மார்ச் காலாண்டில் அசத்திய ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பின்செர்வ்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் காலாண்டில் அதன் நிகரலாபம் 54% அதிகரித்து, 4118 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2677 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது, வட்டி வருவாய் மற்றும் வட்டி செலவினத்துக்கு இடையேயான விகிதம், கடந்த ஆண்டினை காட்டிலும் 16.7 சதவீதம் அதிகரித்து, 8819 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சி இதே இதன் … Read more

“அஸ்ஸாமைத் தொடர்ந்து நாகாலாந்து, மணிப்பூரிலும் ஏ.எப்.எஸ்.பி.ஏ-வை நீக்க மத்திய செயல்படுகிறது" – மோடி

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஏ.எப்.எஸ்.பி.ஏ எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தன. 1958-ல் இந்த சட்டமானது அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் மாநிலங்களில் செயல்படும் ராணுவங்களுக்கு, சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் ஏதும் இல்லாமல் கைது செய்தல், விசாரணை நடத்துதல், சுட்டுத்தள்ளுதல் போன்ற பல சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இந்த நிலையில், அஸ்ஸாமில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, … Read more

உக்ரைன் மக்களுக்காக ஆப்கான் அகதிகளை வெளியேற்றும் ஜேர்மனி! எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு

உக்ரைனிய அகதிகளுக்கு இடமளிக்க தற்காலிக அரசு வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களை ஜேர்மனி மாற்றியுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 24 அன்று ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து 160,000 உக்ரேனிய அகதிகளை ஜேர்மனி அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே விசா இல்லாத அணுகல் மற்றும் ஜேர்மன்-போலந்து எல்லையில் சோதனைகள் இல்லாததால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், உக்ரேனிய அகதிகளை தங்கவைப்பதற்காக தற்காலிக அரசு வீடுகளில் இருந்து … Read more

28/04/2022: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கு தொற்று உறுதி யாகி உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் இன்று 20,014 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 … Read more

ஐபிஎல் 2022- கொல்கத்தா அணியை 146 ரன்களில் கட்டுப்படுத்தியது டெல்லி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் 23 ரன்கள் சேர்த்தார். மற்ற … Read more

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையத்தில் 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து பெங்களூருவை சேர்ந்த மத்திய புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

புலி வாலை பிடித்த எலான் மஸ்க்.. விட்டா அவ்வளவு தான் ரூ.7600 கோடி ஸ்வாகா..!

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் பெரும் போராட்டத்திற்கும் பின்பு கைப்பற்றிய நிலையில், டிவிட்டர் – எலான் மஸ்க் மத்தியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் முக்கியமான கண்டிஷன் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் எலான் மஸ்க்-ம் சரி, டிவிட்டர் நிறுவனமும் சரி எந்தக் காரணத்திற்காகவும் பின் வாங்க முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது. எலான் மஸ்க் எலான் மஸ்க்-யிடம் தற்போது வெறும் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகை மட்டுமே உள்ளது. ஆனால் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற வேண்டும் என்றால் … Read more

`உள்ளூர் நகராட்சி அமைப்புகளைக் கலைத்து உக்ரைனை சரணடையவைப்பதே ரஷ்யாவின் திட்டம்'-அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் அக்கிரமிப்புப் போரானது இன்னும் முடிவடையாமல், மூன்றாவது மாதத்தையும் தொட்டுவிட்டது. போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இரு நாட்டு தரப்பினரும் பலமுறை பேச்சுவார்த்தை மேற்கொண்டும் இதுவரை போரை நிறுத்தும் அறிகுறியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், இரு தினங்களுக்கு முன்பு ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்த ரஷ்ய அதிபர் புதின், `உக்ரைனில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தாலும், பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடுகளை எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’ எனக் … Read more

கால் ஆணியால் அவஸ்தையை ? இதனை எளியமுறையில் தீர்க்க இதோ சில எளிய வழிகள்

பொதுவாக காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் ,அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி பலருக்கு வருகிறது. இந்தக்கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் ஆறாத அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பும் உண்டு. எனவே இவற்றை எளியமுறையில் போக்க இதோ சில எளிய முறைகள். கால் ஆணி ஏற்பட்ட இடங்களில் பூண்டை நசுக்கி அதன் சாறை தடவி வரவும். இரவுப் பொழுதில் காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் … Read more