ரூ.478 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்| Dinamalar

ஆமதாபாத், குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், 478 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. குஜராத்தில், வதோதரா மாவட்டத்தின் சிந்துராட் கிராமத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில், நேற்று பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில், தொழிற்சாலையின் குடோனிலிருந்து 478 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மெப்ட்ரோன்’ எனப்படும் போதைப்பொருள் சிக்கியது. இங்கு, ரசாயனம் தயாரிப்பதாக கூறி இந்த போதைப்பொருளை தயாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படையினர், அங்கு பணியிலிருந்த … Read more

“கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்” – தலைவர் கொல்லப்பட்டத்தை அறிவித்த ஐஎஸ்ஐஎஸ்

ஈராக்கை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான ஆடியோ செய்தியில், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி “கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் எப்படி கொல்லப்பட்டார்? எப்போது கொல்லப்பட்டார்? என்பது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. அதே சமயம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி … Read more

லாலு பிரசாத் யாதவுக்கு 5-ந்தேதி சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!

பாட்னா: மாட்டுத்தீவன ஊழல் காரணமாக பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள  பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவுக்கு வரும் 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட உள்ளதாக அவரத மகனும் பீகார் மாநில துணைமுதல்வருமனா  தேஜஸ்வி யாதவ் தெரிவித்து உள்ளார். பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, … Read more

சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: சென்னையில் ஜனவரி 16, 17, 18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புத்தக கண்காட்சியில் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

சட்டசபை கமிட்டி கூட்டத்தில் முடிவு| Dinamalar

புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பளம் கடந்த 2010ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இதர படிகள் சில உயர்த்தப்பட்டாலும், சம்பளம் உயர்த்தவில்லை. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க சமீபத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் அசோக்பாபு தலைமையில் நடந்த இக்கூட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். கூட்டத்தில், கமிட்டியின் துணைத் தலைவர் நாஜிம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், ரமேஷ் … Read more

`பிரபலமடைவதன் மூலம்…' – 12 மணி நேர அமலாக்கத்துறை விசாரணை குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு நுவ்விலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான லைகர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியானது. அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்து, பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம், எதிர்பார்த்த … Read more

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி: 50ஆயிரத்தை இழந்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

சென்னை:  ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ர. 50ஆயிரத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்த நிலையில், தற்கொலை கொண்டுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  கடந்த 2020-ம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசர தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, ரூ.39,640 க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,640-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.4,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.80 அதிகரித்து ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதியில் ரயிலில் திடீர் தீ விபத்து| Dinamalar

திருப்பதி : திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த திருமலை விரைவு ரயில் பெட்டி ஒன்றில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை திருப்பதி ரயில் நிலையத்துக்கு, திருமலை விரைவு ரயில் வந்து சேர்ந்தது. இதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின், இந்த ரயிலின் எஸ் – ௬ பெட்டியின் கழிப்பறை மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது மள மளவென மற்ற … Read more

டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல்: `தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் மகளுக்கு தொடர்பு!’ – அமலாக்கப்பிரிவு

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டி இருக்கிறது. இதில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் இந்த ஊழல் தொடர்பாக ஐதராபாத் உட்பட நாடு முழுவதும் ரெய்டு நடத்தியுள்ளனர். டெல்லி துணை முதல்வர் சிசோடியாவும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு … Read more