கள்ளக்குறிச்சி பள்ளி உரிமையாளர் அறையில் கிடந்த ஆணுறைகள்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் உரிமையாளர் அறையில் ஆணுகளை இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் திகதி பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து … Read more

திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது! காணொளி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது என தமிழ்நாடு திருநாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் ஜூலை 18ந்தேதி தமிழ்நாடு நாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகஅரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு நாள்’ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது,  தமிழ்நாடு நாள் விழாவை … Read more

கனியாமூர் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.

ஜனநாயகத்தை காப்பாற்ற என்னை தேர்ந்தெடுப்பர்: யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் ரகசிய ஓட்டெடுப்பு என்பதால், உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற தன்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) நடைபெறுகிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில், திரிணமுல் காங்கிரஸ் … Read more

ஓடிடி படங்களுக்கு கடன்… சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அசத்தல் ஐடியா

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் வித்தியாசமான முறையில் முதலீடுகள் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நல்ல லாபத்துடன் இயங்கும் வழியை தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஓடிடி படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பளம் குறைப்பு, இலவச உணவு கட்.. … Read more

வாசகர்களுக்கு வணக்கம் : இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா?

நம் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் ‘இலவசங்கள்’ குறித்த விவாதம், தற்போது தீவிரமடைந்திருக்கிறது. ‘இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிடும்’ என்ற கருத்தை சமீபகாலமாக மத்திய அரசு ஒலித்துவருகிறது. உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இலவசங்களுக்கு எதிரான கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர், ‘ஓட்டுகளைப் பெறுவதற்காக இலவசப் பொருட்களை வழங்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக, மத்திய அரசில் முக்கியப் பதவிகளை வகிக்கும் … Read more

கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான வன்புணர்வு கொலைமிரட்டல்கள்… வீடு திரும்ப அச்சம்: பின்னணி

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணான லீனா மணிமேகலை, தனக்கு ஆயிரக்கணக்கான வன்புணர்வு கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார். கனடாவில் வாழ்ந்து வரும், யார்க் பல்கலை மாணவியும் சுயாதீன திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, தன உருவாக்கியுள்ள, காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டரில், காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக கடும் சர்ச்சை எழுந்தது. Super thrilled to share the … Read more

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 13வயது சிறுமியின் கருவை கலைக்கலாம்! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வாரங்கள் 3 நாள்கள் கடந்த கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 13வயது சிறுமி ஒருவர் காமுகரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனால், அந்த சிறுமி, கருவுற்றார். அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை  நீதிபதி அப்துல் விசாரித்து வருகிறார். வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட … Read more

கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை: நிதியமைச்சர் தகவல்

டெல்லி: பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை ஆர்பிஐ நிலைப்பாடு பற்றிய திருமாவளவன் கெலவ்க்கு நிதியமைச்சர் பதிலளித்தார். கிரிப்டோ கரன்சிகளுக்கு தடைவிதிக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்பிஐ பரிந்துரைத்தது. 

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: 12 பேர் பலி| Dinamalar

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்ற பேருந்து, கல்காட் சஞ்சய் சேது பாலத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். போபால்: மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்ற பேருந்து, கல்காட் சஞ்சய் சேது பாலத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை … Read more