ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, விடுதலைப்புலை இயக்கத்தினரால், தமிழ்மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்திய வரலாற்றில், அழியாத வடுவாக பதிவாகி உள்ளது. … Read more

உசிலம்பட்டி அருகே 58 கால்வாய் நீரை மாற்று வழியில் கொண்டு வர வலியுறுத்தி நடந்த மறியல் கைவிடப்பட்டது

மதுரை: உசிலம்பட்டி அருகே 58 கால்வாய் நீரை மாற்று வழியில் கொண்டு வர வலியுறுத்தி நடந்த மறியல் கைவிடப்பட்டது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் மறியல் நடத்தியவர்களிடம் ஆட்சியர் சமரசபேச்சு நடத்தினர்.

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. மெகா பேரணி

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் கூட்டமொன்றில் கலந்து கொண்ட கிரி பேசும்போது, சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார்…!! என சிரித்து கொண்டே கிரி கூறினார் ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை … Read more

மேட்டர் எனெர்ஜி 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

Use இந்தியாவின் ஸ்டார்ட் அப் மேட்டர் எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் புதிய எனெர்ஜி (Matter Energy) பைக் மாடல் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 5.0 kWh லிக்யூடு கூல்டு பேட்டரி, டூயல் சேனல் ஏபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ள மாடலாக விளங்குகிறது. IP67 தர மதிப்பீடு பெறப்பட்ட திரவ நிலையில் குளிரூட்டப்பட்ட, 5.0 kWh பேட்டரி, வழக்கமான 5A வீட்டு சாக்கெட்டில் செருகப்பட்டாலும் டாப்-அப் செய்ய முடியும். முழுமையான … Read more

நெல்லை: கடனை திருப்பிச் செலுத்தாத தாய், மகள் கடத்தல்! – கந்துவட்டி கொடூரம்; ஒருவர் கைது

நெல்லை மாவட்டம், மூலக்கரைப்பட்டி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சித்திகா பானு. 26 வயதான அவர், தன் கணவன் சுல்தான் பாதுஷாவுடன் சூப் வியாபாரம் செய்யும் கடையை நடத்திவருகிறார். தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக அவரால் தொடர்ந்து கடையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கந்துவட்டி வாங்கி, கடையை விரிவுபடுத்த முடிவுசெய்திருக்கிறார். பணம் அதற்காக நெல்லை கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையில் வசிக்கும் கந்தையா என்பவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். 43 வயதான கந்தையா, வட்டிக்குப் பணம் கொடுப்பதையே தொழிலாக நடத்திவந்திருக்கிறார். … Read more

பறந்த சிக்சர்கள்! ரோகித் சர்மாவின் சாதனை முறியடிப்பு… தமிழக வீரர் புதிய உலக சாதனை

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் உலக சாதனை படைத்ததோடு ரோகித் சர்மாவின் சாதனையை தூள் தூளாக்கியுள்ளார். தமிழக வீரர் ஜெகதீசன் விஜய் ஹசாரோ தொடர் தொடங்கும் முன் நடைபெற்ற ஐபிஎல் அணிகள் வீரர்களை விடுவித்தது. இதில் சிஎஸ்கே அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது. இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த ஜெகதீசன் அந்த வெறியை மைதானத்தில் காட்டினார். விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தொடர்ந்து 4 சதங்களை விளாசினார். இதன் மூலம் … Read more

தேவா பிறந்தநாள் நிகழ்ச்சியில் தமிழக ஊடகங்களை வெளுத்துவாங்கிய ரஜினிகாந்த்… வீடியோ

திரைப்பட இசையமைப்பாளர் தேவா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் தேவா THE தேவா என்ற பெயரில் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகைகள் மீனா, மாளவிகா, நடிகர் ஜெய், இயக்குனர் விக்ரமன், இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, அனிருத் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் இசையமைப்பாளர் தேவா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பேசிய ரஜினிகாந்த், சிங்கப்பூர் அதிபராக … Read more

திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து

திருப்பூர்: திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. பள்ளி குழந்தைகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

குத்தா… 'தத்தா' ஆனார் – நாய் குரைப்பது போல 'மிமிக்கிரி' செய்தவரின் கோரிக்கை நிறைவேறியது…!

கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்தி குமார் தத்தா. இவரின் பெயர் ரேஷன் அட்டையில் தவறாக பதிவாகியுள்ளது. ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பதற்கு பதில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. இந்தி மொழியில் ‘குத்தா’ என்றால் ‘நாய்’ என்று பொருள். இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். ரேஷன் அட்டையில் குத்தா என்று தவறாக பதிவாகியுள்ள பெயரை தத்தா என்று மாற்ற அவர் 2 முறை விண்ணப்பித்துள்ளார். ஆனால், … Read more

Jagadeesan: தொடர்ச்சியாக ஐந்து சதங்கள்; திறக்காத கதவை உடைத்தெறிய முயலும் தமிழக வீரர் ஜெகதீசன்!

தனக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் பெரிதாக இந்திய கிரிக்கெட்டில் இல்லை என்றாலும் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்ததன் மூலமாக மூடப்பட்ட கதவுகளை உடைத்துத் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன். காலை எழுந்தவுடன் ஒரு டீ குடிப்பது போல ஒவ்வொரு நாளும் ஒரு சதம் அடித்து அசத்தி வருகிறார் ஜெகதீசன். இந்திய கிரிக்கெட், உலக கிரிக்கெட் என தினமும் ஒரு சாதனையை உடைப்பதுதான் இவரின் தற்போதைய பொழுதுபோக்கு. நாளேடுகளில் ஒரு ஓரமாக வந்த ஜெகதீசனின் பெயர் … Read more