தாமதமாக மழை விடுமுறை அறிவிப்பு… கலெக்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தினமும் ரெட் அலர்ட், ஆரெஞ்ச், அலர்ட், மஞ்சள் அலர்ட் என காலநிலைக்கேற்ப மாவட்டங்களுக்கு தினமும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு வருகிறது. மழையின் தன்மையைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு வருகிறது. நேற்று கேரளா மாநிலத்தில் ஆலப்புழ, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று முன் தினம் இரவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், நேற்று காலை 8.25 … Read more

அமெரிக்க தலைநகரில் பரபரப்பு: வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த பகீர் சம்பவம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியதில் முக்கியமான 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட தீயணைப்பு மற்றும் EMS துறையின் அறிக்கையின்படி, வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்ள லாஃபாயெட் பூங்காவில் காயமடைந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் நால்வரும் தற்போது உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Image: DC Fire and … Read more

மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மோடி வேண்டுகோள்

டில்லி இந்திய மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்  கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள தரம்பூரில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.  இவற்றைப் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.   அவற்றில் தரம்பூர் ராஜ் சந்திரா மருத்துவமனை திறப்பு விழா, மற்றும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும். பிரதமர் மோடி தனது உரையில், “இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை யொட்டி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக … Read more

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக குறைந்தது

தருமபுரி: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 லட்சம் கனஅடி இருந்து 2 லட்சம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கலில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

2.5 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை… இந்த மாநிலம் தான் டாப்!

படித்து முடித்தவுடன் வெளிநாடு சென்றால் லட்சத்திலும் கோடியிலும் சம்பாதிக்கலாம் என்ற கனவு பல இளைஞர்கள் மத்தியில் உள்ளது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. 6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! வெளிநாடு சென்றவர்கள் … Read more

கொள்ளிடம்: ஆர்ப்பரிக்கும் வெள்ளம்; மீட்புப் பணியில் 400 இளைஞர்கள் – அரியலூர் ஆட்சியர் நம்பிக்கை

“கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் உபரி நீரால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வெள்ளம் பாதித்தால் மக்களைக் காப்பற்ற 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அதே போல் உணவுப் பொருள்கள் இருப்பிட வசதி என அனைத்தும் தயாராக உள்ளது” என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அரியலூர் அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில். “கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் வந்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என 12 பகுதிகள் கண்டறியப்பட்டுத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அப்பகுதியில் … Read more

முல்லைப்பெரியாறு அணை திறப்பு : தமிழக அரசுக்குக் கேரளா கடிதம்

இடுக்கி முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு குறித்து கேரள அமைச்சர் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.   இந்த அணை தேனி,  மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குப் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.   தற்போதைய கன மழை காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் … Read more

ஆக-05: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்திய சாலைகளில் எத்தனை கோடி வாகனங்கள்? அதில் எலக்ட்ரிக் வாகனங்கள் எவ்வளவு?

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது என்பதும் அதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளில் கூட இருசக்கர வாகனங்களை பார்க்க முடிகிறது. வசதியானவர்களின் வீட்டில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் இந்தியாவில் மொத்தம் எத்தனை வாகனங்கள் இயங்கி வருகின்றன, அதில் எவ்வளவு எலக்ட்ரிக் வாகனங்கள் … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஆகஸ்ட் 5 முதல் 11 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link