ஜார்கண்ட்: உறவினரால் கொலை செய்யப்பட்ட நபர்; துண்டிக்கப்பட்ட தலையுடன் நண்பர்கள் எடுத்த செல்ஃபி

ஜார்கண்ட் மாநிலம், குந்தியில் வசிப்பவர் தேசாய் முண்டா. இவரின் குடும்பத்தாருக்கும், இவருடைய உறவினர் குடும்பத்தாருக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 1-ம் தேதி தேசாய் முண்டா வயலுக்கு சென்ற சமயத்தில் இவரின் மகன் கனு முண்டா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். வயலில் வேலைகளை முடித்துவிட்டு, தேசாய் முண்டா வீட்டுக்கு வந்தபோது, கனு முண்டா வீட்டில் இல்லை என அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கனு முண்டாவை அவரின் உறவினர் … Read more

கத்தார் உலகக்கோப்பையில் இளைஞரை முரட்டுத்தனமாக எட்டி உதைத்த கால்பந்து ஜாம்பவான்! அதிர்ச்சி வீடியோ

கத்தார் உலகக்கோப்பை மைதானத்திற்கு வெளியே முன்னாள் கால்பந்து ஜாம்பவான் சாமுவேல் எட்டோவோ நபர் ஒருவரை முரட்டுத்தனமாக எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமுவேல் எட்டோவோ Stadium 974 – ரஸ் அபு அபௌட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியை முன்னாள் கேமரூன் ஜாம்பவான் வீரரும், தற்போதைய கேமரூன் கால்பந்து நிர்வாகத்தின் தலைவருமான சாமுவேல் எட்டோவோ கண்டு களித்தார். போட்டி முடிந்ததும் வெளியே … Read more

9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை! தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு…

சென்னை: முறைகேடாக நடந்துகொண்ட 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து சென்னை புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த பிரபு ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக … Read more

தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

சென்னை: தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளதால்  852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளனர். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற புகாரில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனையார்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது

பெங்களூரில் அதிர்ச்சி: இளைஞரை கல்லை போட்டு கொலை செய்த கும்பல்: வீடியோ வைரல்| Dinamalar

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெருவில், இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் கல்லை போட்டு கொலை செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது. கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் வீடு ஒன்றில் அமர்ந்திருக்கும் … Read more

Royal Enfield: ஷோரூம் தெரியும்; அதென்ன பயிற்சி மையம்? – ராயல் என்ஃபீல்டின் புது முயற்சி!

இளசுகள்தான் புல்லட்டின் ‘தட் புட்’ ஹார்ட் பீட்டுக்குச் சரியான பீட் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு விட்டது ராயல் என்ஃபீல்டு. இதன் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் புகுந்து களம் இறங்கியிருக்கிறது RE. சென்னையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.  பைக் நிறுவனங்களுக்கு ஷோரூம் தெரியும்… சர்வீஸ் சென்டர் தெரியும். அதென்ன பயற்சி மையம்? இது அதையும் தாண்டி! ராயல் என்ஃபீல்டு National Training Centre Opening Ceremony இந்தப் பயிற்சி … Read more

மரண தண்டனை விதிக்கப்படலாம்! கத்தார் உலகக் கோப்பையில் கவர்ச்சி ஆடை அணிந்த இங்கிலாந்து ரசிகைக்கு எச்சரிக்கை

கத்தார் உலகக் கோப்பையை காண வந்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த நடிகை ஆஸ்ட்ரிட் வெட் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்ததற்காக ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். ஆடையால் எழுந்த விமர்சனம் ஆஸ்ட்ரிட் வெட் ஆபாச பட நடிகை ஆவார். இவர் கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்க கத்தாருக்கு வந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று அர்ஜென்டினா -அவுஸ்திரேலியா போட்டியின் போது பிகினி மேலாடை மற்றும் குட்டை பாவாடை அணிந்தபடி மைதானத்தில் இருந்தார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஆஸ்ட்ரிட் … Read more

அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓபிஎஸ்-ன் ‘வலதுகை’ கோவை செல்வராஜ் திமுகவில் சேர முடிவு?

கோவை: ஓபிஎஸ்-ன் வலது கையாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ்மீதான அதிருப்தி காரணமாக, அவரை துரோகி என விமர்சித்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவர் தற்போது திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டு கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளார். இதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனக்குத்தான … Read more

பள்ளியில் மோதல் விவகாரத்தில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்!

நெல்லை: நெல்லை, களக்காடு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.