டிசம்பர் 1: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 194-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 194-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிச-01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாணவியரை வெளுத்த ஆசிரியை மீது வழக்கு| Dinamalar

ஹைதராபாத் தெலுங்கானாவில், மாணவியரை ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளிய ஆசிரியை மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தின் மட்னுார் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவி, மொபைல் போனில் ஆசிரியையை படம் எடுத்தார். பின் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில், ‘போரிங் கிளாஸ்’ என தலைப்பிட்டு வெளியிட்டார். இந்த தகவல், ஆசிரியைக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அந்த மாணவியுடன் அவருடைய வகுப்புத் … Read more

பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,639,830 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,639,830 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 647,781,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 625,853,091 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,592 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் போலி அதிகாரி தெலுங்கானா அமைச்சருக்கு சம்மன்| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் போலி சி.பி.ஐ., அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெலுங்கானா அமைச்சர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. புதுடில்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு கடந்த 22ம் தேதி வந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவர், தான் சி.பி.ஐ.,யில் பணியாற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்தி அறை எடுத்து தங்கினார். அங்கிருந்து சிலரிடம் போனில் பேசிய ராவ், சி.பி.ஐ.,யில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமுகமாக முடித்து தருவதாகவும், … Read more

ராயல் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் இளவரசர் வில்லியமின் ஞானமாதா: இனவெறி கருத்துக்கு மன்னிப்பு

இளவரசர் வில்லியமின் ஞானமாதா லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறி சர்ச்சைகளில் சிக்கி கொண்டதை தொடர்ந்து தனது அரச கடமைகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அரச சேவையில் இருந்து ராஜினாமா மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளராக இருந்த 83 வயதான லேடி சூசன் ஹஸ்ஸி, லண்டனைச் சேர்ந்த சிஸ்டா ஸ்பேஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்கோசி ஃபுலானியிடம் இனவெறியுடன் பல கேள்விகளை கேட்டு சர்ச்சை வெளியானதை தொடர்ந்து தனது மன்னிப்பை சூசன் ஹஸ்ஸி கோரியுள்ளார். அத்துடன் புதன்கிழமையன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் … Read more

தெலுங்கு தேசம் மாஜி எம்.எல்.ஏ.,வின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்| Dinamalar

புதுடில்லி :காலாவதியான வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற வழக்கில், தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.,வின் 22 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுகுறித்து, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், ‘பி.எஸ்., 4’ இன்ஜின்களுடன், 2017க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்க, உச்ச நீதிமன்றம் 2017ல் தடை விதித்தது. இந்த வகை வாகனங்கள் காலாவதியானவை எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆந்திராவின் தாதிபத்ரி தொகுதியில், தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வாக இருந்த பிரபாகர் ரெட்டி, … Read more

ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் ஹோண்டா கார்ஸ் ஒப்பந்தம்| Dinamalar

புதுடில்லி ‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம், வாடிக்கையாளர்கள் அதன் கார்களை, எளிமையான கார் நிதி திட்டங்கள் வாயிலாக வாங்குவதற்கு, ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிக கடன் வழங்குவதுடன், கடனை திருப்பி செலுத்த, அதிகபட்ச கால அளவை வழங்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி ‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம், வாடிக்கையாளர்கள் … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: சவூதி அரேபியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது மெக்சிகோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு சி-யில் உள்ள சவூதி அரேபியா – மெக்சிகோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சவூதி அரேபியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.