“ஷ்ரத்தாவை வெட்டியது போல உன்னையும் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்" – லிவ்-இன் பார்ட்னருக்கு மிரட்டல்

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் கடந்த மே மாதம் டெல்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக காதலனால் வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மக்கள் மீளாமல் இருக்கின்றனர். இந்தநிலையில், டெல்லியில் மற்றொரு பெண் சமீபத்தில் தன் மகனுடன் சேர்ந்து தன்னுடைய கணவனை கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுக்க விட்டெறிந்தார். தற்போது இந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி அது போன்று செய்துவிடுவேன் என்று தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த … Read more

மன்னரை சந்திக்க விரையும் இளவரசர் வில்லியம்: மீண்டும் ஹரி மேகனால் ராஜ குடும்பத்தில் பரபரப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் வெளியிட இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர், ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மேகனால் தொடரும் சர்ச்சை இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்துக்கு சற்றும் தொடர்பில்லாத நடிகையும் விவாகரத்தானவருமான மேகனை திருமணம் செய்த நாளிலிருந்தே ராஜ குடும்பம் பல அவமானங்களை சந்தித்து வருகிறது. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு ஹரி, மேகன் தம்பதியர் கொடுத்த பேட்டியால் ராஜ குடும்பத்தில் உண்டான கொந்தளிப்பு அடங்கும் முன், மகாராணியார் மறைந்த துயரம் ஆறும் முன், … Read more

திருச்சியில் 11 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி, புதுக்கோட்டையில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சியில் 11 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர். புத்தூர் அருகே மது விடுதி அமைப்பதை எதிர்த்து போராடிய 9 பாஜக நிர்வாகிகள் கைது செய்து கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பிராமணர்களுக்கு எதிரான வாசகம்| Dinamalar

புதுடில்லி,புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் உள்ள சர்வதேச படிப்புகளுக்கான கல்வி மையத்தின் சுவர்களில், பிராமணர்கள் மற்றும் பனியா சமூகத்தினருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் சிலரது அறைகளும் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, உலகப்புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், சர்வதேச படிப்புகளுக்கான கல்வி மையம் பிரத்யேகமாக செயல்படுகிறது. இந்த மையத்தின் கட்டடம் அமைந்துள்ள வளாக சுற்றுச்சுவரில், பிராமணர்கள் மற்றும் … Read more

அறநிலையத்துறையை சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி… எதிர்க்கும் திமுக – பின்னணி என்ன?!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி, தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நீண்டகால கட்டுப்பாட்டின் காரணமாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களின் அவலநிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சுப்பிரமணியன் சுவாமி கடிதம் இது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு … Read more

‘யூ டியூபர்’ மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! மாரிதாஸ் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பிரபல  ‘யூ டியூபர்’ மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசின் மனுவுக்கு  மாரிதாஸ் பதில் அளிக்க  உத்தரவிட்டு உள்ளது. திமுக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் பிரபல பத்திரிகையாளரும், யூடிபருமான மாரிதொடர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அவர்மீது தமிழகஅரசு பல்வேறு வழக்குகள் போட்டு அவரை முடக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே மறைந்த … Read more

மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது: நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்கால்: மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். டிசம்பர் மாதத்துக்கு 27,140 மெட்ரி டன் யூரியா தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ரயில் மூலமாகவும் சாலை மார்க்கமாவும் யூரியா உரம் அனுப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மூசேவாலா படுகொலை அமெரிக்காவில் ஒருவர் கைது| Dinamalar

புதுடில்லி, பஞ்சாபி பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூசேவாலா படுகொலையின் முக்கிய குற்றவாளியான கோல்டி பிரார், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த காங்., பிரமுகரும், பிரபல பாப் பாடகருமான சித்து மூசேவாலா, 28, பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் மே 29ல் படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்து கொண்டிருந்தவரை, அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதில், … Read more

DSP Review: அதே டெய்லர், அதே வாடகை; தமிழ் சினிமாவின் மற்றுமொரு டெம்ப்ளேட் காக்கிச்சட்டை சினிமா!

சாதா இளைஞன் ஊருக்குள் கெத்தாய் சுற்றும் தாதாவோடு உரசினால் என்னாகும்? கொலவெறி தாதாவை டி.எஸ்.பி-யாகி பழி தீர்க்கும் அதே அரதப்பழசான போலீஸே இந்த DSP! விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் இந்த டி.எஸ்.பி வசீகரித்தானா… வதைத்தானா? திண்டுக்கல்லில் அமைதியே உருவாக வாழும் பூக்கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் இளவரசுவின் மகன் விஜய் சேதுபதி. நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டும் சரக்கடித்துக் கொண்டும் ஜாலியாய் திரிகிறார். விஜய் சேதுபதிக்கு அரசாங்க வேலை வாங்கித்தர ஆசைப்படுகிறார் இளவரசு. ஒரு … Read more

எனக்கு நீங்கள் வேண்டும்! நீங்கள் இல்லாமல்… காதலரிடம் உருகிய இளவரசி டயானா சொன்ன வார்த்தைகள்

இளவரசி டயானா, ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் 5 வருடம் காதலில் இருந்த நிலையில் அது குறித்து இருவருமே பொதுவெளியில் பேசியது தெரியவந்துள்ளது. இளவரசரி டயானா – ஜேம்ஸ் ஹெவிட் சார்லஸுக்கும், டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1996ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதனிடையில் ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் டயானாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. சார்லஸுடன் வாழும் போதே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதன்படி 1986ல் இருந்து 1991 வரையில் இருவரும் … Read more