Royal Enfield: ஷோரூம் தெரியும்; அதென்ன பயிற்சி மையம்? – ராயல் என்ஃபீல்டின் புது முயற்சி!

இளசுகள்தான் புல்லட்டின் ‘தட் புட்’ ஹார்ட் பீட்டுக்குச் சரியான பீட் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு விட்டது ராயல் என்ஃபீல்டு. இதன் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் புகுந்து களம் இறங்கியிருக்கிறது RE. சென்னையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.  பைக் நிறுவனங்களுக்கு ஷோரூம் தெரியும்… சர்வீஸ் சென்டர் தெரியும். அதென்ன பயற்சி மையம்? இது அதையும் தாண்டி! ராயல் என்ஃபீல்டு National Training Centre Opening Ceremony இந்தப் பயிற்சி … Read more

மரண தண்டனை விதிக்கப்படலாம்! கத்தார் உலகக் கோப்பையில் கவர்ச்சி ஆடை அணிந்த இங்கிலாந்து ரசிகைக்கு எச்சரிக்கை

கத்தார் உலகக் கோப்பையை காண வந்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த நடிகை ஆஸ்ட்ரிட் வெட் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்ததற்காக ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். ஆடையால் எழுந்த விமர்சனம் ஆஸ்ட்ரிட் வெட் ஆபாச பட நடிகை ஆவார். இவர் கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்க கத்தாருக்கு வந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று அர்ஜென்டினா -அவுஸ்திரேலியா போட்டியின் போது பிகினி மேலாடை மற்றும் குட்டை பாவாடை அணிந்தபடி மைதானத்தில் இருந்தார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஆஸ்ட்ரிட் … Read more

அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓபிஎஸ்-ன் ‘வலதுகை’ கோவை செல்வராஜ் திமுகவில் சேர முடிவு?

கோவை: ஓபிஎஸ்-ன் வலது கையாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ்மீதான அதிருப்தி காரணமாக, அவரை துரோகி என விமர்சித்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவர் தற்போது திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டு கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளார். இதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனக்குத்தான … Read more

பள்ளியில் மோதல் விவகாரத்தில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்!

நெல்லை: நெல்லை, களக்காடு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது…

இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்வதும், விரும்பி அணியும் அணிகலனாகவும் தங்கம் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் டிஜிட்டல் கோல்டு… ஆன்லைனில் தங்கம் வாங்குவது சரியான முதலீடா? தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்து … Read more

புடினுக்கு பலத்த நெருக்கடி…ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்:செயற்கைக்கோள் புகைப்படம்

ரஷ்யாவின் முக்கிய விமான தளத்தில் உக்ரைனின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் நடத்திய தாக்குதல் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை மேக்ஸர் வெளியிட்டுள்ளது. ரஷ்ய விமான தளத்தில் தாக்குதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனில் தாக்குதல் நடத்தி வந்த ka-52 ரக ஹெலிகாப்டரை உக்ரைனிய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது ஜனாதிபதி புடினுக்கு பலத்த அடியாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ரஷ்யாவின் இரண்டு முக்கிய விமான தளங்கள் மீது உக்ரைனிய படைகள் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி … Read more

தமிழகத்தில் வரும் 9ம் தேதி 15 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வரும் 9ம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. டிசம்பர் 9ம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை

சென்னை: புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர் வெ. இறையன்புவை சந்தித்து பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸாரிடம் ரூ.1,000 அபராதம் வசூல் – அதிரடி காட்டிய புதுச்சேரி டி.ஜி.பி

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக தெரிவித்த போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார், “ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ரூ.1,000 அபராதத்துடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். அதையடுத்து, ”புதுச்சேரி மாநிலம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அதனை மீறி … Read more