பிரித்தானியாவில் வேலை செய்யும் ஆசையுடன் வந்த வெளிநாட்டவர்: கிடைத்த ஏமாற்றம்!

பிரித்தானியாவில் வேலை கிடைக்கும் என தெரிந்ததும், மகிழ்ச்சியுடன் புறப்பட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு பெரும் ஏமாற்றமே பலனாகக் கிடைத்தது. பழங்கள் பறிக்கும் வேலைக்காக வந்த வெளிநாட்டவர்  இந்தோனேசியாவிலிருந்து ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கிய Agung, புது வாழ்வு துவங்கிவிட்டதுபோல் உணர்ந்தார். சொந்த நாட்டில் வாழும் தாய் மற்றும் சகோதார சகோதரிகளுக்கு உதவுவதற்காக, ஆறு மாதங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். ஆனால், அவருக்கு ஒரு விடயம் தெரியாது… ஏற்கனவே துவங்கிவிட்ட சீஸன் பிரித்தானியாவில் பழம் … Read more

ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கேட்கக்கூடாது! ரேசன் கடைகளுக்கு உத்தரவு

சென்னை: ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கேட்கக்கூடாது என  ரேசன் கடைகளுக்கு உணவுபொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நேற்று,  ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க சொன்னால் மட்டும் போதும்- அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்ட நிலையில், இன்று ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கேட்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற பொங்கல் பண்டிகைக்காக இந்த முறை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வரும் … Read more

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வாவை வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றம் செய்துள்ளனர்.

சிறையில் தற்கொலை முயற்சி மனைவி சாவு; கைதி சீரியஸ்| Dinamalar

பாலியா உத்தர பிரதேச சிறையில், விஷம் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்டு, தம்பதி தற்கொலைக்கு முயற்சித்ததில் மனைவி உயிரிழந்தார்; கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பன்ஸ்சீஹ் பகுதியைச் சுராஜ், 25, தன் உறவினரை கொலை செய்த வழக்கில்,2021ல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது மனைவி நீலம், 23. சிறையிலிருக்கும் சுராஜுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லை. இதையடுத்து, கணவனை சந்திக்க நீலம் சிறைச்சாலை சென்றார். அங்கு இருவரும் சந்தித்த நிலையில் மனமுடைந்தனர். பின், … Read more

மைசூர்: சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி பலி; சிறுத்தையை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவா?

கர்நாடக மாநிலம், மைசூர் டி.நரசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த, பத்து நாள்களாக குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, நாய், ஆட்டுக்குட்டி உள்ளிட்ட உயிரினங்களை கொன்றது. இது குறித்து மக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு, டி.நரசிபுரம் அடுத்த கெப்பேஹண்டி கிராமத்தைச் சேர்ந்த அரசுக் கல்லுாரி இறுதியாண்டு மாணவி மேகனா (20), மாலை, 6:30 மணியளவில் தன் வீட்டின் பின்பக்கம் சென்றார். அப்போது, புதரில் மறைந்திருந்த … Read more

புடினுக்கு குடல் புற்றுநோய்? மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, ரஷ்ய ஜனாதிபதியின் உடல் நிலை குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகிவருகின்றன. புடினுக்கு புற்றுநோய் உக்ரைன் போர் துவங்கிய நாள் முதல், புடின் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வப்போது, தானாகவே புடினுடைய கால்கள் ஆடுகின்றன, முகம் வீங்கியுள்ளது என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குடல் புற்றுநோய் என தற்போது வெளியாகியுள்ள தகவல் இந்நிலையில், சமீபத்தில் புடின் படிகளில் இறங்கும்போது கீழே விழுந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.   புடின் குறித்த … Read more

கோவில் இணையதளங்கள் குறித்து உரிய வழிமுறைகள் பிறப்பிக்கப்படும்! மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை: கோவில்கள் பெயரில் போலியான இணையதளங்கள் தொடங்கப்பட்டு வசூல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், கோவில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிமுறைகள் பிறப்பிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் பிரபலமான  பல கோவிலின் பெயரில் போலி இணையதளங்களை கோவிலுக்கு சம்பந்தமில்லாத சிலர் வைத்து, வசூல் செய்துவருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,   சென்னை கபாலீஸ்வரர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் … Read more

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8-ம் தேதி தென்காசிக்கு பயணம்

தென்காசி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8-ம் தேதி தென்காசிக்கு செல்கிறார். தென்காசியில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் 2 திருநங்கையர் அரசு டாக்டர்களாக நியமனம்| Dinamalar

ஹைதராபாத், தெலுங்கானாவில் முதல் முறையாக இரண்டு திருநங்கையர், அரசு மருத்துவமனை டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராச்சி ரத்தோட். இவர் அடிலாபாதில்உள்ள மருத்துவக்கல்லுாரியில் 2015ல் மருத்துவ படிப்பை முடித்தார். கம்மம் பகுதியைச் சேர்ந்த ரூத் ஜான்பால், 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்தார். இருவரும் திருநங்கையர். பல்வேறு எதிர்ப்பு, தடைகள், அச்சுறுத்தல்கள், சவால், … Read more

சேலம்: வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் கலப்படம்… அதிரடி காட்டிய உணவுப்பாதுக்காப்பு துறை!

சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஒமலூர் பகுதிகளில் இயங்கிவரும் வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், காட்டூர் காமலாபுரம் எல்லைக்குட்பட்ட நான்கு வெல்லம் ஆலைகளான ஏழுமலை கரும்பாலை, தங்கதுரை கரும்பாலை, கிருஷ்ணன் கரும்பாலை, குணசேகரன் கரும்பாலையில் இருந்து வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ அளவுள்ள சுமார் 254 சர்க்கரை மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் `கலப்படம், போலி லேபிள்… … Read more