உக்ரைனில் போர் நடைபெறும் இடத்துக்குச் செல்ல புடின் திட்டம்: உறுதி செய்தது கிரெம்ளின் வட்டாரம்.

ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனில் போர் நடக்கும் இடத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து அதை கைப்பற்றிவிடலாம் என சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து அந்நாட்டை ஊடுருவியது ரஷ்யா. ஆனால், அது இவ்வளவு நாள் நீடிக்கும், இவ்வளவு பெரிய போராக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு செல்ல புடின் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதை கிரெம்ளின் வட்டாரமும் உறுதிசெய்துள்ளது. கிரெம்ளின் ஊடகச் செயலாளரான … Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் 4 நாட்கள் தடை!

விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையொட்டி, சதுரகிரி மழைப்பாகுதிகளில் பெய்து கனமழை காரணமாக, மலைப்பகுதிகளில் செல்லும்  நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால்,  பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வரும் திங்கள்கிழமை பிரதோஷமும், புதன்கிழமை பௌர்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன. காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, … Read more

நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

வேலூர்: நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அந்தமான் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு| Dinamalar

புதுடில்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச.,05) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிச.8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளது. புயலாக உருமாறும்பட்சத்தில் அதற்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்படும். இதனால் … Read more

“இதுபோன்ற நிகழ்வு வேறு எங்கேனும் நடந்ததுண்டா?" – கொலிஜியம் நடைமுறை குறித்து குடியரசுத் துணைத்தலைவர்

இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றிருக்கும் நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளைத் தேர்வு செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும். இந்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும். கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், சுயேச்சையாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. … Read more

உலகக்கோப்பை கால்பந்தில் புதிய வரலாறு படைத்த 23 வயது பிரான்ஸ் வீரர்!

கத்தார் உலகக்கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது. பெப்பே அதகளம் அல் துமமா மைதானத்தில் நேற்று நடந்த சூப்பர் 16 ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் போலந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பிரான்சின் ஒலிவர் கிரௌட் கோல் அடித்தார். அதற்கு போலந்து பதில் கோல் அடிக்காததால் பிரான்ஸ் முதல் பாதியில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் 74வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் … Read more

ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை:  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் ஜி – 20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் கூட்டம் நடைபெற உள்ளது. ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா, கடந்த 1ம் தேதி ஜி – 20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அடுத்த ஜி20 மாநாடு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில்  நடைபெற உள்ளது.  … Read more

மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக்: வட்டாச்சியர் பணியிட மாற்றம்

மதுரை: மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக் ஆன விவகாரத்தில் வட்டாச்சியர் பணியிட மற்றம் செய்துள்ளனர். கவனக்குறைவாக இருந்ததாக மதுரை தெற்கு வட்டாச்சியர் கல்யாணசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  

ஜெர்மனி வெளியுறவுவு அமைச்சர் புகழாரம்| Dinamalar

புதுடில்லி: பல்வேறு சவால்கள் இருந்தாலும், உலகின் பல நாடுகளுக்கு இந்தியா முன் மாதிரியாக திகழ்கிறது என ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா புகழாரம் சூட்டியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றம் மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து விவாதிக்க ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா இன்று (டிச.,05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள சில தினங்களுக்கு முன் முடிவு செய்தார். இந்நிலையில், இவர் இன்று(டிச.,05) டில்லி வந்தடைந்தார். இதையடுத்து, டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். … Read more

திருச்சி: திருடன் என நினைத்து அடித்துக் கொல்லப்பட்ட இன்ஜினியர்… சிசிடிவியால் சிக்கிய கொலையாளிகள்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அம்பேத்கர் நகரில் திரேந்தர் என்பவருக்குச் சொந்தமான மர அறுவை மில் இருக்கிறது. இந்த மில்லுக்குள் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் புகுந்த இளைஞர் ஒருவர், மில்லின் உரிமையாளரான திரேந்தரின் செல்போனைப் பறிக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, அந்த மில்லில் வேலை பார்த்த நபர்கள் அந்த இளைஞரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மேலும், மரத்தில் கட்டிப் போட்டவாறே இரவு முழுவதும் அந்த இளைஞரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். … Read more