Doctor Vikatan: தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு வாக்கிங் செல்வது சரியா?

Doctor Vikatan: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு வாக்கிங் செய்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீங்களோ இதற்கு முன் ஒரு கேள்வியில், வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்களே… எது சரி? -விகடன் வாசகர், இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ் குறிப்பிட்ட நபரை வெறும் வயிற்றில் வாக்கிங் போகச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துகிறார் என்றால் அதன் … Read more

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது கூட வேண்டும் என்ற விதி உள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் நவ. மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். இந்தாண்டு இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக இது சற்றே தாமதமானது. இந்தாண்டிற்கான குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் … Read more

பண கஷ்டத்தால் கடன் வாங்க சென்ற தையல்காரர்! அடுத்த சில நிமிடங்களில் லொட்டரியில் கிடைத்த கோடி பணம்

கேரளாவில் பண பற்றாக்குறையால் வங்கியில் கடன் வாங்க சென்ற தையல்காரருக்கு லொட்டரியில் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தையல்கடை கேரளாவின் மூர்கட்டுபாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் கனில் குமார். இவர் சிறிய தையல்கடை நடத்தி வந்தார், கனில் மனைவி பிரசன்னாவும் அந்த கடையில் வேலை செய்து வந்தார். கிழிந்த துணிகளை தைக்கும் தங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் வராதா என தம்பதி ஏங்கி வந்தனர். இந்த சூழலில் தான் காருண்யா ப்ள்ஸ் லொட்டரி சீட்டை கனில் வாங்கினார். manoramaonline … Read more

கார், விமான தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகம் உள்ளிட்ட பொருட்களை வழங்குமாறு இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை

மாஸ்கோ: கார், விமான தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்குமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் பொருளாதார தடை விதித்த நிலையில் இந்தியாவிடம் ரஷ்யா உதவி கோருகிறது.

அய்யப்ப பக்தர்களை பின் தொடரும் நாய்| Dinamalar

தார்வாட்: சபரிமலை செல்லும் பக்தர்களுடன், நாய் ஒன்று பின் தொடர்ந்து செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. கர்நாடக மாநிலம் தார்வாட் அருகே உள்ள மங்கலஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சு, 40; ரவி, 42; நாகன கவுடா, 35. மூவரும் நவம்பர் 20ம் தேதி சபரிமலைக்கு இருமுடி கட்டி பாதயாத்திரையாக புறப்பட்டனர். அடுத்த நாள் இரவு தார்வாட் பைபாஸ் சாலையில் மூவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர். அப்போது தெருநாய் ஒன்று அவர்களிடத்தில் வந்தது. அதனால், நாய்க்கும் உணவளித்தனர். பின்னர் … Read more

திருச்சி: `ஒரு லட்சம் கொடுத்துடுங்க; நிலத்தை கிரயம் செஞ்சிடலாம்!’ – சிக்கிய சார்பதிவாளர்

திருச்சி மாவட்டத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மிகவும் பிசியானதும், அதிகளவில் பத்திரப்பதிவு நடக்கும் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மிக முக்கியமான இருக்கிறது திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகம். இங்கு திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அசோக்குமார் என்பவர், பத்திரப் பதிவுக்காகச் சென்றிருக்கிறார். அசோக்குமார் திருவெறும்பூரை அடுத்த பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முடிவு செய்திருக்கிறார். அந்தப் பகுதியில் சந்தை மதிப்பில் ஒருசதுர அடி நிலம் 290 ரூபாய் என்றிருக்க, 21 சென்ட் நிலத்தினுடைய … Read more

உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.41 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.61 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபத்திருநாள் அன்று காலை 06.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தீபத்திருநாள் அன்று காலை 06.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தீபத்திருவிழா அன்று காலை 06.00 மணிக்கு செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., தொழிற்சாலையில் இருந்து 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு| Dinamalar

பதோஹி : உத்தர பிரதேசத்தில் தரைவிரிப்பு தொழிற்சாலை ஒன்றில் குழந்தை தொழி லாளர்களாக இருந்த ஏழு சிறுவர்களை போலீசார் மீட்டனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மிர்சாபூர் மாவட்டத்தில் சுனில் குமார் மவுரியா என்பவருக்கு தரைவிரிப்பு தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது மவுரியா சிலருடன் தப்பியோட முயற்சித்தார். அவர்களை … Read more

`தயவுசெஞ்சு வாழ விடுங்க; தொந்தரவு பண்ணாதீங்க’ – காவல் நிலையத்தில் கலங்கிய ராஜ்கிரணின் மனைவியின் மகள்

திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளாக அறியப்படுபவர் பிரியா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகரான முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு ராஜ்கிரணும், அவரின் மனைவி பத்மஜோதி (எ) கதீஜாவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பிரியா அவரின் கணவர் முனீஸ்ராஜாவுடன் திருச்சி மாவட்டம், பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் தஞ்சம் அடைந்தார். இளங்கோ கதீஜாவின் முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து பிரியா தனது தந்தை இளங்கோ … Read more