கொரோனா வைரஸை உருவாக்கியதே சீனாவும் அமெரிக்காவும் தான்: வுஹான் ஆராய்ச்சியாளர் பகீர் தகவல்

 இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகத்தையே உறையச் செய்த கொரோனா வைரஸ் என்னும் கிருமி சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்னும் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது என்று இந்த ஆய்வகத்தில் பணிபுரிந்த முக்கிய ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவின் கொடூர முகம்  கொரோனா பெருந்தொற்றின் போது மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கிய வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்னும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ ஹப் என்பவர் … Read more

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

குஜராத்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5 மணிக்கு முன்னதாகவே வாக்குச்சாவடி வளாகத்துக்குள்  வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டல காலத்தில் நேற்று அதிகபட்ச கூட்டம் இன்று பாதுகாப்பு அதிகரிப்பு| Dinamalar

சபரிமலை: சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கிய பின்னர் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. டிச., 6ம் தேதியான இன்று சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டலகாலம் தொடங்கிய நவ., 17 தவிர்த்து எல்லா நாட்களிலும் தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சனி, ஞாயிறு நாட்களில் கூட்டம் குறைவாகவும், இதர நாட்களில் கூட்டம் அதிகமாகவும் உள்ளது. நவ., 28 அதிக பட்சமாக 87 ஆயிரத்து 492 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அதை முறியடிக்கும் வகையில் நேற்று … Read more

“தமிழகத்தில், ஆளுநர் ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார்!" – முத்தரசன் தாக்கு

கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வத்திராயிருப்பு வந்திருந்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதுகுறித்து விளக்கம் தேவை என்ற பெயரால் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம்தாழ்த்திக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. அதேப்போல பிரதமர், குடியரசுத் தலைவர் ஓர் இடத்திற்கு செல்கிறார்கள்‌ என்றால் … Read more

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சியை மறக்காமல் செய்து வாங்க போதும்

பொதுவாக பல பெண்கள் இடுப்பு பகுதியில் இருக்கும் அதிகமான கொழுப்பை குறைக்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது. எனவே முடிந்தவரை இதனை குறைப்பதே நல்லது. அந்தவகையில் தற்போது இதனை எப்படி குறைக்கலாம் என்பதை பார்ப்போம்.    பயிற்சி தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் … Read more

மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான ஷாரீக் வனப்பகுதியில் சர்வைவல் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்

மங்களூர்: மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷாரீக் வனப்பகுதியில் சர்வைவல் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடகுவில் விடுதியில் மே மாதத்தில் 3 நாட்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. ஷாரிக் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

திருவண்ணாமலை மகாதீபம் 2022 Live Updates

தீபக் கொப்பரை இன்று மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபவிழாவின் முக்கிய நிகழ்வான ‘மகா தீபம்’ நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமிருக்கும் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதற்கான மகா தீப கொப்பரை இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் முழங்க மலை உச்சிக்குத் தூக்கிச்செல்லப்பட்டது. இதோ அந்தக் காட்சிகள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இந்தப் பரந்த உலகத்தை ஓர் ஆலயமாகக் கருதினால் திருவண்ணாமலை … Read more

மனைவி, பிள்ளைகளுக்கும் வேலை! கனடாவின் அதிரடி நடவடிக்கை

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, திறந்த பணி அனுமதி (Open Work Permit) பெற்றவர்களின் உறவினர்களை வேலையில் அமர்த்த கனடா அனுமதிக்கவுள்ளது. கனடா, ஒரு முக்கிய நடவடிக்கையாக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை அனுமதி தகுதி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தது. இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் இந்த நடவடிக்கை மற்ற வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து கனடாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு … Read more

சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை இறந்தது தொடர்பாக 2 மருத்துவர்களிடம் விசாரணை நிறைவு

சென்னை: சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை இறந்தது தொடர்பாக 2 மருத்துவர்களிடம் விசாரணை நிறைவுபெற்றது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மருத்துவர்களிடம் மாணவி உயிரிழப்பு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகள் வீடியோவில் பதிவிடப்பட்டன.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று ஒரே நாளில் 58,480 பக்தர்கள் சாமி தரிசனம்…!

சபரிமலை, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் வருகிறார்கள். நவம்பர் 16-ந் தேதி நடை திறந்த முதல் இன்று வரை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இருப்பினும் கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், … Read more