ஜப்பான் நாட்டில் குழந்தை பெறும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்

ஜப்பான்: ஜப்பான் நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்துள்ளது. இறப்புகள் அதிகரிப்பால் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

பாரத் ஜோடோ யாத்திரையில் 100 நாள்கள் – ராகுல் காந்தி சாதித்தது என்ன?!

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்பட பல மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது. பாரத் ஜோடோ யாத்திரை – கர்நாடகா கன்னியாகுமரியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரைக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைத்துவரும் வரவேற்பு, காங்கிரஸாரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. … Read more

வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்தது

சென்னை: சென்னை பழவந்தாங்கலில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை எனத் தகவல்; பழவந்தாங்கல் போலீசார் விசாரணை

பெரியகுளம் அருகே சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்தவர் கைது

தேனி: பெரியகுளம் அருகே அம்பாட்டியில் வீட்டு மாடியில் சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 17-ம் தேதி சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக துறைப்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

யார் பப்பு?: `தன் வீட்டின் கொல்லைப்புறத்தை பார்க்கவேண்டும்’ – மொய்த்ராவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

இந்திய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே `பப்பு’ என்ற சொல்லை மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தங்களுக்குள் ஒருவரையொருவர் அடிக்கடி விமர்சிப்பதற்காகப் பயன்படுத்திவருகின்றன. கடந்த காலங்களில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை அரசியலில் பப்பு என பா.ஜ.க விமர்சித்திருந்தது. திரிணாமுல் காங்கிரஸும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமித் ஷா தான் இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என விமர்சித்திருந்தது. இதுமாதிரியான சூழலில் பப்பு எனும் இந்த விமர்சன சொல், நாடாளுமன்றத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. … Read more

உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.63 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 63.01 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலவர பூமியான நகரம்… தெருக்களில் திரண்ட ரசிகர்களால் வெடித்த மோதல்

கத்தார் உலகக் கோப்பை அறையிறுதியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதையடுத்து திரளான ரசிகர்கள் தெருக்களில் திரண்ட நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் களமிறக்கப்பட்டுள்ளனர். வெற்றிவாய்ப்பை இழந்த மொராக்கோ உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் தெரிவாகியுள்ளது. இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணி வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது. @twitter மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடு ஒன்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதே இது … Read more

டிசம்பர் 15: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 208-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 208-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.