ரொனால்டோ விளையாட தடை: அல் நாசர் கிளப்பிற்கு காத்திருந்த அதிர்ச்சி

கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய புதிய அல் நாசர் கிளப்பிற்காக ஜனவரி 6ம் திகதி விளையாட இருந்த நிலையில், இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் அவர் இரண்டு போட்டிகளில் விளையாட கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. புதிய அணியில் ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இருந்து விலகி பிறகு, சுமார் 1700 கோடி ரூபாய் சம்பளத்துடன், 2025ஆம் ஆண்டு வரை சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்கு விளையாட கால்பந்து வீரர் ரொனால்டோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். ரொனால்டோவின் வருகையை … Read more

ஆம் ஆத்மி – பா.ஜ., உறுப்பினர்கள் மோதல் புதுடில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு| Aam Aadmi Party – BJP members clash postpones New Delhi Municipal Corporation meeting

புதுடில்லி, ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.,உறுப்பினர்களின் மோதலை அடுத்து, மேயர் தேர்தல் நடைபெறாமலேயே புதுடில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த புதுடில்லி மாநகராட்சி தேர்தலில், 250 வார்டுகளில், 134 வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. மாநகராட்சி தேர்தலுக்குப் பின், முதன்முறையாக நேற்று கூடிய மாமன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பதவியேற்ற பின், மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, துணை நிலை கவர்னர் பரிந்துரையின்படி, ‘ஆல்டர்மேன்’ எனப்படும் 10 … Read more

மணிப்பூரை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்தோம் அமித்ஷா பெருமிதம்

இம்பால், பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த பிப்லப்குமார் தேவ் நீக்கப்பட்டு மாணிக் சஹா முதல்-மந்திரி ஆனார். தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால், முதல்-மந்திரி பதவிக்கு மாணிக் சஹாவுடன் பிப்லப்குமார் தேவ், மத்திய மந்திரி பிரதிமா பவ்மிக், மாநில பா.ஜனதா தலைவர் ரஜிப் பட்டாச்சார்யா ஆகியோர் போட்டி போடுகிறார்கள். ஒவ்வொருவரின் ஆதரவாளர்களும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்தநிலையில், திரிபுரா சென்ற மத்திய உள்துறை … Read more

 கூட்டுறவு கூட்டாட்சி விஷயத்தில்…புதிய சகாப்தம்!| In the case of cooperative federalism…a new era!

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில தலைமை செயலர்களின் தேசிய மாநாடு நேற்று துவங்கியுள்ள நிலையில், மாநில அரசுகளின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடன் திட்டங்களை வகுப்பது, அதை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, கூட்டுறவு கூட்டாட்சியின் புதிய சகாப்தத்தை மத்திய அரசு துவக்கி வைத்துள்ளதாக அதிகாரிகள் புகழாரம் சூட்டினர். அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த ஆண்டு நடந்தது. மாநிலங்களின் பங்களிப்பு இந்த மாநாடு மிகவும் ஆக்கப்பூர்வமாக நடந்து … Read more

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: மேற்கு வங்காளத்தில் மத்திய குழுக்கள் விசாரணை

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளுக்கும் வீடு ஒதுக்கப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நேரடி விசாரணை நடத்த மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக துணை செயலாளர் சக்திகாந்தி சிங் தலைமையிலும், மற்றொரு அதிகாரி சைலேஷ்குமார் தலைமையிலும் 2 குழுக்கள் மேற்கு வங்காளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில், சக்திகாந்தி சிங் தலைமையிலான குழு, மால்டா மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டது. கிராம மக்களுடன் பேசியது. … Read more

1.5 கோடி தொண்டர்கள் ஆதரவு உள்ளது உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பு வாதம்| 1.5 கோடி தொண்டர்கள் ஆதரவு உள்ளது உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பு வாதம்

புதுடில்லி:’எனக்கு 1.5 கோடி தொண்டர்களின் ஆதரவு உள்ளது. பொதுச் செயலர் தேர்தல் இன்று நடந்தாலும், நான் தான் வெற்றி பெறுவேன்’ என, அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும், 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்,- இணை … Read more

புழக்கத்தில் விட முயன்ற ரூ.1¼ கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்

பெங்களூரு: குறைந்த வட்டிக்கு கடன் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா, கர்நாடகம்-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. அத்திப்பள்ளி அருகே உள்ள சித்தாபுரம் பகுதியில் ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்தில் நல்லக்கனி (வயது 53) என்பவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதே அலுவலகத்தில் சுப்பிரமணியன் (60) என்பவர் ஆடிட்டராக இருந்து வந்தார். இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக்கு கடன் தருவதாகவும் கூறினார்கள். அவர்களின் … Read more

அமெரிக்க நீதிபதியான பீடி தொழிலாளி கேரள வக்கீலின் அசாத்திய சாதனை| American judge Beedi laborer Kerala lawyers incredible feat

திருவனந்தபுரம், சிறுவயதில் கேரளாவில் பீடி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்த சுரேந்திரன் கே.படேல், தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், பீடி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்த தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சுரேந்திரன் கே.படேல். குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல், தன் மூத்த சகோதரியுடன் பீடி சுற்றும் வேலைக்கு சென்றார். ஒருகட்டத்தில் கல்வியின் தேவையை உணர்ந்தவர், சிலரது உதவியுடன் பள்ளிக் கல்வியை முடித்தார். கேரளாவின் பையனுார் … Read more

பிறந்தநாள் கொண்டாட நடிகர் யஷ் குடும்பத்தினருடன் துபாய் பயணம்

பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எப்.-1 மற்றும் கே.ஜி.எப்.2 படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. மேலும் வசூலில் இந்திய அளவில் பெரும் சாதனையையும் படைத்துள்ளது. இ்ந்த நிலையில் யஷ்சுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாள் ஆகும். எப்போதும் ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வந்த நடிகர் யஷ், தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடாமல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் புனித்ராஜ்குமார் … Read more

டொனால்ட் டிரம்பை “பொய்யர்” என்று சாடிய வட கொரிய அமைச்சர்: மரண தண்டனை நிறைவேற்றிய கிம் ஜாங் உன்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பொய்யர் என்று கூறிய வட கொரிய அமைச்சருக்கு அந்த நாட்டின் சர்வாதிகார ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார். அமைச்சருக்கு மரண தண்டனை ஐ.நா பொதுச் சபை உரையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை “பொய் ராஜா” என்றும் “ஜனாதிபதி ஈவில்” என்றும் குறிப்பிட்டு இருந்த வட கொரிய அமைச்சர் ரி யோங் ஹோ-விற்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணத் தண்டனை நிறைவேற்றியுள்ளார். ரி … Read more