“பின்தொடர்றேன்னு தெரிஞ்சதும் ஓட ஆரம்பிச்சான்''- செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த காவலர் காளீஸ்வரி!

பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடிய வட மாநில இளைஞரை விரட்டிப் பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, அவருடைய உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள். தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், காளீஸ்வரிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காளீஸ்வரியிடம் பேசினோம்… “நேற்று முன்தினம் தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அது மாலை நேரம் என்பதால், கூட்டம் … Read more

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்… ஹரியின் நெட்ளிக்ஸ் தொடர் குறித்து டயானாவின் பட்லர் கருத்து

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் பட்டங்களை பறிக்கவேண்டும் என இளவரசி டயானாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். டயானாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் இளவரசி டயானாவுக்கு உணவு பரிமாறுதல் முதலான முக்கிய பணிகளை கவனித்துக்கொண்ட பட்லர் என்னும் பொறுப்பில் இருந்தவரான Paul Burrell (64) என்பவர், டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று கூறப்படுவதுண்டு. டயானாவே, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நபர் இந்த Paul Burrellதான் என்று கூறியதாகவும் ஒரு தகவல் … Read more

அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர்: உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கோஷம்!

சென்னை: அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.  

குளிர்கால கூட்டத்தொடர்; முதல் நாளில் ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாடல்: மக்களவை செயலகம்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்கி வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் வளாகத்தில் மத்திய ராணுவ மந்திரி மற்றும் மக்களவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் முறைப்படி இன்று கூடியது. இந்த கூட்டத்தில், அரசு சார்பில் நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற இணை மந்திரிகள் முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் … Read more

`பாரா ஒலிம்பிக் போட்டியில் வெல்வதுதான் கனவு' – சாதித்து வரும் மாற்றுத்திறன் பள்ளி மாணவி

விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஆர்.ஐ.சி.ஆர் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார் சுபஸ்ரீ. செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெற்றது. இதில், மாணவிகளுக்கான பிரிவில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் சுபஸ்ரீ முதலிடம் பிடித்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதோடு, நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார் தங்க பதக்கங்களுடன் மாணவி … Read more

தலையில் சுடப்பட்ட குண்டு வாயில் வழியே வெளியேறியும்…உயிர் பிழைத்தவர் கண்டு பிரமிக்கும் மருத்துவர்கள்

பிரேசில் நாட்டில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவரின் தலையில் சுடப்பட்ட குண்டு வாய் வழியாக வெளியேறியும் உயிர் பிழைத்து இருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலையில் சுடப்பட்ட குண்டு தெற்கு பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள மரியால்வா என்ற பகுதியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 24 வயது இளைஞன், தனது நண்பர்களுடன் மதுபான ஆலைக்கு வெளியே ஒரு விற்பனை இயந்திரத்தில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த நின்ற நபர் ஒருவரால் தலையில் சுடப்பட்டார். இதனை பார்த்த … Read more

சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் 30 குற்றச்செயல் வழிமுறை விளக்கபுத்தகத்தில் மேலும் 3 செயல்கள் சேர்ப்பு

சென்னை: சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் 30 குற்றச்செயல் வழிமுறை விளக்கபுத்தகத்தில் மேலும் 3 செயல்கள் சேர்க்கப்ட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி வாயிலாக பண மோசடி, காவல் அதிகாரிகள் போன்று மிரட்டி பணம் பறிக்கும் மோசடி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக பணம் டெபிட் ஆனதாக கூறி மோசடி ஆகியவை விழிப்புணர்வு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முத்துவும் 30 திருடனும் என்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை காவல்துறை நவம்பரில் வெளியிடப்பட்டிருந்தது.

மராட்டிய வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி; கர்நாடக பஸ்கள் மீது கருப்பு மை பூச்சு

புனே, கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சமீபத்தில் கர்நாடக – மராட்டிய எல்லை பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோல மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி சென்று, மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச உள்ளதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதனால் கடந்த சில நாட்களாக இருமாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் பெலகாவியில் … Read more

`பீர், ஒயின் குடிப்பதால் புற்றுநோய் ஆபத்து’ – புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பீர், ஒயின் உள்ளிட்ட பல வகையான மதுபானங்களால் புற்றுநோய் அபாயம் ஏற்படும் என்று, புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில மதுபானங்கள் அழகுக்குக் கைக்கொடுக்கும், ஆரோக்கியத்துக்கு நல்லது என சிலர் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. புற்றுநோய் ஆபத்துக்குக் காரணம், ஒயின், பீர் என எல்லா மதுபானங்களிலும் சேர்க்கப்படும் எத்தனால் எனும் ரசாயனம் என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை. மார்பகம், வாய், பெருங்குடல் உட்பட ஏழு வகை புற்றுநோய்கள், மதுபானத்துடன் தொடர்புடையவை. … Read more

ஆட்டநாயகன் விருதை அவருக்கு தான் கொடுப்பேன்! வெற்றிக்கு பின் பேசிய நெய்மர்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், தான் இந்த ஆட்டநாயகன் விருதை இன்னொரு வீரருக்கு வழங்க வேண்டும் என்றால் அதை ரபின்ஹா-வுக்கு வழங்கி இருப்பேன் என தெரிவித்துள்ளார். காலிறுதிக்கு முன்னேறிய பிரேசில் கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலக கோப்பை 2022-ல் திங்களன்று நடந்த சூப்பர் 16 ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றதன் மூலம், காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பிரேசில் அணிக்காக வினிசியஸ் … Read more