திடலில் நடக்க உள்ள 47வது சுற்றுலா பொருட்காட்சி தொடர்பான டெண்டரை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த ஃபன் வேர்ல்டு ரிச்சர்ட்ஸ் இந்தியா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 2017 பொருட்காட்சி தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை ரூ.3 லட்சம் செலுத்தாததால் விண்ணப்பம் நிறாகரிக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருக்கிறது.