உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அடிப்படை உரிமை மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதி என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய (டிச.,7) விசாரணையின் போது, … Read more

ஷட்டரை உடைத்து ரூ.13.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமி! – போலீஸ் விசாரணை

ஈரோடு, மேட்டூர் ரோட்டில் முனிசிபல் காலனி பிரிவு சாலையையொட்டி செல்போன் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமின் பங்குதாரர்களாக கோவையைச் சேர்ந்த தரணிதரனும், ஈரோட்டைச் சேர்ந்த பூபதியும் இருக்கின்றனர். ஷோரூமை கௌதம், கார்த்திக் ஆகிய இருவரும் பொறுப்பில் எடுத்து நடத்தி வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல ஷோரூமை பூட்டிவிட்டு, கௌதம், கார்த்திக் ஆகிய இருவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். நேற்று நள்ளிரவில் செல்போன் ஷோரூமுக்கு முன்புறம் அழுக்கு லுங்கி, அழுக்கு மூட்டையுடன் ஒரு நபர் வந்து கடையின் ஷட்டர் முன்புறம் … Read more

கத்தார் உலகக் கோப்பையில் மது விற்பனை கட்டுப்பாடு காரணமாக… இங்கிலாந்து ரசிகைகள் கூறிய முக்கிய தகவல்

உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் கத்தாரில் மது விற்பனை தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக அங்கு வந்துள்ள பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாக உணர்ந்தேன் இது குறித்து இங்கிலாந்து ரசிகை எல்லி மொலோசன் கூறுகையில், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் என எதிர்பார்த்தேன், பாதுகாப்பாக இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் பயணம் செய்து வந்துள்ள ஒரு பெண் ரசிகையாக நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். மதுபான விற்பனை பாலியல் … Read more

சென்னை காந்தி மண்டபம் திறந்தவெளியில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டணத்துடன் அனுமதி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை காந்தி மண்டபம் திறந்தவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த  கட்டணத்துடன் கூடிய அனுமதி வழங்குவதாக  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்கான கட்டணத் தொகையையும் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில் கிண்டி காந்தி மண்டபம்  வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் பல்கலைக்கழக விழாக்கள் பட்ட மளிப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள், அரிமா சங்க நிகழ்ச்சிகள், சுழற் சங்க நிகழ்ச்சிகள், பள்ளிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், … Read more

மணல் கொள்ளையை தடுக்க மணல் விற்பனைக்கு தமிழ்நாடு மணல் கழகம் தொடங்கக் கோரிய வழக்கு

மதுரை : மணல் கொள்ளையை தடுக்க டாஸ்மாக் போன்று, மணல் விற்பனைக்கு தமிழ்நாடு மணல் கழகம் தொடங்கக் கோரிய வழக்கில் மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொடர்ந்த  வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு கவலையில் காங்., பரமேஸ்வர்| Dinamalar

பெங்களூரு, : முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில், துமகூரில் நடக்கும் ம.ஜ.த.,வின் பஞ்சரத்ன ரத யாத்திரைக்கு, மக்களிடம் கிடைத்த வரவேற்பு, காங்., மூத்த தலைவர் பரமேஸ்வரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் ம.ஜ.த., மாவட்ட வாரியாக, பஞ்சரத்ன ரத யாத்திரை நடத்தி வருகிறது. தற்போது, துமகூரில் ரத யாத்திரை நடந்து வருகிறது. இதற்கு மக்களிடம், நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. கொரட்டகரேவில், குமாரசாமி தலைமையில் நடந்த பஞ்சரத்ன ரத யாத்திரைக்கு, பெருமளவில் மக்கள் திரண்டனர். இது … Read more

Oxford Word 2022: ஆக்ஸ்ஃபோர்டு அறிவித்த இந்த ஆண்டிற்கான வார்த்தை இதுதான்!

ஆக்ஸ்ஃபோர்டு, ஆண்டுதோறும் அந்த வருடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட மற்றும்  அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைக்கு ‘இந்த  ஆண்டிற்கான  வார்த்தை’ என்ற அங்கீகாரத்தை வழங்கும். அந்தவகையில் முதல்முறையாக உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் இந்த ஆண்டிற்கான வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஸ்னரி தேர்ந்தெடுத்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு லெக்ஸிகோகிராஃபர்ஸ் Metaverse, StandWith, Goblin Mode போன்ற மூன்று வார்த்தைகளைக் கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களிடம் கேட்டுள்ளனர். அந்த வகையில் ‘Goblin Mode’ என்ற இந்த வார்த்தை 3,18,956 … Read more

எங்களுக்காக வேலை செய்கிறவர்கள்தான் வேண்டும்: புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் கொண்டுவர இருக்கும் புதிய சட்டம்

புதிய சட்டம் ஒன்றின் மூலம் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திட்டமிட்டுவருகிறார். எங்களுக்காக வேலை செய்கிறவர்கள்தான் வேண்டும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திட்டமிட்டுவரும் நிலையில், அது தொடர்பான சட்டவரைவு ஒன்று 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அந்த சட்டவரைவு குறித்து பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin, இது ஒருங்கிணைந்து வாழ்வோரை நல்ல முறையில் வாழவைப்பதும், வெளியேற்றப்படுபவர்களை … Read more

770 கி.மீ தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருகிறது…! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும் என்றும் அதன்காரணமாக,  மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் … Read more

திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி உட்பட 5 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி உட்பட 5 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால் பாபு வேலூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி ஈரோடு மருத்துவக் கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.