ஐரோப்பாவின் செயலால் கடுப்பான ரஷ்யா: அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம்

உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பா முயற்சிக்கும் என்ற கருத்துக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன் போருக்கு பொறுப்பான ரஷ்ய ராணுவம் மற்றும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மீது வழக்கு தொடர சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறும் … Read more

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசுக்கு கேள்வி| Dinamalar

புதுடில்லி, ‘ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால்தான் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகிறதா, இது பாரம்பரியமான போட்டி என்பதற்கு ஆதாரம் உள்ளதா’ என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம், ௨௦௧௪ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் மிகப் பெரும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக தமிழக சட்டசபையில், ௨௦௧௭ல் அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும், ‘பீட்டா’ எனப்படும் … Read more

சிறார் ஆபாச வீடியோக்கள்; வெளிநாடுகளுக்கு விற்று சொகுசு வாழ்க்கை! – திருச்சி வியாபாரியை வளைத்த சிபிஐ

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (44). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்த ராஜா, சொந்த ஊர் திரும்பிய பிறகு திருப்பூரில் துணிகளை வாங்கி பிசினஸ் செய்து வந்திருக்கிறார். இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன்மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. … Read more

சுவிட்சர்லாந்து தெருவில் கிடந்த 20,000 டாலர்கள்: தவறவிட்ட நபருக்கு காத்திருந்த மகிழ்ச்சியான அதிர்ச்சி

சுவிட்சர்லாந்து நகர தெருக்களில் 20,000 டாலர்கள் தவறவிட்ட வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு வியப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பணத்தை தவறவிட்ட மாற்றுத்திறனாளி சுவிட்சர்லாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், நாட்டின் தெற்கு பகுதியில் சிறிய நகரமான மார்ட்டிக்னியில் உள்ள வங்கிக்கு சென்று 20,000 சுவிஸ் பிராங்குகளை ($21,260) திரும்ப பெற்றுளார். அப்போது அந்த நபர் வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறிய போது பணத்தை வைத்து இருந்த உரையை … Read more

ஊரைவிட்டு வெளியேறும் போராட்டம் நடத்திய மீனவர்களுடன் சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

திருவள்ளூர்: பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் மீனவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தை நடத்தினர். கூனங்குப்பம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் 12 கிராம மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். நேற்று மீன் பிடி பிரச்சனையால் கூனங்குப்பம் மீனவர்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டம் நடத்தினர்.

ரூ.6.50 கோடி அபராதம் 11 மாதங்களில் வசூல்| Dinamalar

ஹூப்பள்ளி, ஹூப்பள்ளி நகரில், போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து வருகிறது. 11 மாதங்களில் 6.5 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். ஹூப்பள்ளி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியதாவது: சாலை போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 6.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாதது தொடர்பாக மட்டுமே, 37 ஆயிரத்து 846 வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுபானம் குடித்து வாகனம் ஓட்டியது, அதிவேகம், ஒரே பைக்கில் மூவர் பயணித்தது, … Read more

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் யாகசாலை அமைக்க எதிர்ப்பு: அகற்ற முயன்ற தி.வி.க-வினர் கைது!

ஈரோடு மாநகராட்சி வளாகத்திலுள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. கோயிலுக்குள் வரும் கூட்டத்தை சமாளிக்க போதுமான இடவசதி இல்லாததால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு முன்புறமுள்ள இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமையில் அக்கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடப்பாரை, மண்வெட்டி, கம்பி போன்றவற்றை கையில் ஏந்தியவாறு ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக … Read more

கண்ணீர் விட்டு கதறிய மேகன் மார்க்கல்: வெளியானது நெட்பிக்ஸ் ஆவணப்படத்தின் டீசர்!

பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பாக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் புதிய ஆவணப்படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. நெட்பிக்ஸ் ஆவணப்படம் பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் கொண்ட டீசரில் இளவரசர் ஹரி “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: குரோஷியா ,பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு F-வில் உள்ள குரோஷியா  – பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குரோஷியா அணியை 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.