புயல் எச்சரிக்கை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு படை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் மான்டஸ் புயல் காரணமாக, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும் 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாண்டஸ் புயலாக வலுபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளத. இதன் காரணமாக 7, 8, 9ந்தேதி வரை மழையும், பலத்த காற்றும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த உள்ளது. … Read more

கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வரை மாற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தர்ணா போராட்டம்

நாமக்கல்: கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வர் பால் கிரேஸ் என்பவரை மாற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டம் ஈடுப்பட்டனர். வணிகவியல் துறை மாணவிகளுக்கு இன்டெர்ன்ஷிப் கையெழுத்து போட முதல்வர் பால் கிரேஸ் மறுப்பது, பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சூதாட்டத்தில் தன்னையே இழந்த பெண் 2 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு| Dinamalar

பிரதாப்கர் :உத்தர பிரதேசத்தில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண், சூதாட்டத்தில் தன்னையே பணயம் வைத்து விளையாடி தோற்று வீட்டு, உரிமையாளருடன் வசிக்கத் துவங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.,யின் நாகர் கோட்வாலி மாவட்டம் பிரதாப்கரில் வாடகை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசிப்பவர் ரேணு. இவரது கணவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேலை செய்கிறார். வீட்டு உரிமையாளருடன் பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடத் துவங்கிய ரேணு, நாளடைவில் பணம் வைத்து விளையாட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் இதற்கு அடிமையாகி விட்டார். கணவன் மாதந்தோறும் … Read more

உடலின் ராஜ உறுப்பு கல்லீரல்! அதை காக்கும் இயற்கை உணவுகள் இவைதான்

நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியமானது தான்.. அதிலும் மிக முக்கியான உறுப்புகள் என்று பார்த்தால் அது கல்லீரல்.! நொதிகளை செயல்படுத்துவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது என நமது உடலில் பல இன்றியமையாத வேலைகளை செய்துவருகிறது கல்லீரல். கல்லீரலை காத்து பாதுகாப்பாக வைத்து கொள்ள சில உணவுகள் இருக்கின்றன. பீட்ரூட் பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் … Read more

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு…

சென்னை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி  இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத அமைப்பினர் நாசவேளைகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதையொட்டி, நாடு … Read more

திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது: மகா திபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப்பலத்தையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மகா திபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே மலையில் ஏற அனுமதி அளிக்கப்படும். நான்கு மாட விதிகளில் வளம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

சத்துணவு முட்டை திட்டம் மீண்டும் துவக்கம் :வாரத்திற்கு1 லட்சம் முட்டைகள் சப்ளை| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சத்துணவு முட்டை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று முதல் … Read more

`வீடுகளில் விரிசல்; நிலத்தடி நீர் பாதிப்பு' – கல் குவாரிக்கு எதிராக திரண்ட 7 கிராம மக்கள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பிரிதி கிராமம், இளையாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கிவருகிறது. இந்த கல் குவாரியானது, 14 ஏக்கர் நிலத்தில் இயங்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த கல் குவாரியை எடப்பாடியைச் சேர்ந்தவர் நடத்திவருவதாக தெரிகிறது. இந்த கல் குவாரியில், கடந்த ஒரு மாத காலமாக அங்குள்ள கற்களை வெடிகள் வைத்தும், கெமிக்கல் பயன்படுத்தியும் எடுத்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பகுதி, ஊர் மக்கள், பா.ஜ.க தெற்கு ஒன்றிய தலைவர் சசி தேவி … Read more

இன்று மகாதீபம்: கொப்பரையைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான நெய், திரி போன்றவை 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்றடைந்தது…

திருவண்ணாமலை: இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி உள்ளிட்டவை 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், தற்போது தீபம் ஏற்றுவதற்கான பொருட்களும் மலை உச்சியை அடைந்துள்ளது. இன்று காலை 3 மணி அளவில் அண்ணாமலையார் ஆலயத்தில் பரணிதீபமும் மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் … Read more