கிணற்றில் சடலமாக மிதந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள்! அதிர்ச்சியாக்கிய மர்ம மரணம்

தமிழக மாவட்டம் கடலூரில் சிறுமி உட்பட மூன்று பெண்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் மிதந்த சடலங்கள் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றில் மிதந்த சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதன் … Read more

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும்! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

சென்னை; வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும் என அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமக  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார். மறந்த முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இரண்டு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,  இனமானப் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் … Read more

வடசென்னையின் அடையாளமாக திகழ்ந்த 55 ஆண்டுகள் பழமையான அகஸ்தியா திரையரங்கம் இடிப்பு

சென்னை: வடசென்னையின் அடையாளமாக திகழ்ந்த 55 ஆண்டுகள் பழமையான அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு தண்டையார்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் அகஸ்தியா திரையரங்கம் தொடங்கப்பட்டது. வடசென்னையில் 1,004 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட திரையரங்கமாக அகஸ்தியா விளங்கியது. கொரோனா உள்ளிட்ட சூழல் காரணமாக இழப்பு ஏற்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியா திரையரங்கம் மூடப்பட்டது.

குடும்ப செலவு தகராறில் கொலை : காதலியை கொன்றவர் தகவல்| Dinamalar

புதுடில்லி:குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக, காதலியைக் கொன்று துண்டு துண்டாக்கிய அப்தாப் புனேவாலா, ‘நார்கோ’ பரிசோதனையில் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா, ஷ்ரத்தா வால்கர்இருவரும் காதலர்களாக பழகி வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பைத் தொடர்ந்து இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர்.இதற்கிடையே, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவைக் கொலை செய்து, ௩௫ துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியது சமீபத்தில் தெரியவந்தது.கைது செய்யப்பட்டுள்ள அப்தாப், விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து, … Read more

பாலியல் தொல்லை – இந்தியாவில் உடனடி நடவடிக்கை: தென் கொரிய யூட்யூபர் நெகிழ்ச்சி

மும்பை, மும்பை தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். மியோச்ச் அவர்களிடம் நோ நோ என்று கூறுகிறார். இதற்கிடையில் அவர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயன்றார். இளைஞர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினார்கள். … Read more

"அனைவருக்கும் ஒரே மாதிரியான திருமணம்!" – பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் மத்தியப் பிரதேச முதல்வர்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால், மத்தியில் ஆட்சியிலிருக்கும்போதே குடியுரிமை திருத்த சட்டம், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் போன்ற சட்டங்களை அமல்படுத்த பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது. அதில் பொது சிவில் சட்டம் முக்கியமான ஒன்றாக பா.ஜ.க குறிவைத்திருக்கிறது. அதாவது இந்திய அரசியலமைப்பு பிரிவு 44 கூறும் பொது சிவில் சட்டம், மதம், பாலினம், சாதி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டுவருவதை … Read more

வலையில் சிக்கிய அரியவகை டால்பின்கள்., மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு!

தமிழக மீனவர்களின் வலையில் சிக்கிய இரண்டு டால்பின்கள் மீண்டும் பத்திரமாக கடலில் விடப்பட்டன. டால்பின்களை பத்திரமாக மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு டால்பின்கள் ராமநாதபுரம் கீழக்கரையில் செவ்வாய்கிழமை அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன்கள் வலையில் சிக்கின. Twitter screengrab @supriyasahuias வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பின்களை, மீனவர்கள் உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் … Read more

தமிழக மருத்துவ கல்லூரிகளில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி! மத்தியஅரசின் கொள்கையால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு வீண்…

சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்த உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இடஒதுக்கீடு கொள்கைகளால், இடங்கள் முழுமையாக ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் பிரச்சினையால் தமிழக மாணாக்கர்களுக்கு கிடைக்க வாய்ப்பு வீணடிக்கப்படுகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில்  அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 7,378 உள்ளன. … Read more

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரிப்பு: வருமான வரித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகளவு வரி வசூலில் தமிழகம் – புதுச்சேரி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வருமான வரி வசூல் இலக்கில் இதுவரை 53% வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் என முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு

புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி … Read more