புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை

சென்னை: புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர் வெ. இறையன்புவை சந்தித்து பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸாரிடம் ரூ.1,000 அபராதம் வசூல் – அதிரடி காட்டிய புதுச்சேரி டி.ஜி.பி

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக தெரிவித்த போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார், “ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ரூ.1,000 அபராதத்துடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். அதையடுத்து, ”புதுச்சேரி மாநிலம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அதனை மீறி … Read more

சுவிட்சர்லாந்திலேயே விலைவாசி அதிகம் உள்ள நகரங்கள் எவை? ஏன்?

சுவிட்சர்லாந்தின் இரண்டு பெரிய நகரங்கள், ஐரோப்பாவின், சில நேரங்களில் உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் அடிக்கடி இடம்பிடிக்கின்றன. அவை, சூரிச்சும் ஜெனீவாவும்… சூரிச் நகரமும் ஜெனீவா நகரமும் உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பிடிப்பது ஏன்? பொருளாதாரவியல் நிபுணரான Daniel Dreier என்பவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், சூரிச் நகரமும் ஜெனீவா நகரமும் உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பிடிப்பதன் பின்னணியில் பல … Read more

தமிழ்நாடு அரசு பண்பாட்டு துறை சார்பில் ஓவிய-சிற்பக் கலைகாட்சிக்கு சிற்பங்களை அனுப்ப அழைப்பு…

சென்னை: தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் ஓவியம் மற்றும் சிற்பங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கலை பண்பாட்டுத்துறை நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கலைஞர்களை ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் 2022-23ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, … Read more

சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாது: அமைச்சர் கீதாஜீவன்

சென்னை: சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் குறித்து புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளது என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது . அது மட்டுமல்லாமல் காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மூஸ்வாலா படுகொலை: “என்னை கைது செய்யவில்லை” – அமெரிக்காவில் கைதானதாக கூறப்படும் கோல்டி பிரர் பேட்டி?

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி பட்டப்பகலில் பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னொய் மற்றும் கனடாவில் பதுங்கி இருக்கும் கோல்டி பிரர் (Goldy Brar) ஆகியோர் பொறுப்பு ஏற்றனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாரன்ஸை பஞ்சாப் போலீஸார் தங்களின் காவலில் எடுத்திருக்கின்றனர். கனடாவில் பதுங்கி இருந்த கோல்டி பிரருக்கு நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்க சென்றதாகவும் அங்கு கலிபோர்னியாவில் அவன் கைது செய்யப்பட்டதாகவும் … Read more

பிரித்தானியாவுக்கு புலம்பெயர சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் கடத்தல்காரர்கள்: தண்டிக்க தயாராகும் சட்டம்

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வது தொடர்பாக கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்துவருகிறார்கள். அத்தகையோரை தண்டிக்க, பிரித்தானியாவில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் சட்ட விரோதமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பாக, கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். ’வெற்றி’ என்பது போல கைகளை உயர்த்திக் காட்டியபடி, படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரைக் காட்டும் வீடியோக்களும், பிரித்தானியாவுக்குள் எளிதாக நுழைவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் புகைப்படங்களும், டிக் டாக் … Read more

சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வாதம்..

டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாக காண அழைப்பு விடுத்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வாதங்களை தமிழகஅரசு முன் வைத்துள்ளது. தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும்  முயற்சித்து வருகிறது. ஏற்கனவே பீட்டாவின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்ட நிலையில், … Read more

டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளனர். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 8-ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.