விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

சென்னை: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்க கூடாது. பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது … Read more

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எய்ம்ஸ் குழு அறிக்கை

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று  ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எய்ம்ஸ் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக ஆறுகசாமி விசாரணை ஆணையத்திடம் எய்ம்ஸ் குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அதற்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர் என எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனி-வை பந்தாடும் விளாடிமிர் புதின்.. ரஷ்யா திடீர் அறிவிப்பு..!

ரஷ்யாவின் அரசு நடத்தும் எரிசக்தி நிறுவனமான Gazprom, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 2 க்கு இடையில் மூன்று நாட்களுக்கு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகம் செய்யும் Nord Stream 1 பைப்லைனை மூடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. China, Russia-வில் Population அதிகரிக்க திட்டம் | Top 5 World News Nord Stream 1 பைப்லைனுக்குத் திட்டமிடப்படாத பராமரிப்புத் தேவைப்படுவதாக அறிவித்து Gazprom 3 நாட்களுக்கு … Read more

"முன்பே வாய்ப்பு ​கிடைத்திருந்தால் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்திருப்பார் இபிஎஸ்!" – கோவை செல்வராஜ்

​அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வ​ம் ​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி​ தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்கள் 100​ ​பே​​ருடன் வந்து ​அவரைச் ​சந்தித்தார். பண்ணைவீட்டில் சந்திப்பு இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜனநாயக ரீதியில் சுமார் 50​ ​ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுக-வை நான்கரை ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்து விட்டு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்ற நினைக்கிறார். கட்சியின் … Read more

தலையில் காயம்; ரத்தம் நிற்காத காரணத்தால் ஆணுறை வைத்து கட்டுப்போட்ட மருத்துவமனை ஊழியர்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் போர்சா சமூக சுகாதார மையத்தில் தலையில் காயமடைந்த வயதான பெண் ஒருவருக்கு சுகாதார ஊழியர்கள் தலையில் ரத்தம் நிற்கவில்லை என்பதால் ஆணுறையுன் கவரை காயம்பட்ட இடத்தில் வைத்து கட்டு போட்டுள்ளனர். சில நாட்கள் கழித்து அந்த கட்டை மாற்றுவதற்கு மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு வந்த பணியில் இருந்த மருத்துவர் ஏற்கனவே தலையில் … Read more

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 162 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. ஹராரேயில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் எடுத்தது.  

பயமுறுத்தும் சீனா.. மனிதர்களுக்கு மட்டும் அல்ல மீன்-களுக்குக் கொரோனா டெஸ்ட்..!

நவம்பர் 2020 முதல் கோவிட்-19 தொற்று சீனாவை தாண்டி உலக நாடுகளில் வேகமாகப் பரவத் துவங்கிய போது உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்தத் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவைப் உண்டாக்கியது என்றால் மிகையில்லை, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பேரழிவை யாரும் பார்த்து இல்லை. கொரோனா தொற்று உலகளவில் முழுமையாக நீக்கப்படாவிட்டாலும் தடுப்பூசிகள் மற்றும் சரியான கவனிப்பு மூலம் பெரிய அளவிலான பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் மனிதர்களைத் தாண்டி மீன், இறால் மற்றும் நண்டு … Read more

`அதிர்ஷ்டம் இல்லாதவ’ – உறவுகளின் பேச்சால் தவிடுபொடியாகும் தன்னம்பிக்கை, எப்படி மீட்பேன் என்னை?

எங்கள் வீடு 20 வருடங்களுக்கு முன் மிகவும் பணக்கார குடும்பம். அப்பா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தொழில் செய்து முன்னேறியவர். அக்கா, நான் என்று இரண்டு பெண் பிள்ளைகள். திருமணமாகி ஒரு வருடத்தில் அக்கா பிறக்க, அதை தொடர்ந்த வருடங்களில் அப்பாவுக்கு தொழிலில் புலிப்பாய்ச்சல். Happy Family(Representational image) அக்கா பிறந்து 10 வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். மகனை எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் ஒரு மகள் பிறந்ததிலேயே, என் குடும்பத்துக்கு என் மீதான அன்பில் பாரபட்சம் … Read more

தமிழ்நாட்டில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 94 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 94, செங்கல்பட்டில் 49, திருவள்ளூரில் 19 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 81, திருநெல்வேலி 7, தூத்துக்குடி 6, சேலம் 36, கன்னியாகுமரி 19, திருச்சி 20, விழுப்புரம் 13, ஈரோடு 43, ராணிப்பேட்டை 21, தென்காசி 3, மதுரை 12, திருவண்ணாமலை 10, விருதுநகர் 7, கடலூர் 13, தஞ்சாவூர் 12, திருப்பூர் 22, … Read more

செப்டம்பர் 3ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்

சென்னை: செப்டம்பர் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.