இளம்பெண் கொலை வழக்கு விசாரணையில் புதிய தகவல்| Dinamalar

புதுடில்லி, புதுடில்லியில், இளம்பெண் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கைப்பற்றிய எலும்புகள் ஷ்ரத்தாவுடையது தான் என மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடில்லியில் வசித்து வந்த அப்தாப் பூனேவாலா என்ற இளைஞர், தன்னுடன் ஒன்றாக வசித்த காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை நகரின் பல பகுதிகளில் வீசி எறிந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் … Read more

இறப்பு எண்ணிக்கை அதிகமாகலாம்… சிறார்கள் பாதிப்பு தொடர்பில் சுகாதாரத்துறை மீண்டும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. பலியான சிறார்களின் எண்ணிக்கை குறித்த தகவலை பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து strep A பாதிப்புக்கு பலியான சிறார்களின் எண்ணிக்கை இதுவெனவும் தெரிவித்துள்ளனர். @PA மட்டுமின்றி, பிரித்தானியாவில் strep A பாதிப்பானது உச்சம் பெற்றுவருவதை அதிகாரிகள் தரப்பு இன்னமும் நம்பவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், எதிர்வரும் நாட்களில் அதிக இறப்பு எண்ணிக்கை பதிவாகலாம் எனவும் … Read more

புதுடில்லி மாணவி மீது வீசப்பட்ட ஆசிட் பிளிப்கார்ட் தளத்தில் வாங்கியது அம்பலம்| Dinamalar

புதுடில்லி, புதுடில்லியில், பள்ளி மாணவியின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ‘ஆன்லைன்’ வர்த்தக செயலியான, ‘பிளிப்கார்ட்’ வாயிலாக வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்மேற்கு டில்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி முகத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். வலியால் துடித்த அந்த மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசிட் வீசிய முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா, 20, அவருக்கு உதவிய இரு நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால், 19, … Read more

எங்கப்பா அந்த மெஸ்ஸி? அன்று கேலி செய்த சவுதி ரசிகர் இப்போது.., நிலைமையை புரட்டிப்போட்ட அர்ஜென்டினா!

குரூப் ஸ்டேஜ் போட்டியில் தோல்வியுற்றதால் லியோனல் மெஸ்ஸியை கேலி செய்த சவுதி அரேபிய ரசிகர் இப்போது அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்து ஆதரவளித்துவருகிறார். அதிர்ச்சியூட்டும் நிகழ்வு நவரம்பர் 22-ஆம் திகதி நடந்த குரூப் ஸ்டேஜ் போட்டியில், சவுதி அரேபிய அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தோல்வியுற்றது. சவுதி அரேபிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. FIFA உலகக் கோப்பை 2022 போட்டி வரலாற்றில் இது மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது. … Read more

புலி கடித்து பெண் பலி | Dinamalar

சந்திராபூர்:மஹாராஷ்டிராவில் புலி தாக்கியதில், 50 வயது பெண் பலியானார். மஹாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று கிராமத்துக்குள் புகுந்து, மக்களை தாக்கி வருகிறது. இங்கு காதி கிராமம் பகுதியில் உள்ள பருத்தித் தோட்டத்தில் நேற்று புகுந்த இந்தப் புலி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஸ்வரூபா, 50, என்ற பெண்ணை தாக்கி கொன்றது. தப்பி ஓடிய புலியை வனத் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், சந்திராபூர் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும், … Read more

இந்த முறை குறி தப்பாது… தயாராகும் 200,000 வீரர்கள்: சந்தேகம் வேண்டாம் என சீறும் ரஷ்யா

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு 200,000 வீரர்களுடன் ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தாக்குதலுக்கு தயாராகும் புடின் ரஷ்யா இன்னொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாரெடுத்து வருவதை கசிந்த தரவுகளின் அடிப்படையில் உக்ரைன் முதன்மை தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார். புதிதாக திரட்டப்பட்ட 200,000 நபர்களை வீரர்களாக உருமாற்றி, விளாடிமிர் புடின் ஒரு புதிய தாக்குதலுக்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என தளபதி Valery Zaluzhny தெரிவித்துள்ளார். @epa கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனுக்குள் … Read more

8 வயது சிறுமி கொலை 14 வயது சிறுவன் கைது| Dinamalar

ராய்ப்பூர், சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் வசிக்கும் 8 வயது சிறுமி, கடந்த 7ம் தேதி மாயமானாள். ஐந்து நாட்களுக்குப் பின், அருகில் இருந்த காட் டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாள். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பின் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் மாநிலம் முழுதும் கடும் … Read more

பாறை இடுக்கில் 3 நாட்களாக தவித்தவர் மீட்பு| Dinamalar

ஹைதராபாத் தெலுங்கானாவில், பாறைகளுக்கு இடையில் சிக்கி மூன்று நாட்களாக தவித்தவர் பத்திரமாக மீட்கப்பட்டார். தெலுங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜு, கடந்த 13ம் தேதி அருகிலிருந்த வனப்பகுதிக்குச் சென்றார். அப்போது, இரு பாறைகளுக்கு நடுவில் ராஜுவின் மொபைல்போன் விழுந்து விட்டது. இதை எடுக்க இடுக்கில் இறங்கிய அவர், போனை எடுத்த பின் அதில் வசமாக சிக்கிக் கொண்டார். நீண்ட நேரம் முயற்சித்தும் அவரால் மேலே முடியவில்லை. இதையடுத்து, குடும்பத்தினருக்கு போன் வாயிலாக தகவல் … Read more

அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி:இந்திய – சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், 5,000 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ‘அக்னி – 5’ ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் சமீபத்தில் ஊடுருவ முயன்றனர். அவர்களை நம் வீரர்கள் தீரத்துடன் போராடி விரட்டி அடித்தனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின், டி.ஆர்.டி.ஓ., … Read more

மும்பை: சொத்துப் பிரச்னை: அம்மாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்த மகன் கைது!

மும்பை அந்தேரி ஜுகுவில் கல்பதரு என்ற கட்டடத்தில் வசித்தவர் வீணா கபூர் (74). இவர் தன்னுடைய இரண்டாவது மகன் சச்சினுடன் வசித்துவந்தார். சச்சினுக்குத் திருமணமாகவில்லை. அவர்கள் வசிக்கும் வீடு யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாகப் பிரச்னை இருந்துவந்தது. இருவரும் அடிக்கடி சின்னச் சின்னப் பிரச்னைகளுக்காகச் சண்டையிட்டுக்கொள்வதுண்டு என்று கூறப்படுகிறது. வீணாவின் மற்றொரு மகன் நவீன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் தினமும் தன்னுடைய தாயாருக்கு போன் செய்து பேசுவது வழக்கம். வழக்கம்போல் அவர் … Read more