அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழப்பு

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமான பணி  நடைபெற்ற கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லிப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் பாஜக கலவரம்.. யோகி மாடலில் “புல்டோசர்” அனுப்பலாமா? பாண்டை பிடித்த திரிணாமூல் எம்பி

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: பேரணியின்போது பொதுசொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினரின் வீடுகளை இடிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்போல் புல்டோசர்களை அனுப்பி வைக்கட்டுமா என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில … Read more

சித்து மீது முட்டை வீசிய விவகாரம்; சட்டசபையில் கடும் வாக்குவாதம்| Dinamalar

பெங்களூரு : மடிகேரியில் சித்தராமையா கார் மீது, பா.ஜ., உறுப்பினர்கள் முட்டை வீசிய சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் நேற்று காரசார வாதம் நடந்தது.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:காங்., — சித்தராமையா: எதிர்க்கட்சி தலைவரின் கார் மீது, முட்டை வீசும்படி செய்த பா.ஜ., தலைவர்கள் வீரரா, சூரரா. மழை சேத பகுதிகளை பார்வையிட, குடகு மாவட்டத்துக்கு சென்றேன். அப்போது பா.ஜ., தொண்டர்கள், இரண்டு இடங்களில் என் கார் மீது முட்டை வீசினர்.முட்டை வீசிய பின், பின்னாலிருந்து கல் வீச்சு … Read more

இரவிலும் இனி ஹோம் டெலிவரி.. சென்னை, பெங்களுருக்கு வரும் புதிய சேவை..!

இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல புதிய சேவைகளைக் குவிக் காமர்ஸ் பிரிவில் இருக்கும் நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் NIGHT LIFE குறித்த விவாதம் தற்போது பல மாநிலங்களில் அதிகரித்துள்ளதால் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவில் முதல் நிறுவனமாக ஸ்விக்கி தனது இன்ஸ்டாமார்ட் சேவையின் டெலிவரி நேரத்தை விடியகாலை வரை நீட்டித்துள்ளது. இது முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படும் நிலையில் விரைவில் பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய … Read more

பர்கரில் கிடந்த கையுறை… வாடிக்கையாளர் அதிர்ச்சி; வைரலாகும் வீடியோ!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த இளைஞர் டேவிட். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சமீபத்தில், ஆரோவில் அருகேயுள்ள பிரபல தனியார் உணவுக்கடை ஒன்றிற்கு நண்பருடன் சென்று பர்கர் வாங்கியுள்ளார். அதில் பிளாஸ்டிக் பொருள் கிடப்பதை கண்டு அதிர்ந்தவர், அதை சோதித்துப் பார்த்தபோது, ஊழியர்கள் பயன்படுத்தும் கையுறை அது என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து உணவுக்கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியவர், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதற்காக, தனியார் உணவுக்கடை … Read more

வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க! ஈசியா உடல் எடை குறையுமாம்

 பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது. இந்த பெருஞ்சீரக விதைகளின் பயன்கள் ஏராளம். குறிப்பாக இந்த பெருஞ்சீரகமானது சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெருஞ்சீரக விதைகளில் நிறைய தாதுக்கள் உள்ளன. இவற்றை ஜூஸ் செய்வது குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அது எப்படி என்பதை பார்ப்போம்.  ஜூஸ் எப்படி செய்வது? பெருஞ்சீரகத்தை ஒரே இரவில் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் காலையில் … Read more

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார். செப்டம்பர் 15ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 127 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை  மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் … Read more

கோவை காரமடையில் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பினர் 6 பேர் கைது

கோவை: கோவை காரமடையில் பெரியார் பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையின் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிருக்கு பயந்து ஓடிய போலீஸ்.. கற்கள்,கட்டையால் காக்கிகளை தாக்கிய காவிகள்! கொல்கத்தாவில் பாஜக கலவரம்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பாஜகவினர் கற்கள், கட்டைகளால் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, … Read more

ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கப்போரா? ஆனந்த் மஹிந்திராவின் ட்விட் வைரல்

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பல சுவராசியமான கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இளம் திறமையாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்வதில் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சில சுவாரசியமான அதே நேரத்தில் சில நகைச்சுவையான வீடியோக்களையும் பதிவு செய்து வரும் நிலையில் திருமண மண்டபத்தில் நடந்த சண்டை ஒன்றின் வீடியோவை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். … Read more