400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அறநெறி பொலிஸ் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. மாஷா அமினி ஈரான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என மாஷா அமினி(22) என்ற இளம்பெண் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஈரானில் பெண்கள் கிளர்த்தெழுந்தனர். கொதித்தெழுந்த பெண்கள் நாடு முழுவதும் ஹிஜாப் அணிவதற்கு எதிராக … Read more

அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை: அமைச்சர் ரகுபதி

சென்னை: அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். எல்லா சட்ட மசோதாக்களுக்கும் உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

ஊட்டி: கோயில் அருகில் உலவும் சிறுத்தை; பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகருக்கு மிக அருகில் இருக்கிறது ஹெல்க்ஹில் வனப்பகுதி. இந்த வனத்தையொட்டியே குடியிருப்புகளும் உள்ளன. மேலும், சிறப்பு வாய்ந்த ஹெல்க்ஹில் முருகன் கோயிலும் இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். முருகன் கோயில் மும்பை: குடியிருப்புக்குள் நுழைந்து, சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்- ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை வனத்தையொட்டிய பகுதி என்பதால் கரடி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது உலவி … Read more

கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த நபர்: சில நிமிடங்களில் காத்திருந்த அதிர்ச்சி

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரார்த்தனை செய்த நபர் மத்திய பிரதேச மாநிலத்தில் மருந்தகக் கடை ஒன்றை நடத்தி வரும் ராஜேஷ் மெஹானி என்பவர் தீவிர சாய் பக்தர் ஆவார். இவர் கட்னியில் உள்ள கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றிருந்தார். அங்கு இருந்த சிலை முன் அமர்ந்து மெஹானி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். கண்ணை மூடி அமர்ந்திருந்த அவர் 15 நிமிடங்களுக்கு எழுந்திருக்கவில்லை. … Read more

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது: டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். போக்சோ வழக்குகளில் கைது நடவடிக்கை மற்றும் புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தை பதிய வேண்டும்.

உறவினர்களுடன் பயணிக்க முழு விமானத்தை புக் செய்த மணமக்கள்! – இணையத்தில் வீடியோ செம வைரல்

திருமணம் என்பது கொண்டாட்டமாக மாறியதிலிருந்து ஒவ்வொருவரும் அவர்களின் சக்திக்கேற்றவாறு அதை நினைவுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த மணமக்கள், தங்கள் திருமணத்துக்கு விமானம் மூலம் உறவினர்களை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்ரேயா ஷா எனும் டிஜிட்டல் கிரியேட்டர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய சகோதரி திருமணத்துக்காக ஸ்ரேயா விமானத்தில் பயணித்திருக்கிறார். அந்த விமானத்தில் ஸ்ரேயாவுடன் பயணித்தவர்கள் அனைவரையும், அவர் தன்னுடைய … Read more

மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்தது

மன்னார்குடி: மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. மன்னார்குடி அருகே, 2015ல் அதிமுக ஆட்சியில் ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்தது. கட்டி 7 ஆண்டுகளே ஆன நிலையில் கட்டிடம் இடிந்துள்ளது.

‛‛ குஜராத் மற்றும் ஹிமாச்சல்லில் மீண்டும் பாஜ., ஆட்சி: அனுராக் தாக்கூர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குஜராத் மற்றும் ஹிம்மாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‛‛ மீண்டும் பாஜ., ஆட்சி”: டில்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி மாநகராட்சி தேர்தல் மற்றும் குஜராத், ஹிம்மாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் ஆகிய 3 இடங்களிலும் பாஜ., வெற்றி பெறும். குஜராத் மற்றும் ஹிம்மாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி … Read more

“திமுக என்றாலே ஊழல்தான்!" – மதுரையில் டி.டி.வி.தினகரன் காட்டம்

“தி.மு.க என்றாலே ஊழல்தான் என்பது போலவே அதன் செயல்பாடு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்” என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். திருமண விழாவில் மதுரையில் நடந்த திண்டுக்கல் மாவட்ட அ.ம.மு.க மகளிரணி செயலாளர் ரஞ்சிதம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வருகிறது. போடாத ரோடுகளுக்குக்கூட பணம் பெறுகின்றனர். தி.மு.க என்றாலே ஊழல்தான் … Read more

புரட்சிக்கு வித்திட்ட ஐ.ஆர்.டி.ஏ.ஐ: காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும்!

காப்பீட்டுத் துறையில்இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் (IRDAI) கூட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களில் பல நீண்ட நாள் கோரிக்கைகள் ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் தற்போது அனுமதிக்கப்பட்ட மாறுதல்கள் காரணமாக நமது நாட்டில் 2047 ஆம் ஆண்டு அனைத்து இந்தியருக்குமான காப்பீடு என்ற இலக்கை நம்மால் அடைய முடியும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. மருத்துவக் காப்பீடு காப்பீடு மற்றும் முதலீடு… இரட்டைப் பலன் அளிக்கும் புதிய … Read more