How To: டிரைவிங் லைசன்ஸில் திருத்தம் செய்வது எப்படி? | How to Make Correction In Driving License?

வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தின்போது கையில் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் முதன்மையானது ஓட்டுநர் உரிமம். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படுகிறது. அதில் செல்போன் எண் மாறியிருந்தால் அதனை எப்படி எளிதாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். * முதலில் உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், https://parivahan.gov.in என்ற இணையதள பக்கத்தை திறந்து கொள்ளவும். * அதன் முகப்புப் பக்கத்தில் drivers/learners license என்ற பகுதியை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் மற்றொரு … Read more

உலகக்கோப்பையில் காலியுறுத்திக்கு நுழைந்துவிட்டோம்! வெற்றியை கொண்டாடும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

பிரான்ஸ் அணி கத்தார் உலகக்கோப்பையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார். வெற்றி குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியின் பதிவு   கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் பிரான்ஸ் மற்றும் போலந்து நேற்று மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ், வரும் 11ஆம் திகதி நடக்கும் … Read more

6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வினர் மெரினாவில் உள்ள அவரது சமாதியில் மரியாதை செய்தனர். தொடர்ந்து காலை முதலே … Read more

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம்  வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாத தொகுப்பூதியம்  ரூ.4,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.6,000 உயர்த்தி ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவு பயிற்சி பெற மாணவர்கள் செலுத்தும் தொகை ரூ.700ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கணினி அறிவு பயிற்சி திட்டத்தின் கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் … Read more

ஜி 20 மாநாடு; பிரதமர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் துவங்கியது

புதுடில்லி: ஜி 20 மாநாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் இன்று(டிச.,05) டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக பொருளாதாரத்தில், முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, ‘ஜி – 20’ அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜி 20 நாடுகள்: இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், … Read more

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 58.68 சதவீத வாக்குகள் பதிவு

காந்தி நகர், நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. 182 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 93 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து சென்றனர். மாலை 3 மணி வரை 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், குஜராத் மாநில சட்டசபை … Read more

`கோயில் முடிவில் வருத்தம்!’-மலபார் தேவசம் போர்டால் திருமணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருநர் தம்பதி

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் திருநம்பி நிலன் கிருஷ்ணா (23). திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அத்விகா (23), திருநம்பி. நிலன் கிருஷ்ணாவும், அத்விகாவும் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ள பின்மார்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். பணியின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், பலரையும்போல திருமணம் செய்து சமூகத்தில் வாழ முடிவெடுத்தனர். இதற்காக கொல்லங்கோடு காச்சாங்குறிச்சி கோயிலில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். கோயிலில் திருமணம் செய்வதற்காக தேதி முன்பதிவு … Read more

’அதிமுக என்பது கட்சியே கிடையாது’! முன்னாள் அதிமுக இன்னாள் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு..,,

சென்னை: ’அதிமுக என்பது கட்சியே கிடையாது’ என  முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, பின்னர் திமுகவில் இணந்துரு, தற்போதுரு அமைச்சராக உள்ள   ராஜகண்ணப்பன் கூறினார். சிவகங்கை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற்றும் அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்ததுடன், சிறப்பாக விளையாடிய மாணவ, … Read more

குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும்: நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல்

அகமதாபாத்: குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மை பலம் பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். குஜராத்தில் பாஜக 117 – 140, காங்கிரஸ் 34 – 51, ஆம் ஆத்மி 6 – 3 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 125 – 130, காங்கிரஸ் 40 – … Read more

டெல்லியில் ஜி20 ஆலோசனை கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி, ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், … Read more