எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு: “திருச்சி சிறப்பு முகாமில் நால்வர் உண்ணாவிரதமா?" – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் வேலூர், சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 12-ம் தேதி இரவு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் … Read more

கடலூரில் மழைபாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர் பயனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கினார்…

சென்னை: கடலூரில் மழைபாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர் பயனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கினார். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை பெய்த மழையே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இதுவரைஇல்லாத அளவுக்கு 44 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால், அந்த பகுதி தீவுபோல காட்சி அளிக்கிறது. மேலும் கடலூர் மாவட்டத்திலும் பெரும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து … Read more

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரமாக கனமழை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

‛‛அந்த விஷயத்தில் சீனாவை முந்தும் இந்தியா| Dinamalar

புதுடில்லி: உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் எனவும், 2027ல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் என கணித்திருந்தது. நாளை (நவ.,15) … Read more

எது ஆண்மை? ~ OPEN-ஆ பேசலாமா – 3

ஆண்மை – பெண்மை என பாலினப் பண்புகள் அடிப்படையிலான சமூகத்தின் வரையறைகள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. ஆண்மையின் அழகு வீரம், பெண்மையின் அழகு மென்மை என்பது மாதிரியான கருத்தாக்கங்கள் நமது சமூகத்தில் நிலைத்திருக்கின்றன. உலகமெங்கும் பல சமூகங்களிடையே இக்கருத்தாக்கம் வெவ்வேறான அளவுகோல்களில் இருக்கின்றன. பெண்மைக்கென வகுக்கப்பட்டிருக்கும் அம்சங்களை பெண்ணியம் (feminism) உடைத்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆண்மையின் அளவுகோல் என நம் சமூகத்தில் வீரமும், காமமும்தான் முன்னிறுத்தப்படுகின்றன. பாலுறவு சார்ந்த குறைபாடுகளைக்கூட ஆண்மையோடு பொருத்திக் கொள்கிற மனப்பாங்கு இங்கே … Read more

நாட்டின் மொத்த பணவீக்கம் 8.39ஆக குறைவு: நிதி அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டின் மொத்த பணவீக்கம் 8.39ஆக குறைந்துள்ளது என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் பணவீக்கம் 10.79%ஆக இருந்த நிலையில் அக்டோபரில் பணவீக்கம் 8.39ஆக குறைந்துள்ளது. 2021 மார்ச் முதல் 10க்கும் மேலாக பணவீக்கம் இருந்த நிலையில் மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது.

விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வாழ்க்கை ஸ்பீல்பெர்க்கின் 'The terminal' படத்தின் நிஜ ஹீரோ மரணம்!

பாரிஸ் நகரின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நஸ்செரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வினை இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் `தி டெர்மினல்’ (The terminal)  என்ற படமாக்கியுள்ளார்.  மெஹ்ரான் கரிமி நஸ்செரி மெஹ்ரான் கரிமி நஸ்செரி, 1945 ஆம் ஆண்டில்,  ஈரான் நாட்டிலுள்ள சோலேய்மான் என்ற இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த காலகட்டத்தில் ஈரான், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் செயல்பட்டு … Read more

மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல், டிரம்ஸ் வாசித்து அசத்தல் – வீடியோ

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு இசைத்துக்கொண்டிருந்த  இசை கலைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி டிரம்ஸ் வாசித்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில்  ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி கலம்நூரியில்  என்ற பகுதியில் நடைபெற்ற  கலாச்சார நிகழ்ச்சியில் இசை கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைக்கண்ட பொருமக்கள் ராகுல்காந்தி வாழ்க என … Read more

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்பு

கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடி தடுப்பணையில் மீன்பிடித்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இளைஞர் கரண்ராஜை 3 நாட்களாக தீயணைப்புத்துறையினர் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.