`குழந்தையோடு தியேட்டருக்கு வர்றீங்களா?' கேரள அரசு அறிமுகப்படுத்திய `Crying room' வசதி!

குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் பெற்றோர்கள்  படத்தை முழுமையாக பார்ப்பது என்பது அரிதுதான். குழந்தைகள் பெரும்பாலும் தியேட்டருக்குள் இருக்கும் இருள், ஒலி, மற்றும் அங்குள்ள லைட்  செட்டப்புகளால் அசௌகரியமடைவதால் அழுகிற சூழலில் பெற்றோர்கள் படத்தை பார்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிடுகிறது.  இதனைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலத்தின் தலைநகரான  திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி- ஸ்ரீ- நிலா தியேட்டர் வளாகத்தில் அம்மாநில அரசு  ‘Crying Room’ என்ற புதிய அறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் அந்த … Read more

போர்ச்சுகல் கோல் மழை! ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறங்கி ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்… தாறுமாறு வெற்றி

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் போர்ச்சுகல் கோல் மழை பொழிந்து சுவிட்சர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தியுள்ளது. அதன்படி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கன்கலோ ராமோஸ் இப்போட்டியில் ரொனால்டோ பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். பின்னர் மாற்று வீரராக (substitute) 20 நிமிடங்கள் களத்தில் கிடைத்தாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அவருக்கு பதிலாக கன்கலோ ராமோஸ் என்ற 21 வயது இளம் வீரர் களமிறங்கினார். போட்டி தொடங்கி விறுவிறுப்பாக … Read more

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9.45மணி நிலவரம்…

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலைமுதல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9-30 மணி அளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, பாஜக 127 இடங்களிலும், ஆம்ஆத்மி 113 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 1  இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 250 வார்டுகளை கொண்ட  டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, … Read more

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.40,128-க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.40,128-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.20 காசுகள் அதிகரித்து ரூ.71-க்கு விற்பனையாகிறது.

பிரபல பல்கலைகள் சார்பில் போலி சான்றிதழ் அதிரடி சோதனையில் 5 பேர் கும்பல் கைது| Dinamalar

மஹாலட்சுமி லே அவுட், : பிரபல பல்கலைக் கழகங்கள் சார்பில், போலி மதிப்பெண் பட்டியல் சான்றிதழ்கள் தயாரித்து, லட்சக் கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கும்பலை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். பெங்களூரு மஹலாட்சுமி லே அவுட்டில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், பிரபல பல்கலைக் கழகங்களில் மதிப்பெண் பட்டியல் சான்றிதழ், பட்டபடிப்பு சான்றிதழ்கள் பெற்று தருவதாக கூறி, போலி சான்றிதழ்கள் வழங்குவதாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு … Read more

மகாதீபம் ஏற்றுவதில் மல்லுகட்டு… `திமுக-வினரை தெய்வம் பார்த்துக்கொள்ளும்' – ஓபிஎஸ் மகன் ஆவேசம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அதிமுக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணைவீடு அருகே உள்ள மலையில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2002 முதல் ஓபிஎஸ் எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்வராக இருந்தபோது அவருடைய குடும்பத்தாரின் முயற்சியால் அவர்களின் சொந்த செலவில் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பக்தர்கள் சென்று வரும் வகையில் கோயிலுக்கு மலையில் சாலை அமைக்கப்பட்டு கோயிலை சுற்றிவர கிரிவலப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு, 2012-இல் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் ஜெயபிரதீப் ​இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும்,  கடந்த 14 ஆண்டுகளாக ஓ.பி.எஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தனர். கார்த்திகை திருவிழாவின் போது மின் விளக்குகள், … Read more

எனக்கு இவ்வளவு பணமா! வெளிநாட்டில் வசிக்கும் தமிழருக்கு கிடைத்த பல கோடிகள்… வரலாற்றில் மிகப்பெரிய பரிசு

வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்த தமிழருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய பரிசு பணம் லொட்டரியில் கிடைத்துள்ளது. பிக் டிக்கெட் டிரா தமிழ்நாட்டை சேர்ந்த காதர் ஹுசைன் என்ற 27 வயதான இளைஞர் சார்ஜாவில் உள்ள கார்களை கழுவி சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். அவருக்கு மாதம் Dh1,500 சம்பளம் கிடைக்கிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிப்ஸ் பணத்தை காதரும், அவரின் நண்பர் தேவராஜும் சேமித்து … Read more

மாண்டஸ் எச்சரிக்கை: சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: மாண்டஸ் [புயல் எச்சரிக்கை எதிரொலியாக,  சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. இந்த புயலால் சூறாவளி காற்றும் வீசும் என்பதால்,  மீனவர்கள் … Read more

போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை: தேனாம்பேட்டை அருகே வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை மாத்திரைகள் வைத்திருந்த ஆட்டோ டிரைவர் வினோத், ஏசி மெக்கானிக் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 90 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட் அணியாத போலீசாரிடம் ரூ.1,000 அபராதம் வசூல்: டி.ஜி.பி., அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: ஹெல்மெட் அணியாத போலீசாரிடம் ரூ.1,000 அபராதம் வசூலிக்க உத்தரவிட்ட டி.ஜி.பி.,யின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. புதுச்சேரியில் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி நவ., 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் போலீசார் ரூ.1,000 அபராதம் வசூலித்து வருகின்றனர். அதேநேரத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் … Read more