கேமரூன் – செர்பியா அணிகளுக்கு இடையேயான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிரா!

கத்தார்: கத்தாறில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் – செர்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததன் காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஈரோடு: அரசுக் காப்பகத்திலிருந்து மாயமான 6 சிறுமிகள்; தேடிக் கண்டுபிடித்த போலீஸ்! – தொடரும் விசாரணை

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் இதில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்தக் காப்பகத்தில் நேற்று மதியம் கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது … Read more

வீட்டுத் தனிமையில் இருந்த 10 பேர் தீக்கிரையானதை அடுத்து கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய சீனர்கள்… வீடியோ

சீனாவின் ஸின்ஜியங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி நகரில் நவம்பர் 24 ம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். இந்த தீ விபத்தை தொடர்ந்து சீனா முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் இன்றளவும் தொடர்ந்து வரும் நிலையில் சீன கம்யூனிஸ்ட் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் என்ற பெயரில் குறிவைத்து தனிமைப் படுத்தி அவர்களை துன்புறுத்தலில் ஈடுபடுவதாக சீன அரசு மீதி … Read more

குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் குளத்தில் மூழ்கி முகேஷ், விஜி மற்றும் உதயகுமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சத்து மாத்திரை: மாணவர்கள் அட்மிட்| Dinamalar

குவஹாத்தி : அசாமில் சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால், 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சரைடியா மாவட்டத்தில் இரண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பாக இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘மாணவர்களுக்கு … Read more

ஆவடி: திருடிய வீட்டின் உரிமையாளரிடமே லிஃப்ட் – சிக்கிய வடமாநில நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி அருகில் வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் காலையிலேயே தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து, இவர் மனைவி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதையெல்லாம் வடமாநில நபர் ஒருவர் அந்தப் பகுதியில் நின்றுகொண்டு நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அந்த நபர், ஜெகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கே பீரோவை உடைத்து உள்ளே இருந்த ஏழு சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு வெளியே வந்துள்ளார். … Read more

சுவிஸ் பத்திரிக்கை நிருபரை சுற்றிவளைத்த சீன பொலிஸ்! நேரலையில் நடந்த சம்பவம்

சீனாவில் நேரலையில் இருந்த செய்தியாளரை பொலிஸார் கைது செய்ய வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடுமையான கோவிட் கொள்கைக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து செய்தியளிக்கும் பத்திரிக்கையாளர்களை சீன பொலிஸார் கைது செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் நிருபர் அந்த வகையில், சுவிட்சர்லாந்தின் தேசிய ஒளிபரப்பாளரான RTS-ன் நிருபர், சீனாவின் கடுமையான கோவிட் கொள்கைக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து சீனாவில் இருந்து நேரலையில் தெரிவிக்கும் போது காவல்துறையினரால் அணுகப்பட்டார். Thomas Peter/Reuters மைக்கேல் பியூக்கர் (Michael … Read more

4800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரம்பலூர் முதல் தொழிற்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .!

பெரம்பலூர்:  4800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரம்பலூர்  மாவட்டத்தின் முதல் தொழிற்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று காலை,   திருச்சி அருகே  காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் … Read more

அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்குக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரியலூர்: அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்குக்கு ரூ.10 லட்சம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

நள்ளிரவில் அப்தாப் வீட்டிற்கு வந்த பெண் டாக்டர்! ஷ்ரத்தா உடல் வீட்டில் இருக்கும் போதே நடந்த பகீர் சம்பவம் …!

புதுடெல்லி ஷ்ரத்தா வால்கரின் உடலை துண்டிக்க அப்தாப் பூனாவாலா பயன்படுத்திய ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கடந்த வாரம், 5-6 அங்குல நீளமுள்ள ஐந்து கத்திகளையும் போலீசார் மீட்டனர்.இந்த கத்திகள் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஷ்ரத்தா வாக்கரின் மண்டை ஓடு மற்றும் சில உடல் பாகங்களை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தபோது டாக்டர் பெண்ணுடன் பழகியதாகக் கூறப்படுகிறது. தனது காதலி ஷ்ரத்தா … Read more