“சுதந்திரத்துக்காகப் போராடுவது என்றால் என்ன என்பது பிரிட்டனுக்குத் தெரியும்..!" – ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமராகப் பதிவியேற்றப் பிறகு, ரிஷி சுனக் முதன்முறையாக நேற்று (19-11-22) உக்ரைன் தலைநகர் கீவுக்குச் சென்றார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றதற்குப் பின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தது இதுவே முதன்முறையாகும். கீவ் நகரில் இரு தலைவர்களின் சந்திப்பின்போது, `ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரில் பிரிட்டன் எப்போதும் உக்ரைனுடன் துணை நிற்கும்’ என ரிஷி சுனக் கூறினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, நேற்று ரிஷி சுனக் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் … Read more

4 வயதில் அரபு, ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்ட தமிழ் சிறுவன்: பெற்றோர் கூறும் பிரமிக்க வைக்கும் பின்னணி

பிரித்தானியாவின் ரீடிங் பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 4 வயது தமிழ் சிறுவன் தொலைக்காட்சி பார்த்தே அரபு மற்றும் ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்ட பிரமிக்க வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. சம்பவத்தின் கதாநாயகன் தங்களுக்கு புரியாத மொழிகளை மிக எளிதாக க்ற்றுக்கொண்டு, தங்களிடம் பேச முயற்சிப்பதால், தற்போது தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பதாக சிறுவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். @dailymail தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் இருந்து பிரித்தானியாவின் ரீடிங் பகுதிக்கு 2019ல் குடியேறியவர்கள் அருண் ராமராஜன்(34) மற்றும் பவித்ரா … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய … Read more

போதையிலிருந்த பயணியை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்ட நடத்துனர்; வைரலான வீடியோ -அதிகாரிகள் நடவடிக்கை

தமிழக அரசுப் பேருந்து ஒன்று, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றிருக்கிறது. அந்தப் பேருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தபோது, அதிலிருந்த பயணியர்கள் கீழே இறங்கியிருக்கின்றனர். அப்போது, அங்கு இறங்க வேண்டிய நபர் ஒருவர் மதுபோதையில் அரசு பேருந்து நடத்துனர் பிரகாஷிடம் வாக்குவாதம் செய்தபடி, கீழே இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து நடத்துனர் பிரகாஷ், மதுபோதையில் இருந்தவரை பேருந்தின் படிக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.  அரசுப் … Read more

ஈராக், சிரியா மீது துருக்கி விமானப்படை தாக்குதல்: வீடியோவை வெளியிட்டு பதிலடி வழங்கப்பட்டதாக அறிவிப்பு

இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில்,  சிரியா மற்றும் ஈராக் உள்ள இலக்குகள் மீது துருக்கி விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. துருக்கி குண்டுவெடிப்பு கடந்த நவம்பர் 13ம் திகதி இஸ்தான்புல்லின் பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் திடீரென அதிர்ச்சியூட்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல் மையப்பகுதியில் அரங்கேறிய பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ❗Blast hits central … Read more

விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு நடிகர் விஜய் வருகை: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்தார். சென்னை பனையூர் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொளவதற்காக 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பனையூர் வந்துள்ளனர். 

ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்பு| Dinamalar

மும்பை: மஹாராஷ்ராவில் 74வது நாள் ராகுல் யாத்திரையில் ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்றார். காங்., எம்,பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி முதல் மஹாராஷ்ராவில் நடைபயணம் நடந்து வருகிறது. நேற்று 73வது நாளாக அவரது நடைபயணம் மஹாராஷ்ராத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் தொடர்ந்தது. அவர் செல்லும் வழியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இரவில் ஜல்காவ் மாவட்டத்தை … Read more

மும்பை: தீயாகப் பரவும் தட்டம்மை, 1,250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு: 9 பேர் உயிரிழப்பு!

மும்பையில் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில் உள்ள கோவண்டியில் மட்டும் இந்த நோய்க்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 8 பேரும், புறநகரான பிவாண்டியில் ஒருவரும் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து வந்தனர். அதன் பிறகுதான் மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, குழந்தைகள் உயிரிழப்புக்கு தட்டம்மை நோய்தான் காரணம் என்பதை உறுதிசெய்தது. தற்போது மும்பையில் மட்டும் தட்டம்மை நோய் அறிகுறிகளுடன் 1,256 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டால் … Read more

ராஜகுடும்பத்தில் இனி இந்த உணவு பரிமாறக் கூடாது: தடை செய்து உத்தரவிட்ட மன்னர் சார்லஸ்

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் எந்த இல்லத்திலும் இனி foie gras உணவு சமைக்க வேண்டாம் என மன்னர் சார்லஸ் தடை செய்து உத்தரவிட்டுள்ளார். கிளாரன்ஸ் மாளிகையில் குறித்த பிரஞ்சு உணவை பரிமாறுவது என்பது நெறிமுறையற்ற செயல் எனவும் மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ராணியார் மறைவுக்கு முன்னர் வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்திலும், தமது கிளாரன்ஸ் மாளிகையில் குறித்த உணவை சார்லஸ் தடை செய்திருந்தார். @PA wire foie gras உணவு என்பது வாத்துகளுக்கு அவைகளுக்கான உணவை வலுக்கட்டாயமாக … Read more

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரனை

கோவை: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோவில் குண்டுவெடித்தபோது காயமடைந்த ஒருவரின் செல்போன் சிம்கார்டு தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிம்கார்டு வாங்க தந்த ஆதார் எண், உதகை அருகே குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தகவல் தெரிவித்துள்ளனர். குந்தசப்பையை சேர்ந்தவரை கோவைக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.