“மின் தடை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!" – அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பழைய அரசு மருத்துவக் கல்லூரி வாளகத்தை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, நேரில் ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் மின்வெட்டு குறித்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை அளித்து வருகிறார். அவர் பரப்பும் பொய் பிரசாரம் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more