ரேஷன் கடைகள் மகளிர் சுய உதவி குழுவுக்கு… கைமாறுது?| Dinamalar

நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளை, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றவும் புதிய திட்டம் தயாராகி வருகிறது. நாடு முழுதும் தற்போது ஐந்து லட்சத்து ௩௬ ஆயிரத்து ௩௮ நியாய விலை கடைகள் உள்ளன. இதில், இரண்டு லட்சத்து ௭௮ ஆயிரத்து ௩௫௩ கடைகள் தனியார் ‘டீலர்’களால் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் அல்லது சிவில் சப்ளைஸ் வாரியங்கள் … Read more

“என் அம்மாக்கிட்ட பேசாதீங்க, எனக்குப் பிடிக்கலை..!" – தாயின் ரகசிய நண்பரை சரமாரியாக தாக்கிய சிறுவன்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ், வயது 45. இவர் ஆரணி காந்தி நகரிலிருக்கும் சவுண்டு சர்வீசஸ் கடையில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அருள்தாஸுக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவிக்கும் இடையே திருமணம் மீறிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 35 வயதான அந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், தயக்கமின்றி ஆண் நண்பரை தனது வீட்டிற்கே அடிக்கடி வரவழைத்து நெருக்கமாக இருந்திருக்கிறார் … Read more

ரோகித், கோலி அவுட்! ஒரே ஓவரில் அதிர்ச்சி கொடுத்த வங்கதேச வீரர்

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித், கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். பவுண்டரிகளை விளாசிய ரோகித் இந்தியா-வங்கதேச அணிகள் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. வங்கதேச அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தவான் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். @ICC அதிர்ச்சி கொடுத்த ஷகிப் அவரைத் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய ரோகித் சர்மா (27) விக்கெட்டை ஷகிப் … Read more

தமிழ்நாட்டில் 7,8 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 7,8 தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் வரும் 7ம் தேதி கனமழைக்கும், 8ம் தேதி மிகக் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த … Read more

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸி பறிமுதல்

திருச்சி: மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸி திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.  மலேசியா செல்ல இருந்த பயணிடம் இருந்து வெளிநாட்டு கரன்ஸியை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வந்தே பாரத் ரயில் பாதையில் ரூ.264 கோடி செலவில் வேலி| Dinamalar

மும்பை, :“மும்பை – காந்தி நகர் இடையே இயங்கும் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் பாதையில் 264 கோடி ரூபாய் செலவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்,” என, மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறினார். மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்தி நகருக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, கடந்த செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையை ஒட்டி ஆங்காங்கே … Read more

பிக் பாஸ் 6 நாள் 55: `அசிமும் தனமும் ஒண்ணு. அறியாதவங்க வாயில மண்ணு' – வெளுத்து வாங்கிய கமல்!

கமல் வரும் வார இறுதிக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சில நாட்களில் மொக்கையாக இருந்தாலும் பல நாட்களில் அருமையாக அமைந்து விடும். அந்த வகையில், இந்த எபிசோட் one of the best எனலாம். ஓர் உபதேசத்தை – அதை உபதேசத் தொனியில் அல்லாமல் – எதிராளிக்கு உறுத்தாத வகையில் அதே சமயத்தில் அழுத்தமாக கடத்தும் வகையில் நிகழ்த்துவது சிரமமானது. மிகுந்த நுண்ணுணர்வும் நாகரிகமும் நிதானமும் அதற்குத் தேவை. இந்த விஷயத்தை கமல் … Read more

எலிகளை கொல்ல செய்யும் வேலைக்கு டிகிரி முடித்தவர்கள் தேவை

நியூயார்க்: அமெரிக்காவில் வெளிவந்துள்ள புதுமையான வேலைவாய்ப்பு விளம்பரம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக எலி தொல்லை அதிகமாகி வருகிறது என்றும் அதனால் எலியை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எலிகளை கொன்று அவற்றை அப்புறப்படுத்த வேலைக்கு ஆட்கள் தேவை என அமெரிக்காவில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எலிகளை கொல்வதற்காகவே தனி வேலைவாய்ப்பை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர நிர்வாகம் … Read more

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு  செய்துள்ளது. மிர்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன்தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மாணவியருக்கு பாலியல் தொல்லை பேராசிரியர்கள் இருவர் கைது| Dinamalar

ஸ்ரீநகர்,:ஜம்மு – காஷ்மீர் மற்றும் தெலுங்கானாவில் மாணவியர் அளித்த பாலியல் புகாரின்படி பல்கலை பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலை மாணவி ஒருவர், ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொமாய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, பல்கலை வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். உடனே … Read more