கோயில் அர்ச்சகர்களிடம் ஆபாசமாக பேசியதாகப் புகார்… அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு!

சேலம், சொர்ணாம்பிகை தெருவை சேர்ந்தவர் தங்கபிரசன்னகுமார். இவர் சேலம் கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி பணியில் இருந்தபோது, திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு வந்து அம்மன் சந்நிதியில் பூஜையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் தங்கபிரசன்னகுமாரிடம் தகராறில் ஈடுப்பட்டிருக்கிறார். மேலும் அங்கு பணியாற்றக்கூடிய அர்ச்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த நிலையில், கோயில் அர்ச்சகர்கள் அனைவரும் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது சேலம் டவுன் காவல் … Read more

லண்டன் விமான நிலையத்தில் தனது சூட்கேசை தேடி அலையும் ஆவி: ஒரு திகில் செய்தி

லண்டன் விமான நிலையம் ஒன்றில், தனது சூட்கேசைத் தேடி அலையும் ஒரு ஆவியைக் குறித்த திகில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம் 1948ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில், பனிமூட்டம் நிறைந்த ஒரு நாளில், அப்போது லண்டன் விமான நிலையம் என அழைக்கப்பட்ட, இன்றைய ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. அந்த விபத்தில் 19 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். மூன்று பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள். தனது சூட்கேசைத் … Read more

15நாளில் ரூ.8.6 லட்சம் வசூல்: மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை:  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாளில் சாலையில் திரிந்த  சுமார் 430 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன்படி  உரிமையாளர்களுக்குத் தலா ரூ.1,550/- வீதம் ரூ.8.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும் மாடுகளை அவிழ்த்து விடாமல் பாதுகாக்கும்படி மாடுகளின் உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகளையும், தடையற்ற சூழலையும் அமைத்து நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகளையும், தடையற்ற சூழலையும் அமைத்து நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 3ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட சர்ச்சை பேச்சு இஸ்ரேல் சினிமா இயக்குனர் விளக்கம்| Dinamalar

புதுடில்லி, ”தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையோ, பாதிக்கப்பட்டவர்களையோ அவமதிப்பது என் நோக்கம் அல்ல,” என, இஸ்ரேல் திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட் தெரிவித்தார். இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது திரையிடல் நிகழ்வு, கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட், விழா நடுவர் குழுவுக்கு தலைமை … Read more

மூளை சாவு அடைந்த கட்டடத் தொழிலாளி; உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள சீதாராமன்பட்டினம கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சநாதன்(53). இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மீனவரான குஞ்சுநாதன் மீன்பிடி தடை காலங்களிலும், கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத போதிலும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி குஞ்சுநாதன் கட்டட பணிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, கட்டடத்தில் சாரம் கட்டிக் கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.‌  இதனையடுத்து, … Read more

சென்னையில் பரபரப்பு: அரசு பேருந்து மீது கிரேன் மோதி விபத்து…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை அரசு பேருந்து மீது  ராட்சத கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லாததால் ஓட்டுநர் சிறிய காயத்துடன் தப்பினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பெரும்பாலான சாலைகள், மழைநீர் வடிகால் பணி மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் உள்ளன. இந்த நிலையில், சென்னைவடபழனி அருகே மெட்ரோ … Read more

தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பன்னாரி அம்மன் கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வன்முறை பாடல்கள் மத்திய அரசு கிடுக்கி| Dinamalar

புதுடில்லி, வன்முறை, ரவுடியிசம், போதை பழக்கங்களை போற்றும் வகையிலான பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதை தவிர்க்கும்படி, எப்.எம்., ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எப்.எம்., ரேடியோ சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எப்.எம்., ரேடியோ சேனல்களை ஒலிபரப்புவதற்கான உரிமம் அளிக்கப்பட்டபோது கையெழுத்தான ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள விதிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வன்முறை, ரவுடியிசம், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றை புகழும் வகையிலான பாடல்களையோ, … Read more