பால் கொள்முதல் விலை ரூ.2 உயர்வு| Dinamalar

சாம்ராஜ் நகர், சாம்ராஜ் நகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 1 லிட்டர் பால் கொள்முதல் விலை 28.85 ரூபாயாக உள்ளது. இது, 30.85 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் கால்நடைகள், தோல் நோயால் பாதிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் சாதாரண பால் லிட்டருக்கு ௩௯ ரூபாயும், ஸ்பெஷல் பால் லிட்டருக்கு ௪௫ ரூபாயும் … Read more

முதன்முறையாக வாக்களிப்பு! – இந்தியாவின் `மினி ஆப்ரிக்கா'வும்… குஜராத் தேர்தலும்… யார் இவர்கள்?

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிற நிலையில், முதல்கட்ட தேர்தல் நேற்று (1-12-22) காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு நிறைவுப்பெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (1-12-22) நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் குஜராத்தின் ‘மினி ஆப்ரிக்க’ கிராமமான ஜாம்பூரில் முதன்முறையாக நேற்று பழங்குடி மக்களுக்காக வாக்கு சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,641,934 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,641,934 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 648,371,704 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 626,141,153 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,771 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தப்ப முயன்றவர் பலி 3 போலீசார் மீது வழக்கு| Dinamalar

சாம்ராஜ் நகர், போலீஸ் ஜீப்பில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக, மூன்று போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாம்ராஜ் நகர் எலந்துார் அருகே உள்ள குந்துார் மோளா கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கராஜு, 24. இவர் மீது சிறுமி கடத்தல் தொடர்பாக, மாம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார், கடந்த மாதம் 29ம் தேதி நிங்கராஜை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவர் ஓடும் ஜீப்பில் இருந்து குதித்து தப்ப … Read more

ஆரியங்காவு ஐயப்பன் கோயில்

அருள்மிகு ஐயப்பன் கோயில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள  ஆரியங்காவு என்ற இடத்ஹ்டில் அமைந்துள்ளது. சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார். மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூசாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, … Read more

டிச-02: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரவுடி நாகாவை தெரியாது சோமண்ணா விளக்கம்| Dinamalar

பெங்களூரு பிரபல ரவுடியான வில்சன் கார்டன் நாகா, நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சோமண்ணாவை சந்தித்தாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, அமைச்சர் சோமண்ணா கூறியதாவது: வில்சன் கார்டன் நாகா யார் என்றே தெரியாது. அவரை இதுவரை சந்தித்ததில்லை. தினமும் ஏராளமான மக்கள் என்னைப் பார்க்க வருகின்றனர். நாகா யார்; திம்மா யார்; பொம்மா யார் என்று தெரியவில்லை. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். சட்டத்துக்கு புறம்பான விஷயங்களைச் செய்ததில்லை. நான் 55 ஆண்டுகளாக அரசியலில் … Read more

உலக கோப்பையில் ஜப்பான் வெற்றி முன்பே தீர்மானிக்கப்பட்டது: ஜேர்மனிக்கு எதிரான சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னிலை பெற்ற ஸ்பெயின் கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் அணிக்கு இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியமாக கருதப்பட்ட நிலையில், ஸ்பெயின் ஜப்பான் ஆகிய இரு அணிகளுக்கு … Read more

கோகர்ணாவில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு| Dinamalar

உத்தரகன்னடா, :வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோகர்ணாவுக்கு, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணியர் குவிகின்றனர். உத்தரகன்னடாவின் கோகர்ணா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். கோவாவை விட, கோகர்ணா வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அதிகமாக ஈர்க்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். கொரோனா தொற்று பரவியதால், இரண்டு ஆண்டுகளாக கோகர்ணாவில், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாத்துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது தடை … Read more