ராஜபாளையம்: ரூ.15,000 கடனுக்காக பிரபல ரெளடி காரில் கடத்திக்கொலை – நடந்தது என்ன?!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, ரூ.15,000 கடனை திருப்பித்தராததால் ஆத்திரமடைந்த நபர் தன் நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ரெளடியை காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். பிரபல ரெளடியான இவர் மீது விருதுநகர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் நண்பர், சேத்தூர் பாரதி நகரை சேர்ந்த மருதுபாண்டி. இந்நிலையில், மருதுபாண்டியிடம் கடந்த ஒரு … Read more

ரொனால்டோவை முதல் போட்டியிலேயே திணறடித்த எட்டிஃபாக்: வீடியோ காட்சிகள்

சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எட்டிஃபாக் அணி வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியாமல் திணறினார். அல் நஸர் அணியில் ரொனால்டோ பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிளவு பிறகு, தனது 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்துடன் சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப்பில் இணைந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-எட்டிஃபாக் … Read more

பாஜக இளைஞரணி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: பாஜக இளைஞரணி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 26 வயதான இவர், பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக சொல்லி, அவரை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது. பிறகு ஒருகட்டத்தில் அந்த சிறுமியிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம்.. இதனால், கலங்கி போன அந்த சிறுமி, வினோத்திடம் இதை பற்றி கேட்டதற்கு, அவருக்கு கொலை மிரட்டல் … Read more

சென்னையில் குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரை சாலையில் 3-வது மற்றும் இறுதி ஒத்திகை

சென்னை: சென்னையில் குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரை சாலையில் 3-வது மற்றும் இறுதி ஒத்திகை நடந்து வருகிறது. முப்படை, காவல்துறை, உள்ளிட்ட துறைகளின் அணிவகுப்பு, மாணவ,  மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது.  2 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

'கோவின்' தளத்தை தொடர்ந்து தொடர் தடுப்பூசி பணிகளுக்காக 'யு-வின்' இணையதளம் தொடக்கம்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை நிர்வகிப்பதற்காக கோவின் இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுடன், சர்வதேச அளவிலும் இந்த இணையதளம் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கான தொடர் தடுப்பூசி நடவடிக்ைககளுக்காக புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் சர்வதேச தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கும் இந்த இணையதளத்துக்கு ‘யு-வின்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இது பரிசோதனை முயற்சியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் … Read more

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆவி தான் சசிகலாவை சிறையில் தள்ளியது!” – அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் திருச்சி மாவட்டம், லால்குடி திருமணமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளாரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “அம்மா(ஜெயலலிதா) எப்போது மறைவார், இந்த இயக்கத்தை குறுக்கு வழியில் நாம் கைப்பற்ற வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தோடு சசிகலா இந்த இயக்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவுடைய … Read more

உலகின் உணவு பிரச்சனை…இந்த இரண்டு நாடுகளின் நடவடிக்கைகளே காரணம்! அமெரிக்கா குற்றச்சாட்டு

உலகின் உணவு பிரச்சனைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் முக்கிய காரணம் என்று அமெரிக்காவின் கருவூல செயலர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். வட்டமேசை கூட்டம் செனகலில் உள்ள டாக்கரில் ஜனவரி 20ம் திகதி அன்று பெண்கள் மற்றும் இளைஞர் வணிக காப்பகத்தில் பெண் தொழில் முனைவோர்களின் வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் கருவூல செயலர் ஜேனட் யெலன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கை பல பிரச்சனைகளை உலக அளவில் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார், … Read more

உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.47 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.53 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி குடியரசுதின விழா ஒத்திகை: பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி

புதுடெல்லி, டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி அலங்கார ஊர்தியாக அது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அலங்கார ஊர்தியை தமிழகம் முழுவதும் வலம் வரச்செய்தார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஊர்தி வடிவமைப்பின் மாதிரிகள் மத்திய … Read more