கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, கடந்த 12ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்சில் இருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு ஜாக்பாட்..!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போதே கருப்புப் பணத்தை ஒழிப்பதாக அறிவித்துத் தான் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார். இதைத் தொடர்ந்த சிவிஸ் வங்கியில் இருந்து இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்களை வாங்கி விசாரணை செய்து வந்த நிலையில், உள்நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இந்தப் பணமதிப்பிழப்பு பெரும் தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால் தற்போது … Read more

“நான் ஒன்றும் குற்றவாளியல்ல… சிங்கப்பூர் உச்சிமாநாட்டுக்கு செல்ல ஏன் தடை?" – கெஜ்ரிவால் கேள்வி

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசால், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் `டெல்லி மாடல்’, பல மாநில முதல்வர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஒருபடி சிறப்பிக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதத்தில் சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங், சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக கெஜ்ரிவால், உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிவேண்டி, பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் … Read more

பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற விரும்புவோருக்கு சிக்கலை ஏற்படுத்தவிருக்கும் ஒரு திட்டம்…

பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற விரும்புவோருக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், குடியிருப்பு அனுமதி அட்டை பெற விரும்புவோருக்கு மொழித்தேர்வைக் கட்டாயமாக்கும் திட்டம் ஒன்று உள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடியிருப்பு அனுமதி அட்டை பெற எந்த மட்டத்தில் மொழித்திறன் தேவைப்படும் என்பது குறித்து அவர் விவரமாக குறிப்பிடவில்லை. ஒரே ஆறுதல் என்னவென்றால், இந்த திட்டம் இப்போதைக்கு பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ளது, … Read more

தனியார் பள்ளிகள் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், தனியார் பள்ளிகள் இன்றுமுதல் இயங்காது என நேற்று அறிவித்தது. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து,  தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் நேற்று … Read more

4 மணி நிலவரம்: கல்லணைக்கு 47,717 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது..!!

திருச்சி: கல்லணைக்கு 4 மணி நிலவரப்படி 47 ஆயிரத்து 717 கனஅடி காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரத்து 505 கனஅடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடியும், கல்லணை கால்வாயில் 2 ஆயிரத்து 804கன அடியும், கொள்ளிடத்தில் 28 ஆயிரம் 385 கன அடியும், கோவிலடி வாய்க்காலில் 15 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..!

தமிழ்நாட்டில் பல துறையைச் சேர்ந்த MSME நிறுவனங்கள் கொரோனா தொற்றுப் பாதிப்புக் காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக வர்த்தகத்தை இழந்து, நிறுவனம் அல்லது தொழிற்சாலையை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா-வால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை மீட்டு எடுக்கும் முயற்சியாகத் தமிழ்நாடு அரசு CARE என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் கோவிட் உதவி மற்றும் தொழில்முனைவோருக்கான நிவாரணம் (CARE) திட்டத்தை இரண்டு பரிவுகளுக்குக் கீழ் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு 50 கோடி … Read more

`புதிய உணவுகளால் நாவுக்கு சுவை; பாரம்பரிய உணவுகளால் உடலுக்கு வலு!' – அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில், உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு மிக்க உணவு வகைகள் சமைத்து கண்காட்சி நடத்தப்பட்டது. தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரட்சி மேயர் மகேஷ் பேசுகையில், “குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க உணவுகளாக நேந்திரம் சிப்ஸ் மற்றும் மட்டிப்பழத்தைச் சொல்லுவார்கள். மட்டிப்பழத்தை ஓர் அறையில் வைத்தால் வீடு முழுவதும் அதன் வசனை வீசும். உணவில் எப்படி கலப்படம் நடக்கிறது என்பதை … Read more

இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த பட்லர்! மின்னல் வேகத்தில் பறந்து கேட்ச் பிடித்த ஜடேஜா வீடியோ

மான்செஸ்டரில் நடந்த ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த பட்லரின் விக்கெட்டை கேட்ச் பிடித்த ஜடேஜாவின் வீடியோ வைரலாகியுள்ளது. ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் பட்லர், நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசினார். அவர் நிலைத்து நின்று ஆடியிருந்தால் இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களை கடந்திருக்கும். ஆனால் அவரது ஆட்டத்திற்கு ரவீந்திர ஜடேஜா … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல்….

டெல்லி:  குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி,  தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள் முன்னிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். … Read more