மழையின் அளவு படிப்படியாக குறையும் 3 மாவட்டத்திற்கு மட்டும் மஞ்சள் எச்சரிக்கை| Dinamalar

பெங்களூரு : ‘கர்நாடகாவின் கடலோரம், மலைப்பகுதி மாவட்டங்களை தவிர, மற்ற இடங்களில் மழையின் அளவு, படிப்படியாக குறையும்’ என வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில், ‘மஞ்சள் எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், மழை நீடிக்கிறது. ஆறுகள், அணைகள், ஏரிகளில் நீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன.பெலகாவி நகர் உட்பட மாவட்டம் முழுதும் கனமழை பெய்கிறது. கிருஷ்ணா ஆறு, துணை ஆறுகள், மல்லப்பிரபா, ஹிரண்யகேசி, மார்கண்டேயா … Read more

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

மும்பை பங்குச்சந்தை தடுமாறினாலும் தொடர் வளர்ச்சி பாதையில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியான அமெரிக்கா பணவீக்க தரவுகள் மும்பை பங்குச்சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் கணிப்புகளை விடவும் அதிகமான பணவீக்க அளவீடுகளைப் பதிவு செய்த காரணத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகத்தில் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. பாபா … Read more

மீண்டும் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள்… மின் கட்டண உயர்வு பிரச்னையை திசை திருப்பவா?!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதனைக் கண்டித்து வேலுமணி வீட்டின் முன் திரண்ட 7 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த ரெய்டு தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மின்கட்டண உயர்வால் அரசின்மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் திசை திருப்பும் முயற்சி இது. இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலைக் கண்டித்து, … Read more

மனைவி ஆசியுடன் திருநங்கையை இரண்டாவது திருமணம் செய்த இளைஞர்! புகைப்படங்கள்

திருமணமான இளைஞர் ஒருவர் தனது மனைவியின் சம்மதம் மற்றும் ஆசியுடன் திருநங்கையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வினோத சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள துர்குடி கிராமத்தை சேர்ந்தவர் பகிரா நைல் (30). இவருக்கும் குணி என்ற பெண்ணிற்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில காலமாக பகிராவுக்கு, சங்கீதா என்ற திருநங்கையுடன் காதல் ஏற்பட்டது. இதை பகிராவின் மனைவி … Read more

ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்!

அகமதாபாத்: உலக நாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வருப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ. 200 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டு படகு ஒன்று நேற்று இரவு  குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு  கடலோர காவல்துறையினரால் விரட்டி பிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வகுஜராத் … Read more

நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

13 வயது சிறுமிக்கு நள்ளிரவில் பிறந்த குழந்தை! பதறி போன பெற்றோர்! 76 வயதில் இப்படி ஒரு கொடூர வேலையா?

Tamilnadu oi-Rajkumar R ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே 13 வயது சிறுமியை 76 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தற்போது நீதிமன்றம் 76 வயது முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக … Read more

இந்தியாவில் புதிதாக 5,108 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,108 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,108 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,10,057 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 5,675 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,36,092 ஆனது. தற்போது 45,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 19 பேர் மரணமடைந்ததால், … Read more

இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்குவது எப்படி?

இந்தியாவில் பலரது கனவு தனது சொந்த உழைப்பில் ஒரு வீடு வாங்க என்பதாக இருக்கும். ஆனால் அதில் உள்ள சிக்கல்கள் பலரை சோர்வடையச் செய்துவிடும். முதல் முறையாக வாங்குபவர்களுக்கு. இடத்தை இறுதி செய்வது முதல் பட்ஜெட்டை நிர்வகித்தல் மற்றும் பிற சட்டப்பூர்வங்களை நிர்வகிப்பது வரை, கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நீங்களும் உங்கள் கனவின் வீட்டைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். வீடு வாங்கும் போது நீங்கள் … Read more

பார்வையை இழக்கப் போகும் குழந்தைகள்; உலகை சுற்றிக் காட்ட முடிவெடுத்த பெற்றோர்!

நம்மில் பலர் வெவ்வேறு காரணங்களுக்காக உலகைச் சுற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணியிருப்போம். ஆனால் கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் மூன்று குழந்தைகள் பார்வையை இழக்கும் முன்பு அவர்களுக்கு உலகை சுற்றிக் காட்ட வேண்டும் என்று எண்ணி பயணத்தை மேற்கொண்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்திருக்கிறது. கனடாவைச் சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர், எடித் லேமே என்ற தம்பதிக்கு நான்கு குழந்தைகள், அதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணு … Read more