அதிமுக பொதுக்குழு வழக்கு இந்த வாரத்திற்குள் விசாரணை முடியும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணையை  இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்யப்படும் என  நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர். தொடர்ந்து, … Read more

பள்ளிக் கல்வித்துறையில் மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்..!!

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை மாவட்ட வாரியாக பற்றாளர்களாக நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இரு வேறு சம்பவங்களால் விமான சேவை பாதிப்பு| Airline service affected by two separate incidents

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரான்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக டில்லியில் தரையிறங்கியது. ஏர் இந்தியா B787-800 விமானம் புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து 210 பயணிகளுடன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி புறப்பட்டது. அப்போது நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுடில்லி இந்திரா காந்தி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசர அவசரமாக தரையிறங்கியது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவில் … Read more

மதுரவாயலில் நடந்த கொடூர விபத்து; தம்பியின் கண் முன்னே பறிபோன அக்காவின் உயிர் – என்ன நடந்தது?

சென்னை அருகில் உள்ள போரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (22). இவர் கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று ஷோபனா தன் தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காகத் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். மதுரவாயல் சர்வீஸ் சாலையில் பயணம் செய்யும்போது, சாலையில் எதிரே வந்த வேன் ஷோபனாவின் இரு சக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த சாலை இதில் நிலைதடுமாறி ஷோபனா பைக்குடன் சாலையில் விழுந்தார். … Read more

நான் மீண்டும் தாலி முடிச்சு போட்டு கொள்ளாததற்கு காரணம்! மனம் திறந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகை

பிரபல தமிழ் திரைப்பட நடிகை பிரகதி தான் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து மனம் திறந்துள்ளார். கணவருடன் விவாகரத்து தமிழில் வீட்ல விஷேங்க, பெரிய மருது, ஜெயம், கெத்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரகதி. 47 வயதான பிரகதி தனது கணவரை பல ஆண்டுகளுக்கு முன்னரே விவாகரத்து செய்துவிட்டார். இதுவரையில் மறுமணம் செய்யாமல் தனது பிள்ளைகளை தானே வளர்த்து வருகிறார். தான் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என … Read more

கோயில்கள், புராதன சின்னங்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம்! தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்..

சென்னை: புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள்  பாதிக்காத வகையில் ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தின்படி, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த கவுதமன் உள்பட மூன்று பேர் … Read more

ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது..!!

ஈரோடு: ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மான் வேட்டையாடிய வீரன், ராமர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

குப்பை கிடங்கான ஏரி கிராம மக்கள் எதிர்ப்பு| Aeri villagers protest against garbage dump

சீனிவாச சந்திரா : சீனிவாச சந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜோடி கிருஷ்ணாபுரா கிராம ஏரியை குப்பை கிடங்காக மாற்றியுள்ளனர். இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கவயலில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் சீனிவாச சந்திரா உள்ளது. இதன் சர்வே எண்: 35, ஜோடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 8.29 ஏக்கரில் ஏரி உள்ளது. சீனிவாச சந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் குவியும் குப்பைகளை கொண்டு கொட்டுவதற்கு அரசின் வருவாய்த் துறையினர் ‘பீளவாரா’ என்ற இடத்தில் 8 … Read more

“கொரோனா நேரத்துல ஆம்புலன்ஸ் ஓட்டினேன்; சம்பளம் தராம ஏமாத்துறார்!" – ரெட் கிராஸ் நிர்வாகிமீது புகார்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று சிறு குழந்தைகள் இருக்கின்றனர். அந்தோணிராஜ் தஞ்சாவூர் ரெட்கிராஸில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலத்தில் முழு நேரமும் அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி வந்திருக்கிறார். ரெட்கிராஸ் நிர்வாகி முத்துக்குமார் இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டியதற்காக ஊக்கத் தொகையாக அரசு வழங்கிய சம்பளப் பணத்தை ரெட்கிராஸ் அமைப்பின் துணைத் தலைவரான முத்துக்குமார் … Read more